Skip to main content

விடை 3827

இன்று காலை வெளியான வெடி:
சுருக்கு அடிமை பாதத்தை வெட்டினாலும் விழியைக் காக்கும் (4)
அதற்கான விடை: கண்ணிமை; வேடர்கள் பறவைகளைப் பிடிக்க வைப்பது கண்ணி எனும் சுருக்குக் கயிறு.  ("கண்ணியில சிக்காதையா கானாங்குருவி"  என்று ராசாவின் கிராமத்துக் குரலில்  வரும் கண்ணி பராபரக் கண்ணியல்ல. இன்றைய புதிரின் கண்ணிதான்.)

"அடிமை"  என்பதில் அடி (பாதம்) போக எஞ்சுவது மை.

இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

      
[எச்சரிக்கை: நாளைய புதிர் ஆங்கிலம், தமிழ் இரண்டும் 15-30 நிமிடங்கள் தாமதமாகலாம்]

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.