Skip to main content

விடை 3457

இன்று காலை வெளியான விடை:

அளவின்றிப் படிக்க  பிடிவாதம் பிடித்தும் அளவில் சிறியது  (5)

(முதலில் அளவின்றிப் படிக்க  பிடிவாதம் பிடிக்கும் எளிமை என்று இருந்ததை மாற்றினேன்).
இதற்கான விடை:  அடக்கம் 

(கைக்கு அடக்கமான  குறிப்புப் புத்தகத்தில்  எல்லோருடைய முகவரிகளையும் அவர் எழுதி வைத்திருந்தார்).

Comments

Raghavan MK said…

A peek into today's riddle!
**********************
_பழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே_
_பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து_
_பழகத் தெரிய வேணும்_

_*பிடிவாதமும்* எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது_
_பேதமில்லா இதயத்தோடு_
_பெருமையோடு பொறுமையாக_

_பழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே_
🌺🌺🌺🌺🌺🌺🌺
_அழ வைப்பது நீதான்_ _என_
_தெரிந்தும்_ ..,
_*அடம்* பிடிக்கிறது என்_ _கண்கள்..,_
_உன்னையே காண வேண்டும் என்று..,_

எழுதியவர் : M SAKTHI
🌺🌺🌺🌺🌺🌺
_அளவின்றிப் படிக்க பிடிவாதம் பிடித்தும் அளவில் சிறியது (5)_

_அளவின்றிப் படிக்க_
= *படிக்க- படி*
= *க்க*
_(படி என்பது இங்கு_
_முகத்தலளவை)_
_பிடிவாதம்_ = *அடம்*
_பிடிவாதம் பிடித்தும்_
= *அடம்+க்க*
= *அடக்கம்*
= _அளவில் சிறியது_
_(கைக்கு அடக்கமாயுள்ளது)_
★***★***★***★***★
*குறள் 121:*
_*அடக்கம்* அமரருள் உய்க்கும் அடங்காமை_
_ஆரிருள் உய்த்து விடும்_ .

*அடக்கம்* ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; *அடக்கம்* இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
🌺🌺💐🌺🌺🌺🌺🌺
*_ஒளவையார் அருளிச்செய்த மூதுரை_*

_*அடக்கம்* உடையார் அறிவிலர்_ _என்றெண்ணிக்_
_கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்_ _தலையில்_
_ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்_
_வாடி இருக்குமாம் கொக்கு._

*விளக்கம்*
நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் *அடக்கமும்* . அதைக் கண்டு அவர்களை அலட்சியம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது 🙏🏼
************************
நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையைப் பார்க்க வேண்டும் என்று *பிடிவாதம்* பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று *பிடிவாதம்* பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது!

உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.

*எடை 0 என்று!!* 😀😀
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (52):

1) 6:01:20 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:53 திருமூர்த்தி
3) 6:03:37 சுந்தர் வேதாந்தம்
4) 6:03:38 ராஜா ரங்கராஜன்
5) 6:04:10 ரவி சுந்தரம்
6) 6:05:50 ஆர் .பத்மா
7) 6:07:08 கி மூ சுரேஷ்
8) 6:07:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9) 6:08:17 பிரசாத் வேணுகோபால்
10) 6:08:58 கோவிந்தராஜன்
11) 6:13:12 KB
12) 6:14:24 வி ன் கிருஷ்ணன்
13) 6:15:50 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:20:19 Sandhya
15) 6:22:16 சங்கரசுப்பிரமணியன்
16) 6:23:21 ராமராவ்
17) 6:29:58 உஷா
18) 6:36:32 Siddhan Subramanian
19) 6:36:37 எஸ் பி சுரேஷ்
20) 6:41:10 கேசவன்
21) 7:05:32 ஆர்.நாராயணன்.
22) 7:11:09 கு. கனகசபாபதி, மும்பை
23) 7:38:46 ஹரி பாலகிருஷ்ணன்
24) 7:42:54 மு க பாரதி
25) 8:05:27 புவனா சிவராமன்
26) 8:05:54 சுபா ஸ்ரீநிவாசன்
27) 8:11:53 பினாத்தல் சுரேஷ்
28) 8:18:40 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29) 8:29:24 அம்பிகா
30) 8:37:55 ருக்மணி கோபாலன்
31) 8:45:45 லட்சுமி சங்கர்
32) 9:05:39 மைத்ரேயி
33) 9:45:06 லதா
34) 10:03:46 வித்யா ஹரி
35) 10:32:40 ரவி சுப்ரமணியன்
36) 10:51:12 வானதி
37) 11:02:50 சதீஷ்பாலமுருகன்
38) 11:03:36 பானுமதி
39) 11:56:08 ராஜி ஹரிஹரன்
40) 14:19:03 மீ கண்ணன்
41) 14:25:21 மாலதி
42) 14:50:25 மடிப்பாக்கம் தயானந்தன்
43) 15:01:12 மு.க.இராகவன்.
44) 15:01:12 மீனாக்ஷி கணபதி
45) 15:40:08 ஸௌதாமினி
46) 16:40:00 ரங்கராஜன் யமுனாச்சாரி
47) 16:44:39 மீனாக்ஷி
48) 18:48:45 நாதன் நா தோ
49) 19:15:27 முத்துசுப்ரமண்யம்
50) 19:15:29 சாந்தி நாராயணன்
51) 19:16:33 மீ.பாலு
52) 20:03:55 R.kousik
**********************
Raghavan MK said…


Please note.
அளவில் சிறியது
எளிமை
என மாறியுள்ளது
Muthu said…
பிடிவாதம் என்றால் அடம் என்பது தோன்ற வெகு நேரம் ஆகியது. அகராதிகளில் (எனக்கு அகராதி பார்க்காமல் பொருள் தெரியாது!) உறுதி என்றுதான் இருந்தது. வீம்பு என்பது எனக்கே தோன்றியது. அடம் தோன்றாமல் அடம் பிடித்தது. ஔவையாரின் கூற்று:
"கற்றதுகைம் மண்ணளவு கல்லாததுலகளவென்
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்தயம் கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன்கையால் எண் சாண்"

எத்துணைதான் கற்றாலும் (அளவின்றிப் படித்தாலும்) அது (மேலும் கற்க வேண்டியவற்றோடு நோக்குங்கால்) கைக்குள் "அடக்க"மாகிவிடும் அளவேயாம்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்