Skip to main content

விடை 3378


இன்று (24 ஜூலை 2018) வெளியான வெடி:
மேலே உயர்த்த அரைக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காதிலாடும் (5)

இதற்கான விடை: தூக்கணம் = தூக்க + ணம். இலைங்கைத் தமிழில் தொங்கட்டான் (கம்மல்?).  காதோடு ஒட்டியிருக்காமல் தொங்கிக் கொண்டிருக்கும் வகையான காதணி.

தமிழ்நாட்டில் தூக்கணம் என்று ஒரு குருவி வகையையே குறிப்பிடுகிறோம்.
(இது தவறாக இருந்தால் சொல்லுங்கள்).
மற்ற பறவைகள் தங்கள் கூட்டினை மரக் கிளைமேல் அமைத்துக் கட்டும். ஆனால் இக்குருவியோ மரத்திலிருந்து தொங்குமாறு கட்டும்.  அதனால்தானோ இலங்கையில் தொங்கும் காதணியைத் தூக்கணம் என்றழைக்கிறார்கள் போலும்!




தூக்கணங் குருவி கூடு கட்டுவதைப் புனே நகரில் ஒருவர் காணொளியாய் வெளியிட்டுள்ளது  இதோ:

சிறுவயத்தில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் குரங்கு பறவைக் கூட்டைச் சிதைத்த கதை வந்திருக்கும். அது தூக்கணங் குருவிதான். விவேக சிந்தாமணியில் இடம்பெற்ற உவமை:

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே

தூக்கணங்குருவியைச் சொல்லும் தெலுங்குக் குயில் இங்கே:


Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (39):

1) 6:06:16 ரவி சுப்ரமணியன்
2) 6:08:12 ஶ்ரீவிநா
3) 6:08:39 இரா.செகு
4) 6:08:48 சதீஷ்பாலமுருகன்
5) 6:10:01 மீனாக்ஷி கணபதி
6) 6:10:57 ராஜா ரங்கராஜன்
7) 6:11:23 சங்கரசுப்பிரமணியன்
8) 6:11:34 எஸ் பி சுரேஷ்
9) 6:13:51 திருமூர்த்தி
10) 6:14:07 ரவி சுந்தரம்
11) 6:24:27 K.R.Santhanam
12) 6:35:03 முத்துசுப்ரமண்யம்
13) 6:41:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:45:21 லக்ஷ்மி ஷங்கர்
15) 7:04:58 ஸௌதாமினி
16) 7:06:40 சித்தன்
17) 7:10:36 ஆர்.நாராயணன்.த்ட்ட்
18) 7:14:50 கி மூ சுரேஷ்
19) 7:25:31 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
20) 7:31:38 அம்பிகா
21) 7:39:14 கோவிந்தராஜன்
22) 7:40:48 மீ.பாலு
23) 8:46:16 மீனாக்ஷி
24) 9:07:14 மு க பாரதி
25) 9:30:31 நாதன் நா தோ
26) 9:40:19 மடிப்பாக்கம் தயானந்தன்
27) 10:15:58 பாலா
28) 10:40:57 மாலதி
29) 10:53:26 ஆர். பத்மா
30) 10:55:14 KB
31) 11:05:51 கோபாலகிருஷ்ணன்
32) 11:34:00 தேன்மொழி
33) 12:40:43 ராஜி ஹரிஹரன்
34) 12:44:02 விஜயா ரவிஷங்கர்
35) 14:26:33 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
36) 15:30:41 மாதவ்
37) 15:56:29 மு.க இராகவன்.
38) 17:38:22 கல்யாணி தேசிகன்
39) 19:52:48 சுபா ஸ்ரீநிவாசன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle...👇🏽

தீயோருடன் பேசாதே என்ற கருத்து பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது.

குரங்குக்கு புத்திமதி சொன்ன _தூக்கணங் குருவியின்_ கூட்டை, குரங்கு பிய்த்தெறிகிறது.
இதன் மூலம் விஷ்ணுசர்மன் “தீயோருக்கு புத்திமதி சொல்லாதே” என்கிறார்.

இந்தப் பஞ்ச தந்திரக் கதையை விவேக சிந்தாமணி என்னும் நூலும் கூறுகிறது:-

“ _வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்_

_தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்_

_ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்_

_ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே”._

🐒🐒🐒🐒🐒

★★★★★★★

_மேலே உயர்த்த அரைக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காதிலாடும் (5)_

★★★★★★★

_மேலே உயர்த்த_
= *தூக்க*

_அரைக்கிண்ணம்_
= (கிண்) *ணம்*

_யாழ்ப்பாணத்தில் காதிலாடும்_
= _யாழ்ப்பாணத் தமிழில் காதணி_

= *தூக்க+ணம்* *

= *தூக்கணம்*


*tamil oxford dictionary*

_தமிழ் தூக்கணம் யின் அர்த்தம்_

*தூக்கணம்*
_பெயர்ச்சொல்_
_இலங்கைத் தமிழ் வழக்கு_
_தொங்கட்டான்_ .
(காதணி)

*Tamil wiktionary*

_தூக்கணம்(பெ)_

1. _தொங்கல் (குருவியின் கூடு போன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல்_ )
2. _உறி_
3. _தூக்கணாங்குருவி; தொங்கும் கூடு கட்டும் குருவி வகை_

&&&&&&&&&&&&&&

_தூக்கணாங்குருவி கூடு_
_தூங்கக் கண்டான் மரத்திலே_
_சும்மாப் போன மச்சானுக்கு_
_என்ன நினைப்போ மனசிலே_

_பாக்கிறான் பூமுகத்தைப்_
_பைய பைய கண்ணிலே_
_பரிசம் போட்ட மச்சானுக்கு_
_என்ன நினைப்போ தெரியல_
_தூக்கணாங்குருவி கூடு_
_தூங்கக் கண்டான் மரத்திலே_
_சும்மாப் போன மச்சானுக்கு_
_என்ன நினைப்போ மனசிலே_
😌😌😌
விடை இரண்டெழுத்தாக இருந்தது எப்பொழுது ஐந்தெழுத்தாகியது?
இரண்டெழுத்துக்கு நான் அனுப்பிய விடை "தோடு" பொருத்தமானதே.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்