Skip to main content

விடை 3263

இன்று (31/03/2018) காலை வெளியான வெடி
மாமாங்கத்திற்கு ஒரு முறை கனியுணவு உண்பவர் சற்று முன்பே பிறந்திருந்தால் துலாராசிக்காரர்  (6)
இதன் விடை:  விருச்சிகர். மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடப்படும் இவர் பன்னிரண்டாண்டுகளுக்கு.  ஒரு முறை நாவல் பழத்தை மட்டும் சாப்பிடுவார்.
(சற்று முன்பே பிறந்திருந்தால், விருச்சிகத்திற்கு முந்தையராசியான  துலாம் ராசி.
)
அவ்வாறாக நாவற்கனியைத் தயாராக வைத்துவிட்டு  அவர்  குளத்தில் குளித்துக் 
கொண்டிருந்தபோது அவ்வழி வந்த காயசண்டிகை கவனமின்றி அதை மிதித்து உருக்குலைத்துவிட்டாள்.  அதனால் அடுத்த பன்னிரு ஆண்டுகள் தான் பசியாக இருக்கையில் காயசண்டிகையும் அடங்காப் பசியால் துன்புற வேண்டும் என்று சாபமிட்டார். (இந்தக் காப்பியப் புத்தகத்தை நான் எடுத்துப் படித்ததில்லை. கும்பகோணம் பாணாதுறைப் பள்ளியில் என்னுடைய தமிழாசிரியர் எட்டாம் வகுப்புப்  பாடம் நடத்திய போது சொன்னது.)

சரியான விடையளித்தவர்கள், மூன்று வகையாக:  ஒற்றை நட்சத்திரம்
 பெற்றவர்கள் (1 பேர்) விடையை மட்டும் அனுப்பியுள்ளார்கள். இரண்டு நட்சத்திரம் பெற்றவர்கள் ( 4 பேர்)
 ஓரளவு சரியான விளக்கம் அளித்துள்ளார்கள்
மூன்று நட்சத்திரம் பெற்றவர்கள் (10 பேர்) முழுதும் சரியான விளக்கத்தை அளித்துள்ளார்கள்

   6:05:27 ரங்கராஜன் யமுனாச்சாரி **    
   6:17:35 ரவி சுப்ரமணியன்      ***
   7:28:48 அம்பிகா ***   
   7:34:20 ராஜி ஹரிஹரன் ***               
   7:44:37 கு.கனகசபாபதி ***
   7:56:18 வானதி ***
   8:04:56 லதா    **
   8:16:26 ரவி சுந்தரம்  **           
  10:06:58 கி. பாலசுப்ரமணியன்     ***
  11:32:30 சுபா ஸ்ரீநிவாசன் ***
  13:23:38 மீனாக்ஷி கணபதி    ***
  15:05:04 மைத்ரேயி சிவகுமார்  *           
  20:00:45 விஜயா ரவிஷங்கர் *
   20:19:58 ரா. ரவிஷங்கர் ***
  20:25:37 ருக்மணி கோபாலன் **
  20:45:55 சுந்தர் வேதாந்தம் ***

-->

Comments


இருவர் ஒரு நட்சத்திரம் பெற்றுள்ளனர். மொத்தம் 16 பெயர்கள்
Muthu said…
இண்டர்மீடியட்டில் மணிமேகலை கொஞ்சம் இருந்தது. காயசண்டிகையின் தீராப்பசி தெரியும். ஆனால் இந்த விருச்சிகர் வியவஹாரம் படித்ததில்லை!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்