Skip to main content

விடை 3466

இன்று காலை வெளியான வெடி:
குழம்பு, குருமா முதலில் தவிர்த்தால் இப்படியாகும் தின்பண்டம் (6)
இதற்கான விடை: இடியாப்பம்= இப்படியாகும் - கு (ருமா)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (20):

1) 6:13:28 மீ கண்ணன்
2) 6:22:10 ருக்மணி கோபாலன்
3) 6:30:10 எஸ்.பார்த்தசாரதி
4) 6:30:32 ரவி சுந்தரம்
5) 6:31:16 மீ.பாலு
6) 6:31:40 முத்துசுப்ரமண்யம்
7) 6:32:02 மீனாக்ஷி
8) 6:53:01 Siddhan Subramanian
9) 7:09:26 மாலதி
10) 7:57:26 மு க பாரதி
11) 8:18:43 ராஜா ரங்கராஜன்
12) 8:22:45 கோவிந்தராஜன்
13) 10:48:00 பானுமதி
14) 12:34:00 சங்கரசுப்பிரமணியன்
15) 13:50:17 கு. கனகசபாபதி, மும்பை
16) 14:47:16 செந்தில் சௌரிராஜன்
17) 17:01:25 அம்பிகா
18) 18:28:47 ராமராவ்
19) 19:14:12 KB
20) 19:47:23 எஸ் பி சுரேஷ்
*****************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************
*மாலை நேர டிபன்* காமாட்சி மகாலிங்கம் சேவை என்பது *இடியாப்பம்* . எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம் தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம். இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக் கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம், தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும். _இப்போது *இடியாப்பம் குருமா* தான் முதலிடத்தில் இருக்கிறது._

இடியாப்பம் குருமா
செய்
_தேவையானப் பொருட்கள்_

2 கப் இடியாப்ப மாவு
3 கப் தண்ணீர்
2 கப் நறுக்கப்பட்ட காய்கறிகள் கேரட்டு, உருளைக்கிழங்கு, பட்டாணி
கிராம்பு, சோம்பு, ஏலக்காய்
1 பச்சை மிளகாய்
1/2 கப் தேங்காய் பால்
1 கப் தேங்காய் துருவல்
1 கப் உலர் கடலைப் பருப்பு அல்லது பொட்டுக்கடலை

_செய்முறை_
தண்ணீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் உப்பு, எண்ணெயைச் சேர்க்கவும்.

கொதி வந்ததும் ரெடிமேட் இடியாப்ப மாவைச்சேர்த்து மிருதுவாகும்வரை கலக்கவும்.

இவற்றை உருண்டைகளாக எடுத்துக்கொள்ளவும், இடியாப்ப அச்சியைக் கொண்டு மாவை பிழியவும்.

இடியாப்பத்தை 10-15 நிமிடங்களுக்கு ஒரு இட்லி குண்டானில் வேகவைக்கவும்.
இடியாப்பம் தயாராகிவிடும்.
குருமாவுக்கு காய்கறிகளை வேகவைத்து சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
மசாலா, மிளகாய், உலர் கடலைப்பருப்பு, தேங்காய் ஆகியவற்றை மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
தேங்காய்ப் பாலில் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
*இடியாப்பம் குருமா தயார்.* 😛😛
***************
_குழம்பு குருமா முதலில் தவிர்த்தால் இப்படியாகும் தின்பண்டம்  (6)_

_குருமா முதலில்_
= *கு*

_தவிர்த்தால் இப்படியாகும்_
= *கு* வை நீக்கினால்
= *இப்படியாகும் - கு*
= *இப்படியாம்*
_குழம்பு_
= _இப்படியாம் மாற்றி எழுத வருவது_
( _anagram_ ) *இடியாப்பம்*

= _தின்பண்டம்_
*******************
_வா வாத்யாரே_ _ஊட்டாண்டே - நீ வராங்காட்டி நான் உடமாட்டேன் ஜாம்பஜார் ஜக்கு நான்_ _சைதாப்பேட்ட கொக்கு_

_நைனா உன் நினப்பாலே நான்_ 
_நாஸ்தா பண்ணி நாளாச்சு_
_மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்தேன்_ 
_சால்னா நெனப்பு வந்தாச்சு_

_ஆயா கடை *இடியாப்பம்* நான்_ _பாயாக்கறியும் நீயாச்சு_
_வாவா மச்சான்_ _ஒண்ணா சேந்து_ _வாராவதிக்கே_ _போகல்லாம்!_ ......
😀😀
*********************
💐🙏🏼💐
Muthu said…
ஆறெழுத்துத் தின்பண்டம் என்றதும் இடியாப்பம், வெங்காயவடை நினைவுக்கு வந்தது. வெங்காய வடை (4,2) என்பதால், இடியாப்பம் பொருந்தும். ஆனால் புதிர்க் குறிப்புக்குப் பொருத்தம் (இப்படியாகும் - கு, குழம்பு) புரிபட நேரம் பிடித்தது!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்