Skip to main content

விடை 3379

விடை 3379 (25/07/2018)
இன்று காலை வெளியான வெடி
தீச்செயல் கள்வர் தலைவனைப் பிடித்து அடி (4)
இதற்கான விடை : பாதகம் = பாதம் (அடி) + க

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
————👇🏽————

*_பஞ்சமாபாதகம்_* என்பது
கொலை, பொய், களவு, மது அருந்துதல், மற்றும் குரு நிந்தை என்ற ஐந்து பெரும் *_தீச்செயல்களை_* குறிப்பிடுவதாகும்!
★★★★★

புதிரில் _அடி யெடுத்து_ வைக்குமுன்னர்.........

*அடி*
காலின் கீழ்ப்பகுதி; பாதம்.
எ.கா :-
‘சிவனின் அடியையும் முடியையும் தேடிக் காணச் சென்ற கதை’

‘அந்த மகானின் அடி வணங்கி ஆசி பெற்றார்கள்’

மேலும் அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறினுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து ,அசை ,சீர் பந்தம், அடி ,தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது.

மனிதன், விலங்கு முதலியன _அடிகளால்_ நடக்கின்றன. நடக்கத் துணையாகும் _அடியைப்_ ‘ *பாதம்* ’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘ *பாதம்* ’ என்கின்றார்.
“ ‘... ... ... ; _அத்தளை_
_அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு_
_தொடுத்துமன் சேறலின் தொடையே’_ ”

என்னும் நூற்பா, ‘ _அடி_ ’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது.
*************************
_தீச்செயல் கள்வர் தலைவனைப் பிடித்து அடி (4)_
*************************
_அடி_
= *பாதம்*

_கள்வர் தலைவனை_
= *க* (ள்வர்)

_பிடித்து அடி_
= *க* inside *பாதம்*
= *பாதகம்*

_தீச்செயல்_
= *பாதகம்*
**********************
பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார்.

பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,
_பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா_
_மோதி மிதித்து விடு பாப்பா_ _அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா_ "
என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.

வீரத்திற்கான விவேகத்திற்கான உத்திரவாதத்தை நாமும் நம் சமுதாயமும் எப்போது நம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கப்போகிறோம்? 🙅🏻‍♀

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

(எப்போது கள்வர் தலைவனை பிடித்து அடிக்கப் போகிறோம்? 😌)
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (39):

1) 6:01:07 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:31 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:03:46 சுந்தர் வேதாந்தம்
4) 6:04:43 முத்துசுப்ரமண்யம்
5) 6:08:44 சதீஷ்பாலமுருகன்
6) 6:12:47 லதா
7) 6:13:36 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:21:28 ரவி சுந்தரம்
9) 6:23:27 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:25:08 ரவி சுப்ரமணியன்
11) 6:26:08 சுபா ஸ்ரீநிவாசன்
12) 6:28:06 கேசவன்
13) 6:31:35 கு.கனகசபாபதி, மும்பை
14) 6:35:50 ஆர்.நாராயணன்.
15) 6:44:01 ஆர். பத்மா
16) 6:50:45 ரங்கராஜன் யமுனாச்சாரி
17) 6:51:30 KB
18) 7:04:15 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
19) 7:11:01 எஸ் பி சுரேஷ்
20) 7:17:32 கி மூ சுரேஷ்
21) 7:25:01 சித்தன்
22) 7:30:35 லட்சுமி சங்கர்
23) 8:03:19 புவனா சிவராமன்
24) 8:25:53 மைத்ரேயி
25) 8:30:14 ஶ்ரீவிநா
26) 9:11:33 ராஜி ஹரிஹரன்
27) 9:41:48 ரமணி பாலகிருஷ்ணன்
28) 10:30:03 ராஜா ரங்கராஜன்
29) 10:46:48 சங்கரசுப்பிரமணியன்
30) 11:51:17 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 12:01:03 மு.க.இராகவன்.
32) 12:34:23 வானதி
33) 12:46:30 கோவிந்தராஜன்
34) 12:50:43 அம்பிகா
35) 15:00:50 மாதவ்
36) 16:05:20 மு க. பாரதி
37) 17:08:51 ராதா தேசிகன்
38) 18:46:23 மாலதி
39) 20:03:57 மீனாக்ஷி
**********************
Muthu said…
மிகச் சிறந்த கருத்துப் பகிர்வு. நன்றி (சொன்னால் *பாதகம்* இல்லை!)

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.