Skip to main content

விடை 3807

திரிசுரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-1876

தன்னுடைய ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் கவிதை எழுதும் திறமையை வியந்து உவேசா குறிப்பிடும் பல நிகழ்ச்சிகளில் ஒன்று இது. யாரோ ஒருவருக்கு அவர்கள் ஊர் கோயில் சிறப்பை விவரித்து தல புராணம்  எழுதித் தருவதாக ஆசிரியர் வாக்களித்திருந்தார். மாயுரத்திலிருந்து கிளம்பி 20கிமீ தூரத்திலுள்ள திருவாவடுதுறை   மடத்துக்குச் செல்கிறார்கள்.  மாட்டு வண்டியில் போகும்போதே அவர் இயற்றிவிட்டாராம். உவேசாவின் வார்த்தைகளில் "மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல் அவர் பாடல்களை சொல்லிக் கொண்டே வந்தார்". அதைக் கேட்டு எழுதிக் கொள்ள உவேசா சிரமப்பட்டார். இவ்வாறாக அவர் தன்னுடைய வாழ்நாளில்  லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.   ஏன் அப்பாடல்கள் நாம் அதிகம் கேள்விப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது.  மீ.சு.பிள்ளை எழுதிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்ற நூல் கிடைத்தது. அதில் ஒரு பக்கம்:




அவர் இறந்த ஐந்தாண்டு கழித்து எட்டயபுரத்தில்  பிறந்த ஒருவர்  வாழ்நாள் முழுதும் எழுதியதை 400 பக்கத்துக்குள் அடக்கிவிடலாம். அதிலிருந்து ஒரு பாடல்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


ஏன் தன்னை அவர் பெருமையாக சொல்புதிது,  சுவை புதிது என்று கூறிக்கொண்டார் என்று இதில் தெரிந்து கொள்ளலாம்.  மீசுபிள்ளைக்குத் திறமைம் கற்பனையும்  இருந்த அளவுக்கு புதிய சிந்தனை இல்லை. அதனால் அவர்  ஆழ்ந்த சிவபக்தியோடு எழுதியதை  மற்ற  பக்தர்கள் கூட கொண்டாடிப் படிப்பதாகத் தெரியவில்லை..

 ஆதிசங்கரரின் தத்துவத்தை எண்ணித் தான் சிந்தித்ததை, வடமொழி மாயை என்றும் ஆங்கிலம் illusion என்றும் கூறியதை அவர் தோற்றமயக்கம், காட்சிப்பிழை என்று புதிதாகச் சொல் படைத்து பாரதி செய்த புதுமைதான் இன்ற்றை கவிஞர் தாமரை யையும் வசீகரித்துள்ளது.
 அக்காட்சிப்பிழையிலும், கடல் மணலிலும்  சிப்பி புதைந்துள்ளதுதான் எனக்குத் தெரிந்தது.
அதை இன்று சில உதிரிவெடி வாசகர்கள்  கவனமாகத் தேடியெடுத்துவிட்டார்கள்.

Comments

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.