Skip to main content

விடை 3437

விடை 3437

இன்று (21/9/2018) காலை வெளியான வெடி:
தகுந்த அகலம் விட்டுப்போக விட்டுப்போக உயர்வு (4)

இதற்கான விடை: ஏற்றம் = ஏற்ற (தகுந்த)  + ம் (அகலம் - அகல)

இதற்கு சரியான விடையளித்தவர்கள் 47 பேர்:
 1)  6:01:20    லட்சுமி சங்கர்
 2)  6:02:05    திருமூர்த்தி
 3)  6:04:56    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
 4)  6:06:16    லதா
 5)  6:08:59    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
 6)  6:08:59    ரவி சுப்ரமணியன்
 7)  6:10:19    எஸ்.பார்த்தசாரதி
 8)  6:12:17    மீனாக்ஷி கணபதி
 9)  6:12:38    மீ கண்ணன்
10)  6:15:00    கேசவன்
11)  6:16:17    இரா.செகு
12)  6:21:53    முத்துசுப்ரமண்யம்
13)  6:24:59    மாலதி
14)  6:28:40    உஷா
15)  6:29:43    தி. பொ. இராமநாதன்
16)  6:33:55    மீனாக்ஷி
17)  6:37:48    கே.ஆர்.சந்தானம்
18)  6:40:03    ரவி சுந்தரம்
19)  6:44:41    கு. கனகசபாபதி, மும்பை
20)  6:46:04    சதீஷ்பாலமுருகன்
21)  6:48:05    ராமராவ்
22)  6:51:19    ராஜா ரங்கராஜன்
23)  6:58:20    நங்கநல்லூர் சித்தானந்தம்
24)  6:58:26    Siddhan Subramanian
25)  6:59:38    மடிப்பாக்கம் தயானந்தன்
26)  7:06:55    கி மூ சுரேஷ்
27)  7:14:39    ரமணி பாலகிருஷ்ணன்
28)  7:22:49    ஆர்.நாராயணன்.
29)  8:17:41    பிரசாத் வேணுகோபால்
30)  8:19:33    வானதி
31)  8:52:03    ஆர். பத்மா
32)  8:53:03    மு க பாரதி
33)  9:03:35    மயிலை வெங்கு
34)  10:11:18    விஜயா ரவிஷங்கர்
35)  10:15:59    ராஜி ஹரிஹரன்
36)  10:23:24    கோவிந்தராஜன்
37)  11:14:50    பூமா பார்த்த சாரதி
38)  11:16:32    மாதவ்
39)  11:37:35    தேன்மொழி
40)  11:41:44    சுபா ஸ்ரீநிவாசன்
41)  12:04:00    சாந்தி நாராயணன்
42)  12:32:52    ஸௌதாமினி
43)  13:32:26    ராதா தேசிகன்
44)  14:02:32    மு.க.இராகவன்.
45)  17:13:00    பாலா
46)  18:29:04    மைத்ரேயி
47)  19:19:11    சுந்தர் வேதாந்தம்
48)  20:49:02    V.R.Balakrishnan

-->

Comments

Raghavan MK said…



A peek into today's riddle!

*************************
*முதலைகள் ஐந்திடம் மாட்டிக் கொண்டால் ..*
திரு ஏகம்பத்தில் அப்பர் பாடிய ‘நம்பனை’ எனத் தொடங்கும் பதிகத்தில் இரண்டாம் பாடல் (4ஆம் திருமுறை):
_ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறை உடைத்தாய்_
_அரை முழம் அதன் *அகலம்* அதனில் வாழ் முதலை ஐந்து பெருமுழைவாய்தல்_ _பற்றிக் கிடந்து நான் *பிதற்றுகின்றேன்*_ _கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே_

ஒரு முழம் நீளமும் அரை முழம் *அகலமும்* கொண்டுள்ள உடல் என்னும் குளத்தில் ஐந்து முதலைகள் வாழ்கின்றன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழிகள் ஒன்பது. அதாவது ஒன்பது துவாரங்கள். இதில் அகப்பட்டுள்ள நான் ஐம்பொறிகளுக்கும் பயந்து பெரிய குகை போன்று காணப்படும் நீர் வரும் வழியைப் பற்றிக் கொண்டு எப்படித் தப்புவது என்ற பயத்தில் வாய்க்கு வந்தபடி பிதற்றுகின்றேன். கருமுகில் தவழ்கின்ற மாடங்களை உடைய கச்சி ஏகம்பத்தில் உறையும் ஏகம்பனே, என்னை ஐந்து முதலைகளிடமிருந்து (ஐம்பொறிகளிலிருந்து) காப்பாற்றுவீராக! 🙏🏼
🌺🌺🌺🌺🌺🌺🌺
_பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று_
_தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு_
_பாட்டெடுப்போம் வா வா... பூத்திருப்போம் பூவா.._
_கட்டுக்காவல் *விட்டுப்போக*_ _பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்_
(திரைப்பாடல்)
*************************
_தகுந்த அகலம் விட்டுப்போக விட்டுப்போக உயர்வு (4)_
_விட்டுப்போக_ = _அகல_ ( _நீங்க_ )
_விட்டுப்போக விட்டுப்போக_ = _அகல_ _நீங்க_
_அகலம் விட்டுப்போக விட்டுப்போக_ = _அகலம்-அகல_ = *ம்*
_உயர்வு_ = *ஏற்ற* + *ம்*
= *ஏற்றம்*
*************************
_காணாமல் போன *ஏற்றம்*_
_கவலை ஏற்றம்_ என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதில் இரண்டு முறை உண்டு.ஒன்று கிளி மரம் கட்டி அதில் ஒருவா் ஏறி இறங்கவும், மற்றொருவா் அந்த தொட்டியினை கிணற்றுக்குள் செலுத்தி தண்ணீர் எடுக்கும் முறை.மற்றொன்று காளை மாடுகளை கயிற்றுடன் கட்டி முன்னும், பின்னும் நடக்க வைத்து தண்ணீா் இறைக்கும் முறை .
*************************
_ஆற்றங் கரையின் மரமும் அரசறிய_ _வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே_--
*_ஏற்றம்_*
_உழுதுண்டு வாழ்வதற்கு_ _ஒப்பில்லை கண்டீர்_
_பழுதுண்டு வேறோர் பணிக்கு_
ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.
( ஒளவையார் )
*************************
*ஏற்றம்* உண்டானால் இறக்கமும் உண்டு
EVERY TIDE HAS ITS EBB
(Proverbs)
*************************
Chittanandam said…
Excellent explanation, Raghavan Sir.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.