** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா? இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லோரும் உடந்தையா? இது புதிருங்க. படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான சூத்திரம். சுற்றமும், நட்பும் சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள் சுற்ற : வட்டமிட ம் : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள் = வட்டமிட ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "=" குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...
Comments
************************
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் ராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது ராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் கல்பனசுவரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.
************************
பரபரப்பின்றி இரு ஸ்வரங்களுக்குட்பட்ட ராகத்தைத் தொடர்ந்து பாடுவதா? (5)
ராகத்தைத் தொடர்ந்து
= ராகம், ---> தானம், பல்லவி
= தானம்
பாடுவதா? = தானமா (?)
இரு ஸ்வரங்கள் = நி , க
இரு ஸ்வரங்களுக்குட்பட்ட
= நி(தானமா)க
= நிதானமாக
= பரபரப்பின்றி
************************