Skip to main content

விடை 3371

இன்று (17 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் தமிழ் நாட்டில் கரைபுரண்டோடும் (4)
அதற்கான விடை: வெள்ளம்

கேரளாவில் (முல்லைப் பெரியாற்றின்) தண்ணீரையும்
தமிழ்நாட்டில் கரை புரண்டோடும் நீர்ப் பெருக்கையும் குறிப்பிட  "வெள்ளம்" என்கிற  ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது.

 மலையாளத்து வெள்ளம் போலவே தமிழிலும் முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
திருவள்ளுவர்  குளத்து நீரை வெள்ளம் என்று ஒரு குறளில் சொல்கிறார். குளத்தில் தேங்கியுள்ள நீரை, பெருக்கெடுத்தோடும் வெள்ளமாகக் கருத முடியாது.

வெள்ளத்  தனைய  மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்  தனைய துயர்வு
என்பதில் வெள்ளம் என்பது ஆற்றின் பெருக்கல்ல (குளத்தில்தானே தாமரை போன்ற மலர்கள் மலரும்). 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:00:56 திருமூர்த்தி
2) 6:01:26 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:32 ரங்கராஜன் யமுனாச்சாரி
4) 6:02:02 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
5) 6:04:16 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:07:53 சதீஷ்பாலமுருகன்
7) 6:07:54 லட்சுமி சங்கர்
8) 6:09:32 முத்துசுப்ரமண்யம்
9) 6:10:09 ராஜா ரங்கராஜன்
10) 6:10:20 வி சீ சந்திரமௌலி
11) 6:11:48 மீ.பாலு
12) 6:14:56 நாதன் நா தோ
13) 6:17:01 மீனாக்ஷி கணபதி
14) 6:17:55 மாலதி
15) 6:18:10 ரவி சுந்தரம்
16) 6:21:50 K.R.Santhanam
17) 6:22:00 கேசவன்
18) 6:27:55 மீ கண்ணன்
19) 6:36:37 சுந்தர் வேதாந்தம்
20) 6:48:52 ரவி சுப்ரமணியன்
21) 6:55:40 ராதா தேசிகன்
22) 7:05:03 லதா
23) 7:07:38 Sucharithra
24) 7:23:34 மடிப்பாக்கம் தயானந்த்
25) 7:25:04 கி மூ சுரேஷ்
26) 7:26:07 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
27) 7:29:20 கல்யாணி தேசிகன்
28) 7:31:38 வானதி
29) 8:05:30 வி ன் கிருஷ்ணன்
30) 8:09:20 பினாத்தல் சுரேஷ்
31) 8:42:27 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
32) 9:17:27 மீனாக்ஷி
33) 9:46:21 மும்பை ஹரிஹரன்
34) 10:34:29 சித்தன்
35) 11:00:46 கு.கனகசபாபதி, மும்பை
36) 11:30:14 ஆர்.நாராயணன்.
37) 11:49:04 சுபா ஸ்ரீநிவாசன்
38) 11:58:07 தி பொ இராமநாதன்
39) 12:23:38 ராஜி ஹரிஹரன்
40) 13:04:54 ஆர் .பத்மா
41) 14:53:27 அம்பிகா
42) 16:09:17 பாலா
43) 18:33:34 ஏ.டி.வேதாந்தம்
44) 18:33:58 பத்மாசனி
45) 19:56:44 ஶ்ரீவிநா
46) 20:09:33 கோவிந்தராஜன்
47) 20:30:15 மு.க.இராகவன்.
48) 20:56:27 ஶ்ரீதரன்

**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
............👇🏽.....

பெரியாறு உருவாவதும் கூட தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிவகிரி மலையில் தான். ஆயினும் ,தமிழகத்தில் உருவாகி பின் கேரளத்தில் உள்ள முல்லை ஆற்றுடன் இணைவதால் தான் இது முல்லைப்பெரியாறு என்று அழைக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை (Mullaperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்

_முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் தமிழ் நாட்டில் கரைபுரண்டோடும் (4)_

முல்லைப் பெரியாற்றின் தண்ணீர்
= *வெள்ளம்* .

(முல்லைப் பெரியாறு கேரளாவில் பாய்வதால் மலையாளத்தில் தண்ணீரை *வெள்ளம்* என சொல்வோம்)

தமிழ் நாட்டில்
கரைபுரண்டோடும்
= *வெள்ளம்* .

( தமிழில் , "காட்டாற்று *வெள்ளம்* கரைபுரண்டோடுகிறது",எனக்கூறுவது வழக்கு...(flood))

[முல்லை = காடு
பெரியாறு = ஆறு
=காட்டாறு]

_முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது_

🙏🏽
அருமை அருமை ராகவன் அய்யா!
Raghavan MK said…
நன்றி

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.