** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா? இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லோரும் உடந்தையா? இது புதிருங்க. படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான சூத்திரம். சுற்றமும், நட்பும் சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள் சுற்ற : வட்டமிட ம் : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள் = வட்டமிட ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "=" குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...
Comments
கரையான்
karaiyāṉ n. id. Fishermanliving near the sea-coast; கடற்கரைப்பக்கத்துவாழும் வலைஞன்
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கறையான்
கறையான் (p. ) [ kaṟaiyāṉ ] ஆழல், சிதலை, செல்
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கரையான்
தீவான் (p. ) [ tīvāṉ ] கரையான்.
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கறையான்
சொல்
அருஞ்சொற்பொருள்
கறையான் செல்லு , சிதல் .
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கரையான்
கரையான் கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் .
யோசித்தபோது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.
மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் எதோ மாமுனிவரே அறியேன் (MKT நடித்த திருநீலகண்டர் படம்)
(https://www.youtube.com/watch?v=9bB8AI1v9Hg)
இதன் அனுபல்லவியில்
"கறையான் தின்றதோ கள்வன் கவர்ந்து சென்றானோ " என்று வரும்.
மறைவாய் என்பதற்கு rhyme ஆக இருப்பது கறையான் (கரையான் அல்ல)