Skip to main content

விடை 3426

இன்று (10 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:

 தேவையான கொடிய நாட்டின் அடையாளத்தை அகற்ற முன்வந்தது அரசு (3)
இதற்கான விடை:   போதிய = போதி + ய;  (போதி மரம் = அரச மரம்)
ய = கொடிய - கொடி (நாட்டின் அடையாளம்)

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*******👇🏽********

கம்பர் காலத்துப் பாண்டிய மன்னன் ஒருவன் பாடியதாக ஒரு பாடல் உள்ளது.

பொருள் கொடுத்தால் பாவலர்கள் போற்றுவார்கள். பொருள் கொடுக்காவிட்டால் தூற்றுவார்கள். சொன்ன சொல்லை மாற்றியும் பொருள் கூறுவர். ஆகவே பாவலர்கள் கூற்றுவனைக் காட்டிலும் *கொடியவர்கள்* என்று அவன் பாடியிருக்கிறான்.

_போற்றினும் போற்றுவர்_
_பொருள் கொடாவிடில்_
_தூற்றினுந் தூற்றுவர்_ _சொன்ன சொற்களை_
_மாற்றினு மாற்றுவர்_ _வன்கணாளர்கள்_
_கூற்றினும் பாவலர்_ _*கொடிய* ராவரே._
😟
*************************
_தேவையான கொடிய நாட்டின் அடையாளத்தை அகற்ற முன்வந்தது அரசு (3)_

_அரசு_ = *போதி* (அரச மரம்)

_நாட்டின்_ _அடையாளத்தை_ = *_கொடி_*

_அடையாளத்தை அகற்ற_
= _கொடிய-கொடி_ = *ய*

_முன்வந்தது (அரசு)_
*போதி* + *ய*

_தேவையான_
= *போதி+ய*
= *போதிய*
*************************
*போதி* மரம் ஒரு சமஸ்கிருத சொல் , தமிழில் அரசமரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் உள்ள போதி மரத்தை பௌத்தர்களால் மகாபோதி என அழைக்கப்படுகிறது. புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி (அரசமரம்) மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதி கோயில் பாதுகாப்பாக காக்கப்பட்டு, அனைத்துலக பௌத்தர்களால் புனித மரமாக வணங்கப்படுகிறது.🙏🏼
************************
*கொடியது* :
_கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!_
_கொடிது கொடிது வறுமை கொடிது_
_அதனினும் கொடிது இளமையில் வறுமை_
_அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்_
_அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்_
_அதனினும் கொடிது_
_இன்புற அவர்கையில்_ _உண்பது தானே__
(ஔவையார் தனிப்பாடல்கள் )
***********************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (30):

1) 6:04:04 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:32 ரவி சுந்தரம்
3) 6:07:24 முத்துசுப்ரமண்யம்
4) 6:13:44 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 6:15:21 சங்கரசுப்பிரமணியன்
6) 6:21:22 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:47:21 மீனாக்ஷி
8) 7:28:31 ஆர்.நாராயணன்.
9) 7:38:13 மாதவ்
10) 8:01:21 Siddhan Subramanian
11) 8:08:36 மு க பாரதி
12) 8:13:25 கேசவன்
13) 8:51:27 ராஜி ஹரிஹரன்
14) 8:53:58 மாலதி
15) 9:00:11 சதீஷ்பாலமுருகன்
16) 9:02:56 தேன்மொழி
17) 9:39:46 தி. பொ. இராமநாதன்
18) 10:00:42 அம்பிகா
19) 12:27:20 மீ கண்ணன்
20) 13:06:23 கோவிந்தராஜன்
21) 13:08:45 KB
22) 13:45:43 மீனாக்ஷி கணபதி
23) 15:42:51 ஆர். பத்மா
24) 15:59:33 மு.க.இராகவன்.
25) 16:15:14 ராதா தேசிகன்
26) 16:43:17 மடிப்பாக்கம் தயானந்தன்
27) 17:13:09 உஷா
28) 17:46:29 வானதி
29) 18:03:32 பானுமதி
30) 20:00:10 எல்வீ
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்