Skip to main content

விடை 3787


இன்று காலை வெளியான புதிர்:

களங்கம் உடையான்  அம்மணமாய்ப் புற்றில் வாழ்வது!  (4)



அதற்கான விடை:    கறையான் = கறை + உடையான் - உடை
கறை = களங்கம்
கறையான் = புற்றில் வாழும் உயிரினம்.

(கரையான் என்றும் சில சமயம் இது எழுதப்படுகிறது. ஆனால் இப்புதிருக்கு களங்கம் என்ற பொருளுள்ள சொல் தேவை என்பதால்  கறையான்தான் சரியான விடை.)

இப்புதிருக்கு விடையனுப்பியவர்கள் விவரங்களை இங்கே சென்று காணலாம்.

Comments

Muthu said…
University of Madras Lexicon
கரையான்
karaiyāṉ n. id. Fishermanliving near the sea-coast; கடற்கரைப்பக்கத்துவாழும் வலைஞன்
Muthu said…
மேலும்:
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கறையான்
கறையான் (p. ) [ kaṟaiyāṉ ] ஆழல், சிதலை, செல்
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கரையான்
தீவான் (p. ) [ tīvāṉ ] கரையான்.
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கறையான்
சொல்
அருஞ்சொற்பொருள்
கறையான் செல்லு , சிதல் .
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கரையான்
கரையான் கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் .
சந்தேகம் இருந்தது. கறையான் ன்னு விடை வருது, கரையான் ன்னு படிச்ச ஞாபகம். மொதல்ல விடை பதிவு செய்வோம். அப்புறம் வந்து சரி செய்யலாம் ன்னு போனேன். அப்புறம் கை ஒழியவே இல்லை. அதான்.. ஹீ ஹீ கொஞ்சம் தப்பு விட்டுட்டேன்
Ramki Krishnan said…
கரையனா இல்லை கறையானா ?

யோசித்தபோது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.

மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் எதோ மாமுனிவரே அறியேன் (MKT நடித்த திருநீலகண்டர் படம்)
(https://www.youtube.com/watch?v=9bB8AI1v9Hg)

இதன் அனுபல்லவியில்
"கறையான் தின்றதோ கள்வன் கவர்ந்து சென்றானோ " என்று வரும்.

மறைவாய் என்பதற்கு rhyme ஆக இருப்பது கறையான் (கரையான் அல்ல)
Vanchinathan said…
ராம்கி, நீங்கள் குறிப்பிடும் பாடல் எனக்குத் தெரியாது. (மாலையில் வீட்டுக்குப் போனவுடன் கேட்கிறேன்) ஆனால் உங்கள் வாதம் சரியானது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்