Skip to main content

விடை 3458

இன்று காலை வெளியான வெடி:
வாசம் வீசும் அம்பில் செய்யுளை நீக்கிய அறிவில்லாதவன் குழம்பினான் (5) 
இதற்கான விடை:  மணக்கும்  =  (பா) ணம் + மக்கு

Comments

Raghavan MK said…

A peek into today's riddle!
********************
*_வாசமில்லா மலரிது_* _வசந்தத்தைத் தேடுது வைகையில்லா_ _மதுரையிது_ _மீனாட்சியைத் தேடுது_ _வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது_
🌼🌼🌼🌼🌼🌼🌼
_ஆசைய காத்துல தூதுவிட்டு_
_ஆடிய பூவுல வாடை பட்டு_
*_வாசம் பூவாசம்_* _வாலிப காலத்து நேசம்_
_மாசம் தை மாசம்_
_மல்லிகை பூ மனம் வீசும்__
🌸🌸🌸🌸🌸🌸🌸
_வாசம் வீசும் அம்பில் செய்யுளை நீக்கிய அறிவில்லாதவன் குழம்பினான் (5)_ 

_அம்பில்_ = *பாணம்*
_செய்யுளை_ = *பா*
_அம்பில் செய்யுளை நீக்கிய_ = *பாணம்-பா=ணம்*
_அறிவில்லாதவன்_ = *மக்கு*
_குழம்பினான்_
= *மக்கு+ணம்* when rearranged
= *மணக்கும்*
= _வாசம் வீசும்_

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_மல்லிகை மல்லிகை பந்தலே_
_அடி *மணக்கும்*_ _மல்லிகை பந்தலே_ __என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே_
_கண்கள் மயங்கி__
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

_*அறிவில்லாதவன்* அடுத்தவனை மாற்ற முயற்சிக்கும் கதை_

ராமுவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். ராமு இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை. ”என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,” என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார். பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார். மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விஷயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம். பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய ராமுவை போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!. நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்.
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (40):

1) 6:02:06 சுந்தர் வேதாந்தம்
2) 6:02:31 இரா.செகு
3) 6:06:01 ரவி சுந்தரம்
4) 6:06:27 கேசவன்
5) 6:07:48 கி மூ சுரேஷ்
6) 6:07:55 அம்பிகா
7) 6:08:01 KB
8) 6:11:22 ராமராவ்
9) 6:24:58 ராஜா ரங்கராஜன்
10) 6:26:40 முத்துசுப்ரமண்யம்
11) 6:35:59 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:37:25 மீ பாலு
13) 6:39:02 நாதன் நா தோ
14) 6:39:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:41:50 சதீஷ்பாலமுருகன்
16) 6:42:05 மீனாக்ஷி
17) 6:46:38 ஆர்.நாராயணன்.
18) 6:51:22 மீ கண்ணன்
19) 6:52:11 ராஜி ஹரிஹரன்
20) 6:59:18 லதா
21) 7:05:38 வானதி
22) 7:20:56 Siddhan Subramanian
23) 7:35:21 சுபா ஸ்ரீநிவாசன்
24) 7:51:15 மாலதி
25) 8:06:17 ஹரி பாலகிருஷ்ணன்
26) 8:40:43 Sandhya
27) 9:03:12 பாலா
28) 9:14:29 மு க பாரதி
29) 9:20:26 மடிப்பாக்கம் தயானந்தன்
30) 9:20:28 மாதவ்
31) 9:25:33 தேன்மொழி
32) 9:57:33 ராதா தேசிகன்
33) 10:23:55 ருக்மணி கோபாலன்
34) 12:23:08 மு.க.இராகவன்.
35) 13:18:57 ஆர். பத்மா
36) 14:07:35 மீனாக்ஷி கணபதி
37) 15:45:01 சங்கரசுப்பிரமணியன்
38) 17:52:32 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
39) 17:57:05 கோவிந்தராஜன்
40) 20:13:53 ரங்கராஜன் யமுனாச்சாரி
**********************
Muthu said…
முதலிலேயே, வாசம் வீசும் பார்த்ததுமே "மணக்கும்" தோன்றிற்று. ஆனால் குறிப்புக்குப் பொருத்தம் பிடி படவில்லை. அம்புக்கு நாணும், அறிவில்லாதவனுக்கு முட்டாள், மூடன், மண்டு, மடையன் எல்லாம் வந்தன. கடைசியாக மக்கு வும், பாணமும் நினைவுக்கு வந்து புதிர்க் குறிப்புக்குப் பொருத்தம் பளிச்சிட்டது!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.