Skip to main content

விடை 4063

 இன்று காலை வெளியான வெடி:

ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6) 

 அதற்கான விடை:  வஞ்சித்தளை  = வஞ்சித்தவளை  - வ (1/4)

சரவெடியில்  ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியிடம் புலவர் காண்பது (2) என்பதற்கான  விடையைப் புரிந்து விடையளித்தவர்கள் இன்று அளித்திருப்பார்கள். அல்லது இன்றைய விடையைப் புரிந்து அளித்தவர்கள் அதன் பிறகு சரவெடியில் விடுபட்டிருந்தால் சேர்த்திருப்பார்கள்!

ஒரு வேண்டுகோள், ஏற்கனவே சொன்னதுதான். அதன்படி நீங்கள் எல்லோரும்  உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இவ்வெடிகளைப் பற்றித் தெரிவித்து வரவைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரவெடிக்குப் பிறகு உதிரிவெடிகள் சப்பென்று இருந்தால் இணையத்தில் வேறு இருக்கின்றன.  எஸ். பார்த்தசாரதி அவர்கள்  நூற்றுக்கு மேற்பட்டவைகள் தன்னுடைய வலைத் தளத்தில் வைத்திருக்கிறார்.  தமிழ்ப்புதிருக்கு ஆங்கிலத்தில் குறிப்பு என்று பல வகைகள் வைத்துள்ளார்.

ராமராவ் என்பவர்கள் அமைப்பதற்குக் கடுமையான வகையாகத் திரப்படப் பெயர்கள்/பாடல்கள் மட்டுமே கொண்டு தொடர்ந்து மாதந்தோறும்  சில வருடங்களாகச் செய்து வருகிறார், அதற்குm வேறு சில சொல்  விளையாட்டுகளுக்கும்   இங்கே சொடுக்கவும்.

சரி,   இன்றைய உதிரிவெடி க்கு
 அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் .

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
The சரவெடி connection in today's உதிரிவெடி !

ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2)

விடை : தளை
**********************
ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6) 
ஏமாற்றிய பெண்ணை
= வஞ்சித்தவளை

கால்= வ

காலொடிக்கப் பெற்றது
= வஞ்சித்தவளை- வ
= வஞ்சித்தளை

=தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம்
**********************
(மூவசை சீர் ,
நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
நிரை/நேர்/நிரை – புளிமாங்கனி

நின்ற சீரின்  ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும்.
இது ஒன்றிய வஞ்சித்தளை)
**********************
Vanathy said…
புதிர்க்கட்டத்தில்தளை பற்றி வநததால் இன்றைக்கு விடை
கண்டு பிடிக்க முடிந்தது. இது போன்ற இலக்கணக்குறிப்புகள்
சில சொற்கள் பாடத்தில் படித்திருந்தாலும் அவற்றை பிரயோகிக்க பிரமேயமே வாய்ப்பதில்லே.வாஞ்சி சார் அவைகளை நினைவு கூற வாய்ப்பு அளித்துக்கொண்டே இருக்கும் உங்கள் பணி வாழ்க வளர்
Vanchinathan said…
@வானதி: பள்ளிக் கூடப் பாடம் பற்றி ஆசையாக ஆசிரியத் தொழில் பார்க்கும் என்னிடம் சொன்னால் மாட்டிக் கொள்வீர்கள். அப்புறம் கணக்கு, பூகோளம், சரித்டிரம் என்று கேள்வி கேட்டிடுவேன்.
நீங்கள் எல்லா இடங்களிலிம் வாய்பாடு என்று
எழுதுகிறீற்கள். ஆனால் நான் படித்தது
வாய்ப்பாடு(ப்) சேர்த்தது. எது சரி?
Vanchinathan said…
வி என் கிருஷ்ணன்: அதற்கு நான் இரண்டு நாட்களுக்கு முன்பே பதிலளித்து விட்டேன்,

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்