Skip to main content

விடை 3403

இன்று காலை வெளியான வெடி
மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை  விட நீளம் (4)

 
இதற்கான விடை: கூவிளம்; யாப்பிலக்கணப்படி "ஒன்பதாம்" என்பது நேர்நிரை, அதானால் "கூவிளம்" என்ற வாய்பாட்டில் அமைந்தது.  கூவி = உரக்கச் சொல்லி;  ளம் = "நீளம்" என்ற சொல்லில் முன்னிருக்கும் எழுத்து விடப்பட; (நீ என்பது முன்னிலை, அதை விட்டுவிட என்றும் கொள்ளலாம்!)

விடை கண்டவர்கள் 22 பேர்:
1)  6:04:27    எஸ்.பார்த்தசாரதி
2)  6:17:35    நங்கநல்லூர் சித்தானந்தம்
3)  6:34:04    மு.க.இராகவன்.
4)  6:51:05    ஆர்.நாராயணன்.
5)  6:54:53    மீனாக்ஷி கணபதி
6)  7:37:59    முத்துசுப்ரமண்யம்
7)  7:39:42    ரவி சுந்தரம்
8)  7:47:17    கேசவன்
9)  8:04:18    ராஜா ரங்கராஜன்
10)  8:31:01    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11)  8:47:22    லட்சுமி சங்கர்
12)  11:26:02    சித்தன்
13)  13:36:34    V.R.  Balakrishnan
14)  15:05:36    அம்பிகா
15)  17:28:16     KB
16)  18:14:44    லக்ஷ்மி ஷங்கர்
17)  18:16:11    மீ.பாலு
18)  18:17:31    எஸ் பி சுரேஷ்
19)  18:18:28    மீ கண்ணன்
20)  18:47:26    உஷா
21)  19:28:28    சதீஷ்பாலமுருகன்
22) 21:00:16  மாலதி

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle!
**********👇🏽**********
*_மரபுக் கவிதை_*.
ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக் கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா வகைகள் சீர், தளை பிறழாதன; பாவின வகைகள் குறிப்பிட்ட *வாய்பாடுகளில்* அமையும் நான்கு அடிகளை உடையன.
*_புதுக்கவிதை_*
எதுகை, மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும். மேனாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓர் புதுக்கவிதை!
_பாதை முள்_
_படுக்கை முள்_
_இருக்கை முள்_
_வாழ்க்கை முள்_
_ஆன மனிதர்களைப்_ _பார்த்துச்_
_சிலிர்த்துக் கொண்டது_
_முள்ளம்பன்றி..._
_ஓ.. இவர்களுக்குத்_ _தெரியாதா_
_முள்ளும் ஓர்_
_ஆயுதம் என்று_
(சிற்பி பாலசுப்பிரமணியம்)

*************************
_மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை விட நீளம் (4)_
_உரக்கச் சொல்லி_
= *கூவி*
_முன்னிருப்பவரை_
= _நீளத்தில்_ முதல் எழுத்து *நீ*
_விட_
= விட்டு விட (கழிக்க)
_முன்னிருப்பவரை விட நீளம்_
= நீளம் -நீ = *ளம்*
_மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு_
= *கூவி+ளம்*
= *கூவிளம்*
*************************
*_சீர் வாய்பாடுகள்_*
ஓரசை, ஈரசை மட்டும் உள்ள சீர்களை வேண்டுமானால்
எளிதில் நினைவிற் கொள்ளலாம். பிற சீர்களில் உள்ள அசைகளை
அவ்வளவு எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது.
எனவே, யாப்பு இலக்கண ஆசிரியர்கள் அவற்றையும் நினைவில்
கொள்ள எளிய ஒரு முறையைக் கண்டறிந்தனர். அதற்கு ‘ *_வாய்பாடு_* ’
என்று பெயர்.
சரியா, புதிதா --> _புளிமா_ (நிரை, நேர்)
எதுமுறை, திருமணம்--> _கருவிளம்_ (நிரை, நிரை)
யாரிவன், கார்முகில் --> *_கூவிளம்_* (நேர், நிரை)
நாலசைச்சீர்களில்
*_ஒன்பதாம் வாய்பாடு_*
9. நேர்-நிரை-நேர்-நேர் *கூவிளந்தண்பூ*
💐🙏🏽💐
Raghavan MK said…



ஒன்பதாம் என்பதற்குவிளக்கம் அறிந்தேன்.கூவிளம் உதாரணம்! நன்று!
Chittanandam said…
எனக்கு உண்மையிலேயே தமிழிலக்கணம் குறிப்பாக யாப்பிலக்கணம் சுட்டுப் போட்டாலும் வராது. தெரிந்த இலக்கணச் சொற்கள் ஒருமை, பன்மை. அவ்வப்போது இடவாகு பெயர். முன்னிருப்பவரை விட நீளம் என்பது ளம் என்பது தெரிந்தது. உரக்கச் சொல்லி என்பது கூவி யாகிவிட்டது. கூவிளம் கிட்டியது. மரபுக் கவிதை, 9ம் வாய்பாடு இவையெல்லாமே ஸ்பானிஷ் & போர்த்துகீஸியம்தான்.


வாவ். கெஸ் பண்ணவே முடியல. ஒன்பதாம் வாய்ப்பாடு தெரில. :)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.