Skip to main content

விடை 3440

இன்று (24 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
கஷ்டம் இல்லாத் தொழுகை அளவை மீறியதால் வெளியே வா (2)

இதற்கான விடை: வழி = வழிபாடு (தொழுகை) - பாடு (கஷ்டம்)

வழி = (நிரம்பி) வழி

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:13:03 தி. பொ. இராமநாதன்
2) 6:18:57 மீ கண்ணன்
3) 6:21:44 ராஜா ரங்கராஜன்
4) 6:25:21 முத்துசுப்ரமண்யம்
5) 6:25:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:28:39 மு.க.இராகவன்.
7) 6:31:07 Siddhan Subramanian
8) 6:42:16 ரவி சுப்ரமணியன்
9) 6:54:27 நாதன் நா தோ
10) 6:59:25 ஸௌதாமினி
11) 7:02:52 லக்ஷ்மி ஷங்கர்
12) 7:07:39 எஸ்.பார்த்தசாரதி
13) 7:19:19 ரவி சுந்தரம்
14) 7:20:15 மீ.பாலு
15) 7:22:24 மீனாக்ஷி
16) 7:22:40 V.R. Balakrishnan
17) 7:40:12 மு க பாரதி
18) 7:41:25 தேன்மொழி
19) 8:18:38 பினாத்தல் சுரேஷ்
20) 8:26:06 கு. கனகசபாபதி, மும்பை
21) 8:51:59 கேசவன்
22) 9:16:14 அனுராதா ஜெயந்த்
23) 9:16:39 ஏ.டி.வேதாந்தம்
24) 9:16:45 மாலதி
25) 9:17:02 பத்மாசனி
26) 9:56:02 ருக்மணி கோபாலன்
27) 10:46:49 சங்கரசுப்பிரமணியன்
28) 11:02:16 மடிப்பசுக்கம் தயானந்தன்
29) 11:05:56 ராமராவ்
30) 11:13:04 கி மூ சுரேஷ்
31) 11:24:18 வி ன் கிருஷ்ணன்
32) 11:51:34 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 13:15:02 மீனாக்ஷி கணபதி
34) 16:25:54 அம்பிகா
35) 16:26:11 KB
36) 16:37:49 லதா
37) 16:40:54 வானதி
38) 17:24:50 பாலா
39) 18:01:54 கோவிந்தராஜன்
40) 19:24:11 பானுமதி
41) 19:25:49 சதீஷ்பாலமுருகன்
**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
*************************
_காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்_
_பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்_
.............
_உறங்கும் மானுடனே உடனே வா வா_
_போர்வை சிறையை விட்டு *வெளியே வா* வா_
_அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்!_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆதி காலத்தில் இடி, மின்னல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் மீது ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே *வழிபாடு* என்ற ஒன்றே தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆரம்ப காலங்களில் பயத்தினால் இறை/இயற்கை *வழிபாடு* தோன்றியது என்றாலும், காலப்போக்கில் அது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியிருந்தது.
*************************
_என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்_
_ஏன் கையை ஏந்த வேண்டும்_ _வெளிநாட்டில்_
_ஒழுங்காய் *பாடு படு* வயல் காட்டில்_
_உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்_
_விவசாயி ....!_ _விவசாயி ....!_
*************************
_கஷ்டம் இல்லாத் தொழுகை அளவை மீறியதால் வெளியே வா (2)_

_தொழுகை_
= *வழிபாடு*

_கஷ்டம்_ = *பாடு* ( _பாடுபடு=கஷ்டப்படு_ )

_கஷ்டம் இல்லாத் தொழுகை_
= _பாடு இல்லாத வழிபாடு_
= *வழி* ( ~பாடு~ )

_அளவை மீறியதால் வெளியே வா_ = *வழி*
_(‘ அணையில் நீர் வழிந்தது’)_
*************************
*வழி*
வினைச்சொல்
_வழிய, வழிந்து, வழிக்க, வழித்து_

(அணை, ஏரி, குளம் போன்ற நீர்நிலையில் அல்லது ஒரு கொள்கலனில் நீர் போன்ற திரவம்)
_*நிரம்பி வழிதல்;*_
(பக்கவாட்டில்) ஒட்டி இறங்குதல்.

‘மழை அதிகமானதால் முற்றத்தில் தண்ணீர் தேங்கி *வழிந்தது* ’
‘அடுப்பிலிருந்த பால் பொங்கி *வழிந்தது* ’
*************************
_*ஆடல் வல்லான்* *ஆதிரை வழிபாடு* (ஆருத்ரா தரிசனம்)_

ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்க முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது.

_தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது இந்த ஆடல் வல்லான் திருவுருவமும் வழிபாடும்._
*************************
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது…
நான் பட்ட *கஷ்டம்* என்னோட போகட்டும்…
*************************
_உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்_ _மற்றெல்லாம்_
_*தொழுதுண்டு*_ _பின்செல் பவர்_
💐🙏🏼💐
Chittanandam said…
ஒவ்வொரு புதிருக்கும் ஒவ்வொரு முறையில் யோசிக்க வேண்டியுள்ளது. That's the problem. Congratulations to Dr.Vanchi.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.