Skip to main content

தொண்டை நாட்டில் ஒரு சோதனை

தொண்டை நாட்டில் ஒரு சோதனை

வாஞ்சிநாதன்

இதுவும் ஒரு புதிர்தான். இந்த சங்க காலக் கதையைப் படித்து விட்டு 
கடைசியாகக் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு விடை  கண்டுபிடியுங்கள்.


தொண்டை நாட்டு மன்னர், இளவரசிக்கு நல்ல தமிழ் கற்பிக்க
அவைப்புலவரான பூதநாதனாரை அழைத்து தக்க ஆசிரியரைக் கண்டறிந்து சொல்லும்படி ஆணையிட்டார்.

பெருஞ்சாத்தன், அழிசி, ஆதிமந்தி,  எழினி,  நெடுமான் ஆகியோரில் ஒருவரை ஆசிரியராக நியமிக்க எண்ணி அவர்கள் ஐவரையும் பூதநாதனார் சோதித்துத் திறமையை ஆய்வதற்கு அழைத்தார்.  ஓர் அறையில் எல்லோரையும் காத்திருக்கச் சொல்லி  ஒவ்வொருவராக வரவைத்து   மூன்று நாழிகைக்கு மேல் பல கேள்விகள் கேட்டார். சோதனை முடிந்ததும் அவரவர் தங்காமல் அரசவையை விட்டு வெளியேறினர்.

எழினியிடம் பூதநாதனார் கேட்ட முதல் கேள்வி, "எழினியாரே,    அழிசி தடுமாறிவிட்ட ஈற்றடியையே உங்களுக்கும் அளிக்கிறேன்,  பொங்கிச் சுழன்ற புயல்  அதற்கு ஒரு வெண்பாவைச் சொல்லும் பார்ப்போம்."

அழிசியின் சோதனை முடிந்து வெளியே வரும்போது ஆதிமந்தி "எப்படிச் சோதித்தார் பூதநாதனார்?" என்று கேட்க   விடையேதுமளிக்காமல் அழிசி  விரைந்து வெளியே சென்றதில் எப்போதும் சிரித்தமுகமாக இருக்கும் ஆதிமந்தியார் முகம் கூம்பினார்.

ஆதிமந்தியின் வாட்டத்தை அறிந்த  நெடுமான் தன் சோதனை முடிந்ததும் போகிறவாக்கில் ஆதிமந்தியிடம் தன்னிடம் கொடுக்கப்பட்ட
 ஈற்றடி தித்தித் திருக்குமோ தீ   என்று  கூறி அவளை உற்சாகப்படுத்தி வெளியேறினார்.

பெருஞ்சாத்தனார் தம் சோதனை முடிந்து வெளியே வரும்போது மற்றவர்கள்  ஜோடி ஜோடியாக தமக்குள் பயிற்சியாகக் கேள்வி கேட்டுச் சோதனை  செய்துகொண்டிருப்பதைக் கண்டார்.

நெடுமான் தனக்களிக்கப்பட்ட ஈற்றடிக்கு விடையாக உரைத்த வெண்பாவைக் கேட்ட பூதநாதனார்,  "நெடுமானே அசத்திவீட்டீர்! எழினியை விட அழகான வெண்பாவை உரைத்துவிட்டீர், நான் நனி மகிழ்ந்தேன்" என்றார்.

*************

சரி.  உதிரிவெடி வாசகர்களுக்கு இதன் மூலம் நான் கேட்கும் புதிர்க்கேள்வி இதுதான்:
 பூதநாதனார் இந்த ஐவரையும் எந்த வரிசையில் சோதித்தார்?




Comments

Raji said…
This comment has been removed by the author.
Sundar said…
பெருஞ்சாத்தன், அழிசி, எழினி, நெடுமான், ஆதிமந்தி
Vanchinathan said…
முதல் விடையை அனுப்பிய சுந்தருக்கு நன்றி. இந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் இப்புதிருக்கு அவகாசம் கொடுக்கிறேன். அதன் பின் எவ்வாறு நீங்கள் விடையை அடைந்தீர்கள் என்பதற்கான இந்த வரிசைதான் சரி என்பதற்கான காரணத்தை ஹெர்க்யூல் பாய்ரோ போல் விளக்குங்கள்.
Ambika said…

1. பெருஞ்சாத்தன்
2. அழிசி
3. எழினி
4. நெடுமான்
5. ஆதிமந்தி
அழிசி
எழினி
ஆதிமந்தி
பெருஞ்சாத்தன்
நெடுமான்
Raji said…

நான் விடையை எழுதி பின்பு நீக்கி விட்டேன் சார்.,,,
Vanchinathan said…
விடையை அளிக்கலாம். ஆனால் உங்கள் விடை ஏன் சரியென்று நிரூபணம் பின்னர் அளிக்கவும்.
Partha said…
1. - மற்ற நால்வரை ஜோடி ஜோடியாகப் பார்த்த பெருஞ்சாத்தன்,
2. அழிசி தடுமாறிவிட்டாள் என்று எழினியிடம் சொன்னதால் அழிசிக்குப் பின் 3. எழினி,
எழினியை விட அழகான வெண்பாவை உரைத்துவிட்டீர் எனக்கேட்ட
4. நெடுமான்,
தன் சோதனை முடிந்ததும் ஆதிமந்தியை உற்சாகப்படுத்திய நெடுமானுக்குப் பின்
5. ஆதிமந்தி

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்