Skip to main content

விடை 3814

இன்று காலை வெளியான புதிர்:
இரண்டாவது குழந்தை நட்ட சிலை மண்டி வளர்ந்து பயனில்லை (3)

 இதன் விடை :  விழல் = வில் (சிலை ) + ழ (குழந்தையில் இரண்டாம் எழுத்து)
கம்பராமாயண காலத்தில் சிலை என்ற சொல் வில்லுக்குப் பயன்படுத்தப்பட்டது.

பொதுவாக விழலுக்கு நீர் இறைப்பதைத்தான் பயனில்லா வேலை என்று கூறுவார்கள்.  நான் விழலையே பயனற்றது என்று இங்கே சொல்லிவிட்டேன்.

இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

வில் சிலையெனப்பட்டதற்கு ஓர் இலக்கிய உதாரணம் அல்லது ஆதாரம்
காட்டினால் நன்றாயிருக்கும்.
அன்புடன்
கனகசபாபதி
Vanchinathan said…
சரிதான். ஆனால் ஒரு தகவல் தந்து (பொதுவும் எளிதில் கிடைக்காத விஷயம் குறித்து) எழுதினால் அதைப்படித்தேன் தெரிந்து கொண்டேன், என்று கருத்துரைகள் வராததால் இங்கே வரும் வாசகர்கள் நல்ல அறிஞர்கள் எதையும் அவர்கள் தானாகவே கண்டு பிடித்துவிடுவார்கள் என்று விட்டுவிட்டேன்.
இதனை ஒரு அறியாதவனுக்கு அறிஞர் தந்த பதிலாக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் 

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்