Skip to main content

விடை 3674


புறநானூற்றில் ஒரு பாடல் மோசிகீரனார்,  தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடியது.  முரசு இல்லாதபோது அதை வைக்கும் கட்டிலில் அறியாமல் புலவர் களைப்பில் தூங்கிவிட அவருக்கு மன்னர் தண்டனை அளிக்காமல் அருகில் நின்று கவரி வீசியதைப் பற்றியது.

ஞானக்கூத்தனின்  கவிதை இந்நிகழ்ச்சியை  அங்கதச் சுவையுடன் கூறுகிறது:

தோழர் மோசிகீரனார்
மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்

***************
இன்றைய  வெடி: 
உடலின் ஒரு பகுதி தண்ணீர்த் துளி கொண்டிருப்பதைப் பற்றிய  கேலி? (5)
 
இதற்கான விடை: அங்கதம்

இங்கே செல்லவும்.

Comments

உஷா said…
விடை பார்க்க முடியவில்லையே
Muthu said…
க்ரிப்டான் விடை அனுப்பினோர் பட்டியல் உதிரி விடை அனுப்பினோராக வந்திருக்கிறது!
Vanchinathan said…
இப்போது சரிசெய்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.
Muthu said…
அங்கதனில் கண் விழித்தேன் - அடடா ஓ அடடா! புதிரமைக்கும் புலமைதான் இதுவென்றே வியந்தேன்! முயன்றவர் 19; சரியாக விடை அளித்தோர் 6! உடலின் உறுப்பைத் தேடி உள் உறுப்புகள் பலவற்றையும் வெளிக் கொணர்ந்தோர் பலர்! விடை "கேலி"யாகி விட்டதே!
Raghavan MK said…
அங்கதத்தை நாம் தனிப்பாடல் அளவிலேயே நிறுத்திக் கொண்டோம். ஆனால், மேலைநாட்டு இலக்கிய வல்லுநர்கள் அதை ஒர் இலக்கியத் துறையாக வளர்த்திருக்கின்றனர். அங்கதத்தை அவர்கள் Satire என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்
Muthu said…
மேடைப் பேச்சிலும், திரைப்பட/நாடக வசனங்களிலும் அறிஞர் அண்ணா, கலைஞர், சோ முடதலியவர்கள் அங்கதம் செய்திருக்கிறார்கள். சோவும் அவர் பின்னோடிகள் பலரும் முழு நாடகமே அங்கதமாக (துக்ளக், க்வோவாடிஸ், சம்பவாமி யுகே யுகே) வடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். புதுமைப் பித்தன் கதைகளிலும் அங்கதம் காண முடியும். தற்காலத்தில் திரு ஜயமோஹன் அங்கதக் கட்டுரைகள் அடிக்கடி எழுதி வருகிறார்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்