Skip to main content

விடை 3402

விடை 3402
இன்றுகாலை வெளியான வெடி:

குறைவான புத்தியுடன் தலை கலைப் படைப்பு (5)

இதற்கான விடை: சித்திரம்
விடை கண்டவர்கள் 48 பேர்:

1)  6:01:04    எஸ்.பார்த்தசாரதி
2)  6:03:13    ரவி சுப்ரமணியன்
3)  6:03:43    ஶ்ரீ வி நா
4)  6:04:48    முத்துசுப்ரமண்யம்
5)  6:05:13    திருமூர்த்தி
6)  6:12:16    சாந்திநாராயணன்
7)  6:13:02    லட்சுமி சங்கர்
8)  6:13:40    ரங்கராஜன் யமுனாச்சாரி
9)  6:13:42    ராஜா ரங்கராஜன்
10)  6:14:23    Thi. Po. Ramanathan
11)  6:14:38    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
12)  6:15:35    சங்கரசுப்பிரமணியன்
13)  6:15:47    நாதன் நா தோ
14)  6:16:00    பா. நடராஜன்
15)  6:20:01    கோவிந்தராஜன்
16)  6:21:19    V.R.  Balakrishnan
17)  6:22:56    ரவி சுந்தரம்
18)  6:23:21    சுந்தர் வேதாந்தம்
19)  6:24:19    கு.கனகசபாபதி, மும்பை
20)  6:24:47    ஸௌதாமினி
21)  6:27:12    K R.Santhanam
22)  6:27:49    கேசவன்
23)  6:35:36    லதா
24)  6:37:02    கி மூ சுரேஷ்
25)  6:52:10    மடிப்பாக்கம் தயானந்தன்
26)  6:56:26    மீனாக்ஷி
27)  6:57:49    சித்தன்
28)  7:11:43    நங்கநல்லூர் சித்தானந்தம்
29)  7:29:11    பாலா
30)  7:30:39    மீ கண்ணன்
31)  7:34:04    மு க பாரதி
32)  7:35:13    ஹரி பாலகிருஷ்ணன்
33)  7:52:55    புவனா சிவராமன்
34)  8:13:20    ஆர்.நாராயணன்.
35)  8:32:35    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
36)  8:37:53    ராஜி ஹரிஹரன்
37)  8:59:07    வி ன் கிருஷ்ணன்
38)  9:28:50    சுப்பிரமணியம் வேங்கடராமன்
39)  9:30:24    வானதி
40)  9:36:07    திருக்குமரன் தங்கராஜ்
41)  9:55:37    மீ.பாலு
42)  11:18:27    மு.க.இராகவன்.
43)  11:54:49    ஜெயந்தி நாராயணன்
44)  12:45:36    மீனாக்ஷி கணபதி
45)  13:44:47    சதீஷ்பாலமுருகன்
46)  16:26:05    KB
47)  18:24:41    Sucharithra
48)  18:41:02    செந்தில் சௌரிராஜன்

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
..............👇🏽................
சதாவதானி *செய்கு தம்பிப் பாவலர்,* (இஸ்லாமியப் புலவர் )எல்லாச் சமயங்களுக்கும்
பொதுவாகக் கடவுளைச் சுட்டும் ஒரு தொடர் சொல்லுங்கள்
என்று ஜி. சுப்ரமணிய ஐயர் கேட்டபோது, அவர் *சிரமாறுடையான்* என்று
பாடினார்.
_சிரமாறுடையான் செழுமா வடியைத்_
_திரமா நினைவார் சிரமே பணிவார்_
_பரமா தரவா பருகாருருகார்_
_வரமா தவமே மலிவார் பொலிவார்_
இதைச் *சிரம்* ஆறு உடையான் எனவும் சிரம் மாறு
உடையான் எனவும் பிரிக்கலாம்.
சிரம் = தலை, தலைமை என்னும் பொருள்கள்;
ஆறு = நதி, எண்(6) என்னும் பொருள்கள்;
ஆறு = நெறி;
சிரமாறு = சிரம் மாறு (மாறுதல்);
சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கை ஆற்றை உடையவன்
(சிவன்)
தலை ஆறு உடையான் (முருகன்)
தலை மாறி இருப்பவன் (யானைமுகன்)
சிரம் “ஆறு” உடையான்_ திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாற்றையுடைய, பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான் -
தலைமையான நெறிகளை உடையவன் (அல்லா, இயேசு, புத்தர்)
இவ்வாறு அனைத்து மதக் கடவுளரையும் இரண்டு சொற்களுள்
சிலேடையாக அமைத்துக்காட்டினார் புலவர்.🙏🏽
*************************
_குறைவான புத்தியுடன் தலை கலைப் படைப்பு (5)_
_தலை_
= *சிரம்*
_குறைவான புத்தியுடன்_
= ~(பு)~ *த்தி*
_கலைப் படைப்பு_
= *சிரம்+த்தி*
= *சித்திரம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_*சித்திரமும்* கைப்பழக்கம்_ _செந்தமிழும் நாப்பழக்கம்_
_வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்_
_நடையும் நடைப்பழக்கம்_
_நட்பும் தயையும்_
_கொடையும் பிறவிக் குணம்!_
( ஔவையார் தனிப்பாடல்கள்)
💐💐💐💐💐💐💐💐
_*சித்திரம்* பேசுதடி, எந்தன் சிந்தை மயங்குதடி!_
_சித்திரம் பேசுதடி!_
_என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்_
_இன்னமும் ஊமையைப் போல் மௌனம்_
_ஏனடி தேன் மொழியே!_
_சித்திரம் பேசுதடி !_
***********************

புதிரில் 'தலை' திறமையுடன் கையாளப்பட்டுள்ளது. முதற்கணிப்பில், 'தலை கலை = க' எனத் தோன்றியது.
Chittanandam said…
குறைவான புத்தியுடன் என்றதும் புத் எனக் கொண்ட மனம் அதனின்றும் அகல மறுத்தது. தலை சிரம் என்று அறிந்துகொண்டேன். புத்தையும் சிரத்தையும் இணைக்க முடியவில்லை. அப்புறம்தான் உறைத்தது த்தியாகக்கூட இருக்கலாம் என்பது. விடையும் உடன் கிடைத்தது. நல்ல அமைப்பு.
உஷா said…
என் குறைவான புத்திக்கு எட்டவேயில்லை. அழகான கட்டுமானம்
விளக்கத்தில் ஒரு திருத்தம்: சித்திரம் = படைப்பு. கலை படைப்பு அல்ல! கலை இந்த புதரில் எழுத்தக்களை வரிசைகளைக் கலைத்து போட வேண்டும் என்று சுட்டி காட்டுகிறது. இவ்வாறு "கலை" "புரட்டு" போன்ற கட்டமைப்பு சொற்களை ஒளித்து வைப்பதை ரசிக்க வேண்டும்
பா.தயானந்தன்
நுட்பமிக்க புதிராக்கம்..
வாழ்த்துக்கள்
Raghavan MK said…
I was just thinking about the word which indicates to mixup! கலை தான் அந்த சொல் என்பதை உங்கள் மூலம் அறிந்தேன்!
Thank you!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.