Skip to main content

விடை 3787


இன்று காலை வெளியான புதிர்:

களங்கம் உடையான்  அம்மணமாய்ப் புற்றில் வாழ்வது!  (4)



அதற்கான விடை:    கறையான் = கறை + உடையான் - உடை
கறை = களங்கம்
கறையான் = புற்றில் வாழும் உயிரினம்.

(கரையான் என்றும் சில சமயம் இது எழுதப்படுகிறது. ஆனால் இப்புதிருக்கு களங்கம் என்ற பொருளுள்ள சொல் தேவை என்பதால்  கறையான்தான் சரியான விடை.)

இப்புதிருக்கு விடையனுப்பியவர்கள் விவரங்களை இங்கே சென்று காணலாம்.

Comments

Muthu said…
University of Madras Lexicon
கரையான்
karaiyāṉ n. id. Fishermanliving near the sea-coast; கடற்கரைப்பக்கத்துவாழும் வலைஞன்
Muthu said…
மேலும்:
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கறையான்
கறையான் (p. ) [ kaṟaiyāṉ ] ஆழல், சிதலை, செல்
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கரையான்
தீவான் (p. ) [ tīvāṉ ] கரையான்.
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கறையான்
சொல்
அருஞ்சொற்பொருள்
கறையான் செல்லு , சிதல் .
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கரையான்
கரையான் கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் .
சந்தேகம் இருந்தது. கறையான் ன்னு விடை வருது, கரையான் ன்னு படிச்ச ஞாபகம். மொதல்ல விடை பதிவு செய்வோம். அப்புறம் வந்து சரி செய்யலாம் ன்னு போனேன். அப்புறம் கை ஒழியவே இல்லை. அதான்.. ஹீ ஹீ கொஞ்சம் தப்பு விட்டுட்டேன்
Ramki Krishnan said…
கரையனா இல்லை கறையானா ?

யோசித்தபோது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.

மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் எதோ மாமுனிவரே அறியேன் (MKT நடித்த திருநீலகண்டர் படம்)
(https://www.youtube.com/watch?v=9bB8AI1v9Hg)

இதன் அனுபல்லவியில்
"கறையான் தின்றதோ கள்வன் கவர்ந்து சென்றானோ " என்று வரும்.

மறைவாய் என்பதற்கு rhyme ஆக இருப்பது கறையான் (கரையான் அல்ல)
Vanchinathan said…
ராம்கி, நீங்கள் குறிப்பிடும் பாடல் எனக்குத் தெரியாது. (மாலையில் வீட்டுக்குப் போனவுடன் கேட்கிறேன்) ஆனால் உங்கள் வாதம் சரியானது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.