Skip to main content

விடை 3396


விடை 3396

இன்று (11 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி:
உரம் மக்கும் நடு பாழிடத்தில் விளையும் (4)

இதற்கான விடை:   எருக்கு = எரு +  க்கு

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
...................👇🏽................
_எருக்கு_

_'தெய்வீக மூலிகை’_ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு... என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது.

அநேக மருத்துவப் பயன்கள் கொண்ட ஒரு செடி......இதன் ஒவ்வொரு பாகமும் பட்டை, பால், பூ, இலை என தனிப்பட்ட மருத்துவக் குணங்கள் கொண்டவை...

எருக்கு இலை வாந்தி உண்டாக்குதல்; பித்தம் பெருக்குதல்; வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.

எருக்கு பட்டை, பூ ஆகியவை கோழையகற்றும்; பசி உண்டாக்கும்; செரிப்பு உண்டாக்கும்; உடல் உரமாக்கும்.

குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில் எருக்கு பாலைத் தடவ விஷம் இறங்கும்.

***********************
_உரம் மக்கும் நடு பாழிடத்தில் விளையும்_
(4)

_உரம்_
= *எரு*

_மக்கும் நடு_
= (ம) *க்கு* (ம்)
= *க்கு*

_பாழிடத்தில் விளையும்_
= *எரு+க்கு*
= *எருக்கு*
*************************

விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் விக்னங்கள் (தடைகள்) நீங்குவதோடு, சூரியனின் அருளும், ஆத்ம பலனும், ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கும்.

🌹🌹🌹🙏🏽🌹🌹🌹

இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம்😔
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:02:59 பானுபாலு
2) 6:03:49 லதா
3) 6:05:13 ரவி சுந்தரம்
4) 6:05:35 மீனாக்ஷி
5) 6:07:09 லட்சுமி சங்கர்
6) 6:07:14 அம்பிகா
7) 6:09:01 முத்துசுப்ரமண்யம்
8) 6:09:28 கேசவன்
9) 6:16:21 மீ.பாலு
10) 6:22:29 சங்கரசுப்பிரமணியன்
11) 6:24:08 எஸ்.பார்த்தசாரதி
12) 6:26:21 மீனாக்ஷி கணபதி
13) 6:33:33 கு.கனகசபாபதி, மும்பை
14) 6:35:07 உஷா
15) 6:35:33 K.R.Santhanam
16) 6:38:40 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:42:08 Sucharithra
18) 6:47:23 மீ கண்ணன்
19) 6:55:38 மாலதி
20) 7:03:44 விஜயலக்ஷ்மி
21) 7:05:36 வானதி
22) 7:18:58 சுந்தர் வேதாந்தம்
23) 7:19:26 எஸ் பி சுரேஷ்
24) 7:50:49 ஆர்.நாராயணன்.
25) 7:53:10 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
26) 7:59:19 ஏ.டி.வேதாந்தம்
27) 7:59:49 பத்மாசனி
28) 8:00:29 அனுராதா ஜெயந்த்
29) 8:09:28 விஜயா ரவிஷங்கர்
30) 8:10:07 ரா. ரவிஷங்கர்..
31) 8:14:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
32) 8:35:39 திருக்குமரன் தங்கராஜ்
33) 9:06:56 மு.க.இராகவன்.
34) 10:46:14 KB
35) 11:39:11 சாந்திநாராயணன்
36) 11:40:56 ரமணி பாலகிருஷ்ணன்
37) 11:56:18 சித்தன்
38) 12:00:03 ரா. ரவிஷங்கர்...
39) 12:19:54 ஸௌதாமினி
40) 13:28:45 ஆர். பத்மா
41) 15:15:20 மடிப்பாக்கம் தயானந்தன்
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்