Skip to main content

விடை 3520

மாதுளையின் உள்ளே முத்துகளாகப் பொதிந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் கொஞ்சம் மாற்றி முத்திலே மாதுளையைப் புதைத்தாலென்ன  என்று தோன்ற இன்றைய புதிர்.  ஆனால் அதற்குள் அந்த மாது நுழைய மாட்டேனென்று நின்று விட்டார்கள். அதனால் மங்கையைத் தள்ளிவைத்து "மாதுளை"யிலிருந்து "ளை" மட்டும்  முத்து (ஒரு மணி)  உள்ளே புதைத்ததில்  "முளைத்து" வந்தது  இன்றைய புதிர்:

வளர்ந்து ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி உட்கொள் (4) 


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (13):

1) 6:01:55 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:34 அம்பிகா
3) 7:43:48 மீ கண்ணன்
4) 8:16:48 மாலதி
5) 8:18:37 முத்துசுப்ரமண்யம்
6) 8:20:22 மீனாக்ஷி
7) 8:22:11 பாலு மீ
8) 8:31:42 ரவி சுப்ரமணியன்
9) 14:21:26 ரமணி பாலகிருஷ்ணன்
10) 14:22:26 மடிப்பாக்கம் தயானந்தன்
11) 14:46:16 கேசவன்
12) 18:32:25 சாந்தி நாராயணன்
13) 20:37:08 சதீஷ்பாலமுருகன்
**********************
Raghavan MK said…
[12/14, 21:06] M K Raghavan: முளைத்து என்பதும் வளர்ந்து என்பதும் ஒன்றா? முளைத்த பின் தானே வளர்ச்சி?
[12/14, 21:08] M K Raghavan: முளைத்தல் என்பது தாவரங்கள், பூஞ்சைகள் முறையே அவற்றின் வித்துக்களிலிருந்து வெளியேறி *வளரத் தொடங்கும்* செயலாகும்.
[12/14, 21:13] M K Raghavan: வளர்ந்து ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி உட்கொள் (4)
ஒரு மணியில்= முத்து (ல்)
ஒரு கனி = மாதுளை
மங்கையைத் தள்ளி வைத்து
=மாதுளை-மாது = ளை
உட்கொள்=
முத்து <--ளை
=
முளைத்து
Upto this okay
Is it equal to வளர்ந்து?
Chittanandam said…
மிக நல்ல புதிர்.
Vanchinathan said…
வளர்ச்சி = முளைத்தல் என்று கிடையாது; ஆனால் வளர்ச்சியின் பல படிகளில் முதற்படி முளைத்தல். முளைத்தல் என்பது தாவரங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். வளர்ச்சி இன்னமும் பொதுவாக. (கையெழுத்துப் பிரதியாக தொடங்கப்பட்ட அப்பத்திரிகை இன்று பல லட்சங்கள் விற்கும்படி வளர்ச்சியடைந்துள்ளது). புதிரில் இந்த அளவு நெருக்கம் உள்ல சொற்கள் பொருளாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
மாது மாதுளை முத்து எல்லாம் யோசிச்சேன்.

ஆனால் வளர்ந்து (ஒரு மணியில் மங்கையைத் தள்ளி வைத்து) ஒரு கனி உட்கொள் (4) ன்னு முட்டி மோதி கொழம்பிட்டேன்.

வளர்ந்து ஒரு மணியில் (மங்கையைத் தள்ளி வைத்து ஒரு கனி) உட்கொள் (4) ன்னு பிரிச்சிருக்கணும், அங்கதான் கோட்டை விட்டுட்டேன்.

கணித ஆசிரியர் வளைகுறிகள் () சேர்த்திருந்தால சுலபமாக இருந்திருக்கும். 🙂
Muthu said…
ஆங்கிலத்தில் "புதிர் அகராதிகள்" இருக்கின்றன. நேர்மறை, எதிர்மறைச் சொல் அகராதிகளும் (synonyms and antonyms/ thesaurus) இருக்கின்றன. அது போல் தமிழில் கிடையாது. அது போல் ஒன்று தயாரிக்க வேண்டும். தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் முயன்று செயல் பட வேண்டும். என் போன்ற, அதிகத் தமிழறிவும் இல்லாத, பன்னெடுங்காலம் வெளி நாட்டிலேயே "குப்பை கொட்டி" ஓய்ந்தோருக்கு, இத்தகைய அகரமுதலி/நிகண்டு இல்லாமை ஒர் பெரும் முட்டுக்கட்டை. மங்கை என்றால் பெண், கன்னி, சிறுமி என்றெல்லாம் நின்சிவு வந்தது; ஆனால் "மாது" தூன்றவில்லை; என்ன் வசம் உள்ள இரண்டு அச்சு அகரமுதலி மற்றும் 10-க்கு மேற்பட்ட வலைத்தள அகரமுதலிகளிலும் மங்கை = மாது என்று காணப் படவில்லை. வார்த்தை விளையாட்டுப் புதிர்களுக்காவே நிகண்டு தயாரித்தால் இக் குறைகளைப் போக்கலாம்.
Muthu said…
சுலபமாக ஆக்கினால் சுவை குன்றி விடக் கூடும்!
Something wrong. I don't want to argue.
Muthu said…
நானும் அதே. எந்த மணியிலும் மங்கையைக் காண முடியவில்லை (மங்கையரிடம்தான் மணிகள் இருக்கும்). பல மணித்துளிகளுக்குப் பின் ஒளி கிடைத்தது - விடை முளைத்தது.
கூகுள் ரொம்ப ஆபத்தானது. மங்கை பெண் க்கு மற்ற சொற்கள் தேடியபோது சில அசிங்க ஆபாச வலைத்தளங்கள் கண்ணில் பட்டன. ஆங்கிலத்தில் சொற்களை மட்டும் வைத்து ஆபாச தளங்களை வடிகட்டும் செயல் ஓரளவு செய்யக்கூடியது. அகரமுதலிகள் நிகண்டுகள் போன்றவை இல்லாததால் இது தமிழில் இயலாத காரியமாகவே தோன்றுகிறது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.