Skip to main content

ராம்சுரேஷ் எழுதிய கரும்புனல்

சில நாட்களுக்கு முன் மனதைக் கலக்கும் நாவல் ஒன்றைப் படித்தேன்.  நிலக்கரி தோண்டுவதற்காக ஜார்கண்டில் (பீஹாரில்?) ஓரிடத்தில் அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்தும்போது எழும் சிக்கல்கள்  இதன் மையக்கரு. பல வருடங்களாக இது போன்ற தீவிரமான எதையும் படிக்காமல் பொழுதுபோக்குக் கதைகளே படித்திருக்கிறேன் என்று குற்ற உணர்வு தோன்றியது. அல்லது இது போன்ற கதைகள் தமிழில் வருவதில்லையா? அதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எவ்வாறு நடக்கிறார்கள், எளிய மக்களின் வாழ்வு எப்படி இதில்  திண்டாடுகிறது என்பதெல்லாம் மிகவும் சங்கடப்படுத்துகிறது. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த எரின் ப்ரோக்கொவிச் என்ற படம் பார்த்தால் ஒருவரை ஹீரோவாக்கும் முயற்சி தெரியும். இக்கதையில் ஆசிரியர் அது போல் செய்யாமல் எவ்வாறு எல்லோரது வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறார்.  இவர் விவரங்களை ஆசிரியராக அதிகம் எழுதாமல், கதைப் பாத்திரங்களின் உரையாடல்களிலேயே வருமாறு ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார். இது  அந்நூலை இன்னமும் விரிவாக எழுதாமல் விட்டாரோ என்று எண்ணவைத்தது. ஆனால் அப்படி எழுதியிருந்தால் என்ன இது வளவளவென்று எழுதியிருக்கிறாரென்று பாதியிலேயே புத்தகத்தை எடுத்து அலமாரியில் வைத்திருப்பேன். இந்த அளவு  என்னை பாதிக்கவிடாமல் ஜாக்கிரதையாய் விலகியிருந்திருப்பேன்.

  ஆசிரியர் அவர் இருப‌து ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வேலை செய்து கொண்டிருந்தபோது தான் கண்டவற்றை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்டது என்கிறார்.  ராம்சுரேஷ் எழுதிய கரும்புனல் என்ற நாவல் நிச்சயம் மனதை  வருடிவிடும் இதமான புத்தகம் இல்லை.  வம்சி புக்ஸ் நிறுவனத்தார் இதை வெளியிட்டிருக்கின்றனர்.



Comments

Sundar said…
இந்த கரும்புனல் நாவலைப்பற்றி இதற்கு முன் கேள்விப்படவில்லை. இப்போதைக்கு To Read பட்டியலில் போட்டு வைத்துக்கொள்கிறேன்.

புத்தகத்தைப் பற்றிய உங்கள் குறிப்புகளைப் படித்தபோது நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சுஜாதாவின் "பதவிக்காக" என்ற நாவலின் நினைவு வந்தது. 90களில் ஏதோ ஒரு பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்து, பின்னால் புத்தகமாக பிரசுரிக்கப்பட்ட நாவல் அது. போனவாரம் கலிபோர்னியாவில் எதேச்சையாக கையில் அகப்பட்டது. முன்னால் பார்த்ததில்லை என்பதால் படிக்க ஆரம்பித்தேன். 2005வாக்கில் வெளிவந்த புத்தகத்தின் முன்னுரையில் சுஜாதாவே சொல்லி இருப்பதுபோல், பெரிதாக கதைச்சம்பவங்களுக்காக சிரமப்படாமல், இந்திய மாநிலங்களில் பயிலப்படும் நாற்றமடிக்கும் அரசியல் தந்திரங்களைத்தான் தொடுத்து கதையாக்கியிருக்கிறார். இருபததைந்து வருடங்களுக்குமுன் அபூர்வமாக நடந்த குதிரைப் பேரங்களும், MLAக்களை resort விடுதிகளில் அடைக்கும் அவலங்களும் இப்போது மிகவும் மலிந்து விட்டதால், ஒரு வரி கூட மாற்றி எழுதத் தேவையின்றி கதை இன்றைய தமிழ்நாட்டுக்கு பொருந்துகிறது!

நம்மில் பெரும்பாலோருக்கு பரிச்சயமான சுஜாதாவின் நடை என்பதால், ராம்சுரேஷின் தாக்கம் இருக்காது என்றாலும், அதேபோல் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று வாசகர்களை வருத்தப்பட வைக்கும் நாவல்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்