Skip to main content

விடை 3814

இன்று காலை வெளியான புதிர்:
இரண்டாவது குழந்தை நட்ட சிலை மண்டி வளர்ந்து பயனில்லை (3)

 இதன் விடை :  விழல் = வில் (சிலை ) + ழ (குழந்தையில் இரண்டாம் எழுத்து)
கம்பராமாயண காலத்தில் சிலை என்ற சொல் வில்லுக்குப் பயன்படுத்தப்பட்டது.

பொதுவாக விழலுக்கு நீர் இறைப்பதைத்தான் பயனில்லா வேலை என்று கூறுவார்கள்.  நான் விழலையே பயனற்றது என்று இங்கே சொல்லிவிட்டேன்.

இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

வில் சிலையெனப்பட்டதற்கு ஓர் இலக்கிய உதாரணம் அல்லது ஆதாரம்
காட்டினால் நன்றாயிருக்கும்.
அன்புடன்
கனகசபாபதி
Vanchinathan said…
சரிதான். ஆனால் ஒரு தகவல் தந்து (பொதுவும் எளிதில் கிடைக்காத விஷயம் குறித்து) எழுதினால் அதைப்படித்தேன் தெரிந்து கொண்டேன், என்று கருத்துரைகள் வராததால் இங்கே வரும் வாசகர்கள் நல்ல அறிஞர்கள் எதையும் அவர்கள் தானாகவே கண்டு பிடித்துவிடுவார்கள் என்று விட்டுவிட்டேன்.
இதனை ஒரு அறியாதவனுக்கு அறிஞர் தந்த பதிலாக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் 

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.