Skip to main content

விடை 4065



இன்று காலை வெளியான வெடி:
பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை  மாவை துடைத்துக் கசக்கு  (5)

அதற்கான விடை:  விநாயகர்  = நாகமா + வியர்வை - மாவை




மஹாபாரதக்கதையை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் அதை எழுதினார் என்பது வழக்கு.  பெர்ரி மேசன் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரம் இடம்பெறும்
கொலை வழக்குக் கதைகளின் ஆசிரியரான  எர்ல் ஸ்டேன்லி கார்ட்னர் வாயால் சொல்லி ஒலிப்பதிவு செய்த பின் அதை உதவியாளர்கள்  கேட்டு எழுதி/தட்டச்சிட்டு  பதிப்பகத்திற்கு அனுப்புவார்களாம்.
 விநாயகர் வேகமாக எழுதும் திறம் பெற்றதால் நேரடியாகவே எழுதிவிட்டாராம்.


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.




Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
வியாசர் விநாயகரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன் நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார். அதற்கு உடன்பட்டு வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதினார்
*********************
பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை மாவை துடைத்துக் கசக்கு  (5)
மாவை துடைத்து
= (நாகமா? வியர்வை) யில் "மா, வை" , என்ற 2 எழுத்துக்களை நீக்க
=நாக(மா)வியர்(வை)
= நாகவியர்

கசக்க = anagram of நாகவியர்
= விநாயகர்

பாரதத்தை எழுதியது
=விநாயகர்
*********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்