Skip to main content

விடை 3408

விடை 3408

இன்று காலை வெளியான வெடி:
சோற்றோடு உண்ணப்படும் கல்லை எறிந்து காலணி அணிந்து  புகும் (4)

இதற்கான விடை: குழம்பு =  கழல் - கல் + புகும்

 சரியான விடை கண்டவர்கள் 19  பேர்:

1)    6:22:07  எஸ்.பார்த்தசாரதி
2)    6:25:47      லட்சுமி சங்கர்
3)    6:38:05      உஷா
4)    7:06:38      கேசவன்
5)    7:39:15      வி ன் கிருஷ்ணன்
6)    7:43:24      நாதன் நா தோ
7)    8:54:37      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8)    8:55:02      மீனாக்ஷி கணபதி
9)    9:48:41      ஶ்ரீவிநா
10)  9:56:09      ஆர்.நாராயணன்.
11)  10:55:50    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12)  14:06:52    மு க பாரதி
13)  15:34:52    மு.க.இராகவன்.
14)  15:50:58    மடிப்பாக்கம் தயானந்தன்
15)  17:41:04    கோவிந்தராஜன்
16)  18:22:38    ரமணி பாலகிருஷ்ணன்
17)  19:03:50    வி ன் கிருஷ்ணன்
18)  19:34:34    ஆர். பத்மா
19) 20:25:45    KB

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
***********👇🏽**********
*திருப்பாவை-பாசுரம் 24*
_அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி_
_சென்றங்கு(த்) தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி_
_பொன்ற(ச்) சகடம் உதைத்தாய் புகழ் போற்றி_
_கன்று குணில் ஆவெறிந்தாய் *கழல்* போற்றி_
_குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி_
_வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி_
_என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்_
_இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்_
🌸🌸🌸🙏🏼🌸🌸🌸
_சோற்றோடு உண்ணப்படும் கல்லை எறிந்து காலணி அணிந்து புகும் (4)_

_காலணி_
= *கழல்*
(கழல் முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி)
_கல்லை எறிந்து_
= *கழல்-கல்=ழ*
_அணிந்து புகும்_
= *புகும்+ழ*
= *குழம்பு*
= _சோற்றோடு உண்ணப்படும்_
🌸🌸🌸🌸🌸🌸
_நித்தம் நித்தம் நெல்லு சோறு..._
_நெய் மணக்கும் கத்திரிக்கா_ ...
_நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும்_ _இழுக்குதய்யா..._
இந்த பாடல் வரிகளை கேட்கும்போதே பலருக்கும், நாக்கில் எச்சில் ஊறிவிடுகிறது. அந்தளவுக்கு மீன் குழம்பின் ருசிக்கு பெரும்பாலானோர் அடிமை. 😛
இது வத்தகுழம்பும் சுட்ட அப்பளமும்......👇🏽
யாரையாவது விருந்துக்கு கூப்பிட்டால் ‘எனக்காக ஒன்னும் மெனக்கிட வேணாம். சுட்ட அப்பளமும் வத்தக் குழம்பும் இருந்தால் போதும்’ என்பார்கள்.
அதுவே அமிர்தம்!!!கூடவே பொட்டுக்கடலை துவையலும் இருந்திட்டால் தேவாமிர்தம்.😛
வத்தக்குழம்பு சாதத்தோட ஒரு special advantageஎன்னன்னா….சில சமயம் லீவு நாள்ள, காலைல குளிக்க முடியாம ஏதோ ஒழிச்சல் வேலை,சோம்பேறித்தனம்ன்னு இருந்தா, முந்தினநாள்
பண்ணின வத்தக்குழம்பு இருந்தா [ரொம்ப நன்னா இருக்கும்] ஒரு பாத்திரத்ல சாதத்தைப் போட்டு, அது தலைல நல்லெண்ணெய் விட்டு,பழேத்துக் குழம்பை விட்டு மொத்தமா உருட்டிப் பிசைஞ்சு, நம்ம உள்ளங்கை ஸைசுக்கு ஒரு உருண்டையா [திருப்பதி
லட்டு சைஸ்] உருட்டி எடுத்துண்டுபோய், பின்னால தோய்க்கறகல் மேலேயோ[இப்போ washing machine],தோட்டத்துலேயோ, பால்கனிலேயோ உக்காந்து சாப்பிட்டா….புல்லரிக்கும்!! அனுபவியுங்கோ!
💐🙏🏼💐
பகல் --கல் = "ப"+காலணி = செருப்பு --செ= "பருப்பு ", சோற்றுடன் முதலில் உட்கொள்ளப்படுவது
Sundar said…
குழம்பு என்ற விடையை அடைய தேவையான anagram indicator புதிரில் எங்கே இருக்கிறது? அணிந்து என்ற சொல் anagram indicator மாதிரி தெரியவில்லையே?!
Vanchinathan said…
ஆமாம் இல்லாமல் செய்த புதிர். சில நாட்களுக்கு முன்பு "கலை" என்ற சொல் உபயோகமற்றது என்று வாதிடப்பட்டது. அது இல்லாமலே விடையை அடைய முடியும் என்று சொல்லப்பட்டதால் இவ்வாறு செய்தேன். செய்திருக்கக்க்கூடாது என்று உணர்கிறேன். குழப்பச் சொல்லாததால் குழம்பி குழம்பை அடைய முடியவில்லை என்று நினைக்கிறேன்
Raghavan MK said…



குழம்பி குழம்பை அடைய முடியவில்லை என்றாலும் ரசமான புதிர்!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.