Skip to main content

விடை 3420

விடை 3420
இன்று காலை வெளியான வெடி:
கூட வந்தவன், கடைசியாக வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன் (3)

 இதற்கான விடை :  சேரன் = சேர + ன் (வந்தவன், கடைசியாக)

சேரர்களின் சின்னமான வில்,  அவர்களது கொடியில்  இடம்பெற்றிருக்கும்.

(இன்று  10க்கும் மேற்பட்டவர்கள் "சகலை" என்ற விடையளித்திருந்தனர். காற்புள்ளியை இட்டது நன்றாக வேலை செய்து அவர்களைத் திசை திருப்பியுள்ளது. )

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (19):

1) 6:07:29 முத்துசுப்ரமண்யம்
2) 6:08:49 வதா
3) 6:18:56 மீ சேஷாத்ரி
4) 6:23:59 மீனாக்ஷி
5) 6:25:30 மு.க.இராகவன்.
6) 6:25:54 லட்சுமி சங்கர்
7) 6:42:56 மீனாக்ஷி கணபதி
8) 6:49:58 மாலதி
9) 7:34:40 வானதி
10) 7:42:23 கு. கனகசபாபதி, மும்பை
11) 7:48:57 அம்பிகா
12) 8:10:06 கேசவன்
13) 8:48:04 மீ பாலு
14) 11:16:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 13:28:56 இரா.செகு
16) 14:06:45 மடிப்பாக்கம் தயானந்தன்
17) 15:53:33 ரவி சுப்ரமணியன்
18) 17:17:24 ராதா தேசிகன்
19) 17:37:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
..............👇🏽................
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே *_சேரர்கள்_* எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி *_விற்கொடி_* ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். .
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
---------------------------------------
_கூட வந்தவன், கடைசியாக வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன் (3)_

_கூட_ = *சேர*

(கூடி =சேர்ந்து------ _ஓடி விளையாடு பாப்பா, - நீ_
_ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,_
*_கூடி_* _விளையாடு பாப்பா_ !_
***
*கூடி* வாழ்ந்தால் கோடி நன்மை! )

_வந்தவன், கடைசியாக_
= *ன்* ( வந்தவன் கடைசி எழுத்து)

_வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன்_
=வில்லை கொடியாக ( _விற்கொடி_ ) உயர பறக்க விட்டவர்கள்.
= *சேர+ன்*
= *சேரன்*
*************************
_எங்கள் திராவிட பொன்னாடே_
_கலை வாழும் தென்னாடே!_
................
.......................
_சிங்களத்தீவின் கடற்கரையை_
_எங்கள் செந்தமிழ் தோழர் அழகு செய்தார்!_

_எகிப்திய நாட்டின் நதிக்கரையில்_
_எங்கள் இளந்தமிழ் வீரர் பவனிவந்தார்!_

*_வில்லவன் சேரன்_*
_பாண்டிய நாட்டின்_
_வேல்விழி மகளை_ _கூட_ = *சேர*

(கூடி =சேர்ந்து------ _ஓடி விளையாடு பாப்பா, - நீ_
_ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,_
*_கூடி_* _விளையாடு பாப்பா_ !_
***
*கூடி* வாழ்ந்தால் கோடி நன்மை! )
_மணமுடித்தான்!_

_விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்_
_திசைதோறும் இசைபாடும் தாய்நாடே!_

_எங்கள் திராவிட பொன்னாடே_
_கலை வாழும் தென்னாடே!_
🏇🏼🏇🏼🏇🏼🏇🏼🏇🏼🏇🏼
Chittanandam said…
நானும் சகலையுடன் நீண்ட நேரம் போராடினேன். பொருந்வில்லையே!
Chittanandam said…
நாளைய புதிர் எளிமையாக இருக்கும் எ நம்புகிறோம்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்