Skip to main content

விடை 3441

இன்றைய வெடி:

முதலுக்கு மோசம் நாட்டியம் (4)
இதற்கான விடை: நட்டம் (நஷ்டம்)
நாட்டியம் = நாட்டிய + ம்
நாட்டுதல் = நடுதல் (இமயம் வரை சென்று வெற்றிக்கொடியை நாட்டிய  அரசன்)
நாட்டிய = நட்ட

இன்று வந்த தவறான விடைகளில் பெரும்பாலோர்  (17 பேர்)   அளித்தது: "ஆட்டம்" .  மூன்று பேர்  "தலுக்கு"

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (36):

1) 6:02:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2) 6:03:58 கி மூ சுரேஷ்
3) 6:05:12 சுந்தர் வேதாந்தம்
4) 6:05:19 செந்தில் சௌரிராஜன்
5) 6:06:00 ராஜா ரங்கராஜன்
6) 6:06:11 சதீஷ்பாலமுருகன்
7) 6:08:02 ரவி சுப்ரமணியன்
8) 6:10:36 K,R,Santhanam
9) 6:11:52 KB
10) 6:11:57 ஆர்.நாராயணன்.
11) 6:18:14 முத்துசுப்ரமண்யம்
12) 6:19:26 மீனாக்ஷி கணபதி
13) 6:23:24 பிரசாத் வேணுகோபால்
14) 6:30:57 சுபா ஸ்ரீநிவாசன்
15) 6:39:07 ரவி சுந்தரம்
16) 6:46:29 Siddhan Subramanian
17) 7:00:14 மீனாக்ஷி
18) 7:01:14 மீ கண்ணன்
19) 7:03:40 மைத்ரேயி
20) 7:09:10 லட்சுமி சங்கர்
21) 7:15:31 மீ.பாலு
22) 7:19:59 பா நடராஜன்
23) 7:56:21 ராஜி ஹரிஹரன்
24) 8:34:12 கு.கனகசபாபதி, மும்பை
25) 8:55:44 மாலதி
26) 9:32:30 V.R. Balakrishnan
27) 9:45:31 மாதவ்
28) 10:20:03 கோவிந்தராஜன்
29) 10:59:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 12:05:21 ரமணி பாலகிருஷ்ணன்
31) 12:57:01 சங்கரசுப்பிரமணியன்
32) 13:28:14 விஜயா ரவிஷங்கர்
33) 14:14:53 ராமராவ்
34) 17:47:37 ரா. ரவிஷங்கர்...
35) 20:49:47 ஏ.டி.வேதாந்தம்
36) 20:50:11 பத்மாசனி
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
(திரைப்படப் பாடல் -Remix)

_என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்!_

_நான் உன்னை நினைத்தேன்!_

_என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய்!_

_*முதலுக்கு மோசம்*_ _என உணர்ந்தேன்!_
😂😂😂😂
சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சதீர் (சதிர்)என்றும் சதீர்கச்சேரி(சதிராட்டம்) என்றும் அழைக்கப்பட்ட நடனம் மறுமலர்ச்சி அடைந்து _பரதநாட்டியமாக_ விளங்கி வருகிறது. பல்வேறு கலை அம்சங்களை முழுமையாக விளக்கும் ஒரு நூல் தான் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரமாகும்.

_பரத நாட்டியம்_

‘ *_நாட்டியம்_* ’ என்ற சொல் ‘ஆடல்’ என்னும் பொருளைத் தரும். ப,ர,த என்ற மூன்று
எழுத்துகள் தனித்தனி மூன்று பொருளைத் தரும். இதோ பாருங்கள் இந்த விளக்கத்தை:

‘ப’ என்னும் எழுத்து :
பாவகம் (Bhaava/ expression of emotions)

‘ர’ என்னும் எழுத்து : ராகம் (Raagam)

‘த’ என்னும் எழுத்து : தாளம் (Thaalam)
ஆக பாவகம், ராகம், தாளம் ஆகிய மூன்றும் (ப+ர+த) சேர்ந்து பரத என்று ஆகிறது. பரத நாட்டியம் என்னும் பொழுது பாவ ராக தாளம் ஆகிய மூன்று தன்மைகளும் ஆடலோடு சேர்கின்றன. எனவே இசையும் தாளமும் அபிநயமும் சேர்ந்த *_நாட்டியம்_* " _பரதநாட்டியம்_ " ஆகிறது.
*************************
_முதலுக்கு மோசம் நாட்டியம் (4)_

_முதலுக்கு மோசம்_
= *நட்டம்*

_நாட்டியம்_
= _நாட்டிய+ம்_
= *நட்ட+ம்*

*************************
ஒரு புலி 🐅தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி 🐀சந்தோசமாக *நாட்டியமாடுவதைப்* பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.

🐅'' _என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ *நாட்டியம்* ஆடுவாய்?''_ என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

🐀எலி சொல்லியது,
_' சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'_
😂😂😂
💐🙏🏼💐
*************************b

நட்டம் என்பதற்கு நாட்டியம் என்ற நேரடிப் பொருளும் உண்டு.

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
Muthu said…
என் விளக்கம்: முதலுக்கு மோசம் (4) = நாட்டியம் (4)
முதலுக்கு மோசம் (வியாபாரத்தில்) = நட்டம் (நஷ்டம்)
நட்டம்
naṭṭam n. Pkt. naṭṭa. Dance,dancing; *நடனம்* நட்டம்பயின் றாடுநாதனே (திருவாச. 1, 89). https://agarathi.com/word/நட்டம்
Raghavan MK said…
முதலுக்கு மோசம் (4) = நாட்டியம் (4)
முதலுக்கு மோசம் (வியாபாரத்தில்) = ஆட்டம் (நஷ்டம்)
Raghavan MK said…
இன்றைய புதிர் Straight ஒரு சொல் இரு பொருள் Category யில் வரலாம்!
ஆனாலும் நட்டம் என்பது not directly substituting the words "முதலுக்கே மோசம் " as in நாட்டியம் = நட்டம்.

Similarly நாட்டியம்= ஆட்டம் direct meaning
and முதலுக்கே மோசம் = ஆட்டம் roundabout meaning as நட்டம்
"Business ஆட்டம் கண்டது " . Indirectly referring முதலுக்கே மோசம்.
But all said and done the explanation of spilliting நாட்டியம் as நாட்டிய +ம் may not hold water.
And the riddle is also not cryptic category.
Muthu said…
ராகவன் சார்: மன்னிக்கவும். வியாபாரம் அல்லது தொழில் முதல் போட்டுத் தொடங்குவதாகும். ஆட்டம் கண்டால், சுதாரித்து நஷ்டமில்லாமல், (முதலீட்டை இழக்காமல்) வெளிவந்து விடலாம். நஷ்டம் என்றால், பொட்டமுதல் கூட எடுக்க முடியாத் நிலை; ஆகவே, முதலுக்கு மோசம் என்பது நட்டத்தை நேரடியாகக் குறிப்பிடும்.
Muthu said…
ராகவன் சார்: மன்னிக்கவும். வியாபாரம் அல்லது தொழில் முதல் போட்டுத் தொடங்குவதாகும். ஆட்டம் கண்டால், சுதாரித்து நஷ்டமில்லாமல், (முதலீட்டை இழக்காமல்) வெளிவந்து விடலாம். நஷ்டம் என்றால், பொட்டமுதல் கூட எடுக்க முடியாத் நிலை; ஆகவே, முதலுக்கு மோசம் என்பது நட்டத்தை நேரடியாகக் குறிப்பிடும்.
Vanchinathan said…
ஆட்டம் கண்டது. உறுதியான நிலையிலிருந்து உறுதி குறைந்த நிலைக்குச் செல்வது. ஒரு கட்சித் தலைவரை எதிர்த்து கீழேயிருப்பவர்கள் வேலை செய்தால் அவரது நிலை ஆட்டம் கண்டது என்போம். இங்கே "ஆட்டம்" என்பதற்கு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பொருள் இல்லை.
Vanchinathan said…
இக்குறிப்பில் "நாட்டிய-ம்" என்றிருந்தால் ரவி சுப்ரமணியன் குறிப்பிட்ட குறை வராமல் சிறப்பாக இருந்திருக்கும்.
Muthu said…
ரவி சுப்ரமணியன் குறை சொல்வதாகத் தெரியவில்லையே. நட்டம் என்றால் நாட்டியம் என்று நேரடிப் பொருள் இருப்பதால், நட்டம் என்ற விடை முற்றிலும்பொருந்தும் என்றுதான் சொல்வதாகத் தெரிகிறது. திரு. ராகவன் அவர்கள்தான் முழு மனதுடன் ஒப்புக்கொள்ளவில்லைபோல் தொனிக்கிறார்.
நட்டம் = நாட்டியம் (நள்ளிரவில் நட்டம் பயின்றாடு நாதனே : சிவபுராணம்
Raghavan MK said…
Yes!
I agree with your expressed!
Thank you!
Raghavan MK said…

நாட்டியம் = நட்டம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை!

My point is the answer for first part of the clue whether it is நட்டம் Or ஆட்டம் , both are only
hypothetical derivation!

Ofcourse , When compared to ஆட்டம் , நட்டம் seems to fit in .

இது முழுமனதான கருத்து! !🙏

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.