Skip to main content

விடை 3807

திரிசுரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-1876

தன்னுடைய ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் கவிதை எழுதும் திறமையை வியந்து உவேசா குறிப்பிடும் பல நிகழ்ச்சிகளில் ஒன்று இது. யாரோ ஒருவருக்கு அவர்கள் ஊர் கோயில் சிறப்பை விவரித்து தல புராணம்  எழுதித் தருவதாக ஆசிரியர் வாக்களித்திருந்தார். மாயுரத்திலிருந்து கிளம்பி 20கிமீ தூரத்திலுள்ள திருவாவடுதுறை   மடத்துக்குச் செல்கிறார்கள்.  மாட்டு வண்டியில் போகும்போதே அவர் இயற்றிவிட்டாராம். உவேசாவின் வார்த்தைகளில் "மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல் அவர் பாடல்களை சொல்லிக் கொண்டே வந்தார்". அதைக் கேட்டு எழுதிக் கொள்ள உவேசா சிரமப்பட்டார். இவ்வாறாக அவர் தன்னுடைய வாழ்நாளில்  லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.   ஏன் அப்பாடல்கள் நாம் அதிகம் கேள்விப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது.  மீ.சு.பிள்ளை எழுதிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்ற நூல் கிடைத்தது. அதில் ஒரு பக்கம்:




அவர் இறந்த ஐந்தாண்டு கழித்து எட்டயபுரத்தில்  பிறந்த ஒருவர்  வாழ்நாள் முழுதும் எழுதியதை 400 பக்கத்துக்குள் அடக்கிவிடலாம். அதிலிருந்து ஒரு பாடல்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


ஏன் தன்னை அவர் பெருமையாக சொல்புதிது,  சுவை புதிது என்று கூறிக்கொண்டார் என்று இதில் தெரிந்து கொள்ளலாம்.  மீசுபிள்ளைக்குத் திறமைம் கற்பனையும்  இருந்த அளவுக்கு புதிய சிந்தனை இல்லை. அதனால் அவர்  ஆழ்ந்த சிவபக்தியோடு எழுதியதை  மற்ற  பக்தர்கள் கூட கொண்டாடிப் படிப்பதாகத் தெரியவில்லை..

 ஆதிசங்கரரின் தத்துவத்தை எண்ணித் தான் சிந்தித்ததை, வடமொழி மாயை என்றும் ஆங்கிலம் illusion என்றும் கூறியதை அவர் தோற்றமயக்கம், காட்சிப்பிழை என்று புதிதாகச் சொல் படைத்து பாரதி செய்த புதுமைதான் இன்ற்றை கவிஞர் தாமரை யையும் வசீகரித்துள்ளது.
 அக்காட்சிப்பிழையிலும், கடல் மணலிலும்  சிப்பி புதைந்துள்ளதுதான் எனக்குத் தெரிந்தது.
அதை இன்று சில உதிரிவெடி வாசகர்கள்  கவனமாகத் தேடியெடுத்துவிட்டார்கள்.

Comments

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்