Skip to main content

விடை 3511

இன்றைய வெடி:
கனி உதிர்ந்து கடைசியில் சீர்கெட்ட நிலை (3)
இதற்கான விடை:
பழுது = பழு +  (உதிர்ந்) து  (கனி என்ற வினைச்சொல்லுக்கு ஈடாகப் பழு)

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (36):

1) 6:02:25 ரவி சுப்ரமணியன்
2) 6:04:10 ராஜா ரங்கராஜன்
3) 6:08:50 சங்கரசுப்பிரமணியன்
4) 6:11:29 புவனா சிவராமன்
5) 6:13:34 ரவி சுந்தரம்
6) 6:18:17 Sandhya
7) 6:26:07 லட்சுமி சங்கர்
8) 6:30:18 எஸ்.பார்த்தசாரதி
9) 6:34:57 பாலு மீ
10) 6:35:35 கோவிந்தராஜன்
11) 6:41:54 வி ன் கிருஷ்ணன்
12) 7:04:43 Siddhan Subramanian
13) 7:04:50 வி ஐயா
14) 7:07:41 முத்துசுப்ரமண்யம்
15) 7:09:24 சதீஷ்பாலமுருகன்
16) 7:14:15 ஹரி பாலகிருஷ்ணன்
17) 7:14:54 மீனாக்ஷி
18) 7:18:59 அம்பிகா
19) 7:27:32 மீனாக்ஷி கணபதி
20) 7:30:21 ஆர்.நாராயணன்.
21) 8:28:10 Suba Srinivasan
22) 8:35:39 கி மூ சுரேஷ்
23) 8:52:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
24) 9:20:40 பாலா
25) 9:47:20 மீ கண்ணன்
26) 11:39:32 மு க பாரதி
27) 11:52:13 பானுமதி
28) 12:40:21 KB
29) 12:42:13 ஶ்ரீதரன்
30) 12:49:40 தேன்மொழி
31) 13:25:37 மாலதி
32) 13:40:48 ஆர். பத்மா
33) 13:53:13 ராஜி ஹரிஹரன்
34) 17:33:05 மடிப்பாக்கம் தயானந்தன்
35) 18:35:12 மு.க.இராகவன்.
36) 19:17:03 ருக்மணி கோபாலன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_மதம் பிடித்த_ _யானைகளாய்_

_சமுதாய *சீர்கேடுகள்* ..._

_தேவை அங்குசக்_ _கவிஞர்கள்!__

கா.ந.கல்யாணசுந்தரம்
🌸🌸🌸🌸🌸🌸🌸
_பாம்பு என்று_ _ஒதுங்கவும் முடியாது; *பழுது* என்று மிதிக்கவும் முடியாது -_
🌸🌸🌸🌸🌸🌸🌸
தமிழில் அழகான, ஆழமான பொருள் பொதிந்த பழமொழிகள் உள. ஒருவன் செய்யும் காரியம் எவ்வளவுதான் நல்லதானாலும் இடமும் நேரமும் சூழ்நிலையும் சரியாக இல்லாவிடில் நல்ல பெயர் கிடைக்காது

பாம்புப் புற்றுக்கு அருகில் ஒரு கயிறு கிடந்தாலும் அதைப் பாம்பென்றே மக்கள் கருதுவர்; சஹவாச தோஷம்!

பனைமரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும், அதன் வெண்மை நிறமும், இடமும் அதைக் கள் என்று நினக்கச் செய்யும்.

_நிந்தையிலாத் தூயவரும் நிந்தையைச் சேரில் அவர்_

_நிந்தையது தம்மிடத்தே நிற்குமே – நிந்தைமிகு_

_தாலநிழல் கீழிருந்தான் றன்பால் அருந்திடினும்_

_பாலதனச் சொல்லுவரோ பார்._

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)
_பொருள்:-_
பனை மரத்தின் அடியின் உடகார்ந்துகொண்டு பசுவின் பாலைக் குடித்தாலும், பிறர் அதைப் பால் என்று சொல்லுவரோ? நீ அதனை நினைத்துப் பார். அதுபோல நல்ல பெயருடைய மேலோர், கெட்டவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடைய கெட்ட பெயர் இவர்களையும் ஒட்டிக்கொள்ளும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_கனி உதிர்ந்து கடைசியில் சீர்கெட்ட நிலை (3)_

_கனி_
= *பழு*
_(கனிந்து = பழுத்து)_

_உதிர்ந்து கடைசியில்_
= *து*

_சீர்கெட்ட நிலை_
= *பழு+து*
= *பழுது*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பழுதும் பாம்பும்*

இதே கருத்தை வலியுறுத்த இன்னொரு பாடலையும் பாடி வைத்தார் அந்தப் புலவர்!

_நல்லொழுக்கம் இல்லாரிடம் சேர்ந்த நல்லோர்க்கு_

_நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும் விடப்_

_பாம்பென உன்னாரோ *பழுதையே* ஆனாலும்_

_தூம்பு அமரும் புற்று அடுத்தாற் சொல்_

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

ஓட்டைகள் மிக்க புற்றுக்குப் பக்கத்தில் கயிறே கிடந்தாலும், அதை கொல்லக் கூடிய விஷப் பாம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா? நீயே சொல்! அது போல நல்ல ஒழுக்கம் இல்லாதவர்களுடன் சேர்ந்த நல்லோரையும் பழிச் சொல் வந்து சேரும்.

அழகான இரண்டு உவமைகள் மூலம் நமக்கு உயரிய கருத்துக்களைச் சொல்வர் தமிழ்ப் புலவர். இளம் வயதிலேயே இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தால், அவை நம் மனதில் பசு மரத்தாணி போலப் பதியும்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் புலவர்தம் பெருமை!
(London Swaminathan)
💐🙏🏼💐
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறைவதுண்டோ என்ற வரி ஞாபகம் வந்தது!
Chittanandam said…
நல்ல கட்டுமானம்.பாராட்டுகள்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்