Skip to main content

விடை 3815

இன்று காலை வெளியான புதிர்:

சில சிவத்தலங்களில் காணப்படும் அரை வெள்ளரியில் கால்வாசி  (3)

அதற்கான விடை: பாதிரி = பாதி + (வெள்ள) ரி
 
வில்வ மரம், வன்னி மரம் போல் சில ஊர்களின் சிவாலயங்களில் தல விருட்சமாக பாதிரி மரம் இருக்கும். கடலூர்க்காரர்கள் செல்லமாக NT (new town) என்று சொல்லும் கடலூர் புதுநகரம் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் கொண்டது. சிறுவயதில் உறவினரைச் சந்திக்க அங்கே சென்று கெடிலம் ஆற்றில் குளித்திருக்கிறேன்.
இந்த சிவாலய மரத்தினைப் பற்றிய குறிப்பு கொண்ட வலைப் பக்கத்தை இன்று முதல் விடையளித்திருக்கும் ரவி சுந்தரம்  தேடிக் கொடுத்திருக்கிறார் (அவரே இன்று கிரிப்டான் புதிரையும் முதல் விடையளித்துள்ளார்). அந்த வலைப் பக்கம் இதோ

இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

நான் ஆறாம் வகுப்பு கடலூர் புனித சூசையப்பர் பள்ளியில் படித்தேன். தாத்தா பாட்டி மாமா வீட்டிலிருந்து. திரு பாதிரி புலியூர் மருவி திருப்பாப்புலியூர் ஆனது. முன்னமே தெரியும். அரை = பாதி என்ற உடன் விடை பளிச்சென்று கிடைத்தது.

வீடு திருப்பாபுலியூர் -- திருவஹிந்திபுரம் வழியில் இருந்தது. அங்கு சென்று கடிலம் ஆறு தேவராஜ பெருமாள் கோவில் அருகில் குன்றில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் போனது எல்லாம் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. பாட்டி ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்லி கொடுத்து தினமும் பாராயணம் செய்ய சொன்னார். பி யு சி வரை தினமும் சொல்லி வந்தேன். பிறகு மமதை கர்வம் எல்லாம் வந்து ஸ்லோகம் சொல்வதை நிறுத்திவிட்டேன். திரும்ப வயதான பிறகு மறுபடியும் தொடங்கி இருக்கிறேன். கர்வம் மமதை அழிய வேண்டும். இவை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் அதுவே அது அழிய முதல் படி. முதல் அடி விட்டேன். மேலும் முன்னேற அருள் கிடைக்க வேண்டும்.
Vanchinathan said…
சில ஊர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவலையை எழுப்பும். ஆனால் உங்களுக்கு நினைவுகளை மட்டுமின்றி வேறு வாழ்க்கைப் பாடங்களையும் சொல்லியிருக்கிறீர்கள், ரவி சுந்தரம். நன்றி.
Muthu said…
பாதிரி என்றால் இரண்டு பொருள் உண்டு. பாதிரி மரத்தை கயவருக்கு உவமையாக ஔவைப் பிராட்டி ஒரு தனிப் பாடலில் சொல்லியிருக்கிறார்:

இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்

இப்பாடலுக்கு விளக்கமும் மேலும் சுவையான செய்திகளும்
இங்கு பார்த்தேன்: https://365paa.wordpress.com/2012/03/11/249/

இந்தப் பாடலை என் பிள்ளைகளின் சிறு பிராயத்தில் சற்று மாறுபட்ட
பொருளில் சொல்லி நகையாடுவேன். தினம் செய்ய வேண்டிய வேலைகளையும்
கடமைகளையும் "செய்" என்று "சொல்லாமலே" செய்ய வேண்டும்; சொல்லிய பிறகாவது
செய்யலாம். சொல்லியும் செய்யாதிருப்பது மிக மட்டம்.

பாதிரி மரம் சிவன் கோவில் தல மரமாக இருப்பதுஎனக்குப் புதிய செய்தி.
Vanchinathan said…
ஔவையார் பாடலும் நீங்கள் சுட்டிய இடத்திலுள்ள விளக்கமும் படித்தேன். ஆனால் பலாவில் பூக்கள் மலர்வதைப் பார்த்திருக்கிறேன். காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகியும் பல நாட்கள் கனிவதற்காக பல நாட்கள் இருப்பதால் மரத்தில் அதையே நாம் பார்த்து பூக்களைப் பார்க்க அதிகம் வாய்ப்பில்லை. இதையே பூவின்றுக் காய்ப்பது பலா என்று தவறாக எழுதிவிட்டார்கள். ஆனால் ஔவையாரின் பாடலில் பலாமரம் பூக்காது என்று ஏதும் குறிப்பில்லை. நீங்கள் சுட்டிக் காட்டும் கட்டுரையாசிரியர்தான் அப்படிச் சொல்கிறார்.
Muthu said…
<>

ஔவை பாடலில் அப்படி நேரிடையாகச் சொல்லாவிட்டலும் பலாவை சொல்லாமல் செய்யும் பெரியோருக்கு உவமையாகக் கூறுவதன் மூலம் அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கிறது!
சொல்லாமலே பெரியர் <==> பலா
சொல்லிச் செய்வர் சிறியர் <==> மா
சொல்லியும் செய்யார் கயவர் <==> பாதிரி

இந்த உவமை ஒப்புப் படி பார்த்தால்:
சொல்லாமல் செய்வது = பூக்காமல் காய்ப்பது
சொல்லிச் செய்வது = பூத்துக் காய்ப்பது
சொல்லையும் செயாதிருப்பது = பூ மட்டுமே; காய், பழம் இல்லை.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்