Skip to main content

விடை 3471

இன்று காலை வெளியான வெடி:
நட்ட நடு மறியல் இறைச்சிக்குப் பின்னர் (4)
இதற்கான விடை: ஊன்றிய =  ஊன் றியல் 

அரசியல் தலைவர் ஒருவர் சாலையில் நட்ட நடுவில் மறியல் செய்ய கூட்டம் திரட்ட ஏற்பாடு செய்யும்போது கேட்டது:

கையில் கொடியேந்திக் கத்திடுவேன் கோஷங்கள்

வெய்யிலில் சாலையில் வீசிடுவேன் கற்களை
பையில் பணத்தோடு கோழிக் கறிதந்தால்
நையப் புடைத்திடுவேன் நான்.

 


 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
_*நட்டநடு* கானகம்_ _நாற்புரமும் சாகரம்_

_எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை_

_விட்டுவிட_
_புத்தியில்லை_ , _வெற்றிபெற_ _சக்தியில்லை_

_சத்குருவே_
_பித்தனிவன்_ _பேதமையைப் போக்கு_

🌹🌹🌹

_*நட்ட நடு* கடல் மீது நான் பாடும் பாட்டு_

_சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து_

_நித்தம் உனை காணாது_
_நித்திரையும் தோணாது_

_சித்திரமே முத்துரதமே_
_எட்டி எட்டிப் போனாலும்_

_கெட்டு மனம் போகாது_
_அற்புதமே அன்னக்கிளியே_
***********************
(தமிழ் இறைச்சி யின் அர்த்தம்
_இறைச்சி_
பெயர்ச்சொல்
1. *ஊன்* .
உணவாகும் (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) சதைப் பகுதி; கறி.

2. (பழந்தமிழ் இலக்கியத்தில்) _வெளிப்படையாகக் கூறப்படாமல் உணர்த்தப்படும் பொருள்._ )

*********************
_நட்ட நடு மறியல் இறைச்சிக்குப் பின்னர் (4)_

_நடு மறியல்_ = *றிய*

_இறைச்சி_ = *ஊன்*

_இறைச்சிக்குப் பின்னர்_ =
*ஊன்றிய*

_நட்ட_ = *ஊன்றிய*
*************************
_விதை *ஊன்றிய* நெஞ்சம்_
_விளைவானது மஞ்சம்_
_கதை பேசுது கவி பாடுது_
_கலந்தால் சுகம் மிஞ்சும்_
_உயிர் உன் வசம் உடல் என் வசம்_
_பயிரானது உன் நினைவுகள்_

_சிறு பொன்மணி அசையும்_
_அதில் தெறிக்கும் புது இசையும்_
_இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*இருபொருள் வெண்பா!*

_*பம்பரமும், செக்கும்!*_

_ஓரச்சில் *ஊன்றி* உழலுதலால்;_ _கொண்டபொருள்_
_கூரச்சாற் தாக்கிக் குளைத்தலால்;_ _பாரப்பா!_
_சாட்டைக்கே சுற்றுதலால்_ _சாய்ந்தாடும் பம்பரம்_.
_காட்டுமரச் செக்கின்நேர் காண்!_

(அகரம்.அமுதா)
**********************
குறள்:983
_அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு_

_ஐந்துசால் *ஊன்றிய* தூண்_

குறள் விளக்கம்:
அன்புடைமை, நாணம், உதவி செய்தல், கண்ணோட்டம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்களாகும்.
💐🙏🏼💐
**********************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (53):

1) 6:05:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:28 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:09:18 வானதி
4) 6:11:28 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:11:49 ரவி சுப்ரமணியன்
6) 6:11:53 ரவி சுந்தரம்
7) 6:12:32 இரா.செகு
8) 6:13:44 சங்கரசுப்பிரமணியன்
9) 6:16:28 நாதன் நா தோ
10) 6:16:58 ராஜி ஹரிஹரன்
11) 6:16:59 சாந்தி நாராயணன்
12) 6:18:56 உஷா
13) 6:21:27 ஆர். பத்மா
14) 6:21:28 K.R. Santhanam
15) 6:22:20 மீ கண்ணன்
16) 6:23:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
17) 6:24:12 ராமராவ்
18) 6:32:24 மடிப்பாக்கம் தயானந்தன்
19) 6:33:39 ஆர்.நாராயணன்.
20) 6:33:48 மும்பை ஹரிஹரன்
21) 6:34:04 மீ.பாலு
22) 6:35:35 முத்துசுப்ரமண்யம்
23) 6:35:56 கு. கனகசபாபதி, மும்பை
24) 6:37:16 எஸ் பி சுரேஷ்
25) 6:39:46 ஹரி பாலகிருஷ்ணன்
26) 6:41:14 லக்ஷ்மி ஷங்கர்
27) 6:43:49 மீனாக்ஷி
28) 6:47:40 ரமணி பாலகிருஷ்ணன்
29) 6:49:36 KB
30) 6:52:04 சதீஷ்பாலமுருகன்
31) 6:57:28 ரங்கராஜன் யமுனாச்சாரி
32) 7:19:14 ராதா தேசிகன்
33) 7:21:26 மாதவ்
34) 7:26:10 மாலதி
35) 7:46:22 திருக்குமரன் தங்கராஜ்
36) 8:00:00 மு க பாரதி
37) 8:02:08 கேசவன்
38) 8:03:47 சுந்தர் வேதாந்தம்
39) 8:12:26 செந்தில் சௌரிராஜன்
40) 8:17:46 சுபா ஸ்ரீநிவாசன்
41) 8:19:35 பினாத்தல் சுரேஷ்
42) 8:24:54 கி மூ சுரேஷ்
43) 8:36:30 மீனாக்ஷி கணபதி
44) 9:10:18 லதா
45) 9:13:25 கோவிந்தராஜன்
46) 9:40:48 Siddhan Subramanian
47) 9:41:47 அம்பிகா
48) 13:13:32 தேன்மொழி
49) 17:55:21 மு.க.இராகவன்.
50) 19:09:46 ஏ.டி.வேதாந்தம்
51) 19:10:07 பத்மாசனி
52) 20:30:13 வி ன் கிருஷ்ணன்
53) 20:35:16 மைத்ரேயி
**********************
Raghavan MK said…
தமிழ் இறைச்சி யின் அர்த்தம்
*இறைச்சி* பெயர்ச்சொல்
1 . *ஊன்* .
உணவாகும் (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) சதைப் பகுதி; கறி.
2 .(பழந்தமிழ் இலக்கியத்தில்) *_வெளிப்படையாகக் கூறப்படாமல் உணர்த்தப்படும் பொருள்._*

தமிழின் இலக்கண நூலான இறையனார் களவியல் நூலில் *இறைச்சி* என்ற சொல்லாடல் மிகுந்து வரும். இறைச்சி என்பதற்கு *உட்பொருள்* என்று பொருள்.

_இறைச்சி_ என்னும் சொல் *_‘இறு’_* என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. _‘தங்குதல்_ ’ என்னும் பொருள் உடையது.
கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். _அத்தகைய சொல் திறனை - புரிந்து - அறிந்து - உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது._ உள்ளுறையைப் போலவே இறைச்சிக்கும் கருப்பொருளே அடிப்படையாக அமைகிறது. இதனை _*_கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே*_ (_ 240) என்று நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். சொல்லின் பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப் பொருள், இரண்டுக்கும் மேலாக மேலும் ஒரு குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சி என்றும் அறிஞர் விளக்கம் கூறுவர்.
உதாரணம்: _அரும்பெறல் அமிழ்தம்_ _ஆர்பத மாகப்_ _பெரும்பெயர் உலகம்_ _பெறீஇயரோ அன்னை தம்இல் தமதுண் டன்ன_ _சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவின்_ _ஓங்குமலை_ _நாடனை வரும்என்_ _றோளே_ *(குறுந்தொகை, 83)*

விளக்கம்:
இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து:
இனிமை தரும் சுளைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது.

தோழி உணர்த்த விரும்பும் கருத்து:

உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான். தலைவன் என்பது, தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது.
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.