Skip to main content

விடை 3512

இன்று காலை வெளியான வெடி:
கனியைச் சாறாக்காமல் பருகச் சொல்லும் தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்! (5)

இதற்கான விடை: பழங்குடி
 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (61):

1) 6:04:19 அம்பிகா
2) 6:04:49 லட்சுமி சங்கர்
3) 6:04:53 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:04:56 முத்துசுப்ரமண்யம்
5) 6:05:29 எஸ்.பார்த்தசாரதி
6) 6:06:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:06:06 ரவி சுப்ரமணியன்
8) 6:07:23 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:07:24 லதா
10) 6:09:21 மீ கண்ணன்
11) 6:11:49 வி ன் கிருஷ்ணன்
12) 6:12:51 ராஜா ரங்கராஜன்
13) 6:13:09 ராதா தேசிகன்
14) 6:14:45 வி ன் கிருஷ்ணன்
15) 6:14:58 தி. பொ. இராமநாதன்
16) 6:15:06 இரா.செகு
17) 6:15:37 ஶ்ரீவிநா
18) 6:16:15 மு.க.இராகவன்.
19) 6:17:41 ரவி சுந்தரம்
20) 6:18:07 சங்கரசுப்பிரமணியன்
21) 6:18:15 K.R.Santhanam
22) 6:20:55 பா நடராஜன்
23) 6:21:38 ஆர். பத்மா
24) 6:22:50 பிரசாத் வேணுகோபால்
25) 6:23:31 மாலதி
26) 6:25:57 பாலு மீ
27) 6:30:42 ரபணி பாலகிருஷ்ணன்
28) 6:34:40 நாதன் நா தோ
29) 6:35:05 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 6:35:22 கு.கனகசபாபதி, மும்பை
31) 6:36:20 மடிப்பாக்கம் தயானந்தன்
32) 6:36:50 மீனாக்ஷி கணபதி
33) 6:37:23 Suba Srinivasan
34) 6:37:39 கேசவன்
35) 6:39:53 KB
36) 6:41:54 கி மூ சுரேஷ்
37) 6:42:04 வானதி
38) 6:42:32 Siddhan Subramanian
39) 6:45:23 ஹரி பாலகிருஷ்ணன்
40) 6:49:06 ஸௌதாமினி
41) 6:50:34 உஷா
42) 6:54:42 மு க பாரதி
43) 6:56:38 மாதவ்
44) 7:00:20 புவனா சிவராமன்
45) 7:09:57 ராஜி பக்தா
46) 7:12:15 வி ஜயா
47) 7:22:36 மீனாக்ஷி
48) 7:44:56 பானுபாலு
49) 7:51:30 ஆர்.நாராயணன்.
50) 7:59:37 பினாத்தல்
51) 8:02:17 ஶ்ரீதரன்
52) 8:04:01 திருக்குமரன் தங்கராஜ்
53) 8:17:17 பானுமதி
54) 8:42:41 சதீஷ்பாலமுருகன்
55) 8:49:46 தேன்மொழி
56) 9:48:44 வி சீ சந்திரமௌலி
57) 9:52:47 கோவிந்தராஜன்
58) 10:52:19 பாலா
59) 11:18:54 Viji Durai
60) 19:07:30 ருக்மணி கோபாலன்
61) 19:34:27 வெங்கடேசன் மீ
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இலக்கணப் போலி*

இலக்கண நெறிக்குப் பொருந்தாததாக இருப்பினும் *தொன்றுதொட்டு* ஆன்றோர்கள் வழங்கி, இலக்கணமுடையது போல் ஏற்றுக்கொள்ளப்பட்டவை இலக்கணப் போலி ஆகும்.

இல்வாய் - வாயில், நகர்ப்புறம் - புறநகர், தசை - சதை, கோவில் - கோயில்.
இல்வாய், நகர்ப்புறம், தசை, கோவில் ஆகிய சொற்கள் இலக்கண முறைப்படி அமைந்தவை. ஆனால், அவை வாயில், புறநகர், சதை, கோயில் என மாற்றம் பெற்று அனைவராலும் பயன்படுத்தப் படுகின்றன.

*மரூஉ*
இலக்கணம் சிதைந்து வடிவம் மாறி வழங்கும் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றை மரூஉ என்கிறோம். *தொன்றுதொட்டு* இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று பயன்பட்டு வருவதாகும்.

சர்க்கரை - சக்கரை, பெயர் - பேர், தஞ்சாவூர் - தஞ்சை, கறிவேப்பிலை - கருவேப்பிலை
🌺🌺🌺🌺🌺🌺
_மொழிகளின் தாயாம்_ _முதிர்ந்தத் தமிழை_
_மொழியென் றுயிரில் முடிந்து – எழிலாகக்_
_கண்ணின் மணியெனக் காக்கின்றப் பற்றன்றோ_ _மண்ணின் தமிழரின் மாண்பு ._

_ஒப்பற்ற தெங்கள் உலகப் பொதுமறை_
_தப்பற்ற தந்தத் திருக்குறள். –அப்தம்_
_பலதாண்டி ஆன்றோர் புகழ்சூட மண்ணில்_
_உலவுவதோ ஒப்பற்ற மாண்பு_

_தொல்காப் பியம்மற்றும்_ _தொன்மை பொருந்திய_
_நல்காப் பியங்களும் *தொன்றுதொட்டு* – கல்வெட்டாய்_ _இன்றுவரைக் காத்திருக்கும் எந்தமிழர் தம்மாண்பு_
_ஒன்றல்ல நூறுண்டு காண் !_
(மெய்யன் நடராஜ்)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_கனியைச் சாறாக்காமல் பருகச் சொல்லும் தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்! (5)_

_கனியைச் சாறாக்காமல்_ = *பழம்*

_பருகச் சொல்லும்_
= *குடி*

_தொன்றுதொட்டு வாழும் இனத்தவர்_
= *பழம் + குடி*
= *பழங்குடி*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_*பழங்குடிகள்* என்போர் *தொன்றுதொட்டோ* பன்னெடுங்காலமாகவோ, ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள்._

இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தன்னிறைவோடு வாழ்பவர்கள்.
பழங்குடியின மக்கள் தங்களுக்கென்று பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த எதையும் வைத்துக்கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சியாக இருந்தாலும், தண்ணீராக இருந்தாலும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர்கள். பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன.
💐🙏🏼💐

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்