Skip to main content

விடை 4063

 இன்று காலை வெளியான வெடி:

ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6) 

 அதற்கான விடை:  வஞ்சித்தளை  = வஞ்சித்தவளை  - வ (1/4)

சரவெடியில்  ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியிடம் புலவர் காண்பது (2) என்பதற்கான  விடையைப் புரிந்து விடையளித்தவர்கள் இன்று அளித்திருப்பார்கள். அல்லது இன்றைய விடையைப் புரிந்து அளித்தவர்கள் அதன் பிறகு சரவெடியில் விடுபட்டிருந்தால் சேர்த்திருப்பார்கள்!

ஒரு வேண்டுகோள், ஏற்கனவே சொன்னதுதான். அதன்படி நீங்கள் எல்லோரும்  உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இவ்வெடிகளைப் பற்றித் தெரிவித்து வரவைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரவெடிக்குப் பிறகு உதிரிவெடிகள் சப்பென்று இருந்தால் இணையத்தில் வேறு இருக்கின்றன.  எஸ். பார்த்தசாரதி அவர்கள்  நூற்றுக்கு மேற்பட்டவைகள் தன்னுடைய வலைத் தளத்தில் வைத்திருக்கிறார்.  தமிழ்ப்புதிருக்கு ஆங்கிலத்தில் குறிப்பு என்று பல வகைகள் வைத்துள்ளார்.

ராமராவ் என்பவர்கள் அமைப்பதற்குக் கடுமையான வகையாகத் திரப்படப் பெயர்கள்/பாடல்கள் மட்டுமே கொண்டு தொடர்ந்து மாதந்தோறும்  சில வருடங்களாகச் செய்து வருகிறார், அதற்குm வேறு சில சொல்  விளையாட்டுகளுக்கும்   இங்கே சொடுக்கவும்.

சரி,   இன்றைய உதிரிவெடி க்கு
 அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் .

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
The சரவெடி connection in today's உதிரிவெடி !

ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2)

விடை : தளை
**********************
ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6) 
ஏமாற்றிய பெண்ணை
= வஞ்சித்தவளை

கால்= வ

காலொடிக்கப் பெற்றது
= வஞ்சித்தவளை- வ
= வஞ்சித்தளை

=தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம்
**********************
(மூவசை சீர் ,
நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
நிரை/நேர்/நிரை – புளிமாங்கனி

நின்ற சீரின்  ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும்.
இது ஒன்றிய வஞ்சித்தளை)
**********************
Vanathy said…
புதிர்க்கட்டத்தில்தளை பற்றி வநததால் இன்றைக்கு விடை
கண்டு பிடிக்க முடிந்தது. இது போன்ற இலக்கணக்குறிப்புகள்
சில சொற்கள் பாடத்தில் படித்திருந்தாலும் அவற்றை பிரயோகிக்க பிரமேயமே வாய்ப்பதில்லே.வாஞ்சி சார் அவைகளை நினைவு கூற வாய்ப்பு அளித்துக்கொண்டே இருக்கும் உங்கள் பணி வாழ்க வளர்
Vanchinathan said…
@வானதி: பள்ளிக் கூடப் பாடம் பற்றி ஆசையாக ஆசிரியத் தொழில் பார்க்கும் என்னிடம் சொன்னால் மாட்டிக் கொள்வீர்கள். அப்புறம் கணக்கு, பூகோளம், சரித்டிரம் என்று கேள்வி கேட்டிடுவேன்.
நீங்கள் எல்லா இடங்களிலிம் வாய்பாடு என்று
எழுதுகிறீற்கள். ஆனால் நான் படித்தது
வாய்ப்பாடு(ப்) சேர்த்தது. எது சரி?
Vanchinathan said…
வி என் கிருஷ்ணன்: அதற்கு நான் இரண்டு நாட்களுக்கு முன்பே பதிலளித்து விட்டேன்,

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்