Skip to main content

கோடைச் சரவெடி -- மே 2019

கோடைச் சரவெடி (மே 2019)
வாஞ்சிநாதன்
***************

இச்சரவெடிக்கு விடைகள் கண்டுபிடிக்க மூன்று நாட்கள் அவகாசம்.  மே 6ஆம் தேதி திங்கள் இரவு 9 மணிக்கு விடைகளும், விடையளித்தவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.  விடைகளைப் படிவத்தில் ஒரே பத்தியாக அதன் எண்ணுடன் எழுதவும்.

   

குறுக்காக
 1. முற்றுப் பெறா வானம் அடங்கி ஒரு மொழி தோன்றியது (5)
 4. வாளை வைக்க  கரிகாலனுக்கு  தலைநகரில் பாதி தேவைப்படும் (2)
 6. பிரிக்க முடியாத நூல் பிணைப்பும் மாட்டும் (4)
 7. பெண் மரம் வெட்டி சாவு அவ்விடம் சூழ்ந்தது  (4)
 9. புரட்டா வைகாசி  தொடங்கி  மார்கழியில் பாடப்படும் (5)
12. மனைவி முதல் மாதம் இடை சூழ்ந்த  மார்கழியில் பெய்வது (4)
14. பெண்பாதி கொண்ட ஆண்மகனே! கடவுளே! (4)
17. ஒட்டு ஒப்பானது (2)

18.  ஒரு செயலைத் தேர்ச்சியுடன்  ஆனால் குழப்பமாகப் படம் திற (5)

நெடுக்காக
1.  இதையடைந்தவர் மேலே செல்வதில்லை (3)
2. செய்வேனென்ற கூற்று  குழப்பத்தில் வழக்கு தொடர்ந்தவர்  முனை வெட்டி நறுக்கு  (5)
3. கப்பல் புறப்படுமிடத்தில் முகமிழந்து பிரிவு (2)
4. சாப்பிடுவதற்கு அம்மா சென்றபின்  உன் அண்ணனை . . . (3)
5. பொருத்தமான யானைப் பல்லாலான குதிரையின் தலையை  விழுங்கு (4)
7. பெற்றவர், குற்றமற்றவர், விற்றவர், தலைவாங்கியவர் (3)
8. பாக்மதிக் கரையில் இருக்கும்  திருமணமான காளை! (4)
10. ராஜகுரு  மானிடர்களிடம் கண்ட ஒரு மாவினம் (3)
11. சிவலோகப் பதவியை விரும்பாத பக்த
ர்கள் செல்ல விழையுமிடம் (5)
13. இலக்கியத்தின் பிரிவு பாதி பெண்ணைச் சுற்றிடும் வீட்டின் பகுதி (3)
15. வறுத்தெடுக்க மாட்டை விரட்டி  ஆட்டவா  சுழற்றவா? (3) 

16.  சுரத்தையிழந்த  ஒரு வெடி வகையில் தோன்று (2)











Comments

Ramarao said…
16 நெடு: குறிப்பைக் காணோம்.
Vanchinathan said…
நன்றி.
பிழைகள் களையப்பட்டுள்ளன.
Partha said…
You can fill here if you want
http://sparthasarathy.biz/vanchi_may2019.html
சரவெடியாக வெடித்துள்ளது ஐயா... ஒன்றும் நமத்து போக விடாமல் வெடித்து விட்டேன்...

பல புதிர்கள் தனித்து விடை காண கடினம். குறுக்கும் நெடுக்கும் குறுக்குவழியில் விடை காண உதவி செய்தது.

தங்களின் அருமையான இப்புதிருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா...
Vanchinathan said…
நன்றி பிரசாத். நீங்கள் ரசித்து, உங்களைக் கருத்து எழுதிடத் தூண்டும் அளவுக்கு இன்றைய‌ புதிர் இருக்கிறது. அப்படின்னால் முன்னிருப்பதை விட நான் கொஞ்ச‌ம் தேறிவிட்டேன் போலிருக்கிறது.
உஷா said…
சுவாரசியம். ஆனால் இதற்கு மூன்று நாள் அவகாசம் தேவையா என்று தோன்றுகிறது
Ambika said…
தனி உதிரிவெடியாக வரும்போது இருக்கும் சவால் சரவெடிகளில் குறைந்துவிடுகிறது. மற்ற விடைகளிலிருந்து support கிடைத்துவிடுவதுதான் இதன் காரணம். அதனால் பல நல்ல வெடிகளின் அழகை ரசிக்காமல் போய்விடுகிறோம். பல விடைகள் மிகவும் எளிமையாகி விடுகிறது. அதையே உதிரிவெடியாக கொடுத்திருந்தால் விடையளிக்க நிறைய கஷ்டப்பட்டிருப்போம், இன்னும் ரசித்திருப்போம்!
உங்கள் குறுக்கெழுத்துப்போட்டியில் இது என் முதல் முயற்சி.மிகவும் ரசித்துப்போட்டேன்.நன்றி.
Vanchinathan said…
நன்றி ராஜலக்ஷ்மி கிருஷ்ணன்.
நான் உதிரியாகத்தன் புதிர்கள் அளித்து வருகிறேன். இது போல் முழுக் கட்டவலைகள் ஆடிக்கொருமுறை சூரிய கிரகணத்துக்கொருமுறைதான் செய்ய முடியும். இருந்தாலும் உதிரிவெடியாக வரும் புதிர்களையும் முயலுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அந்த நாள்(மாதம் தவறாமல் தென்றல்)ஞாபகம் வந்ததே! நண்பனை!
அருமை அருமை அருமை மீண்டும் எப்போதோ என்று ஏங்குகிறேன்!
இதை வடிவமைக்க தாங்கள் மேற்கொள்ளும் சிரமும்எனக்கு புரிகிறது

நன்றி.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.