Skip to main content

விடை 3295


இன்று (02/05/2018) காலை வெளியான வெடி
காஞ்சியில் சேனாதிபதி பிற்காலத்தில் பெரிய தொண்டாற்றவில்லை (5)

இதற்கான விடை: பரஞ்சோதி.

காஞ்சியிலிருந்து ஆண்ட நரசிம்ம வர்ம பல்லவனின் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி(யார்).இவர் மூலம் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தார் நரசிம்மர். பரஞ்சோதியார்தான்  சாளுக்கியத் தலைநகர் வாதாபியிலிருந்து பிள்ளையாரைக் கொண்டுவந்து தமிழ்நாட்டுக்கு
அறிமுகப்படுத்தியது என்கிறார்கள். (வாதாபி கணபதிம் என்று கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது இந்த கணபதிதானோ?)
வென்று காஞ்சிக்குத் திரும்பியபின் பதவியைத் துறந்து  சைவசமயத்தில் முற்றிலும் ஆழ்ந்தார் அவர்.  சிறுதொண்டர் என்ற பெயரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு   சிவபெருமான்
கொடுரமான கட்டளையிட்டார். பரமசிவன், பரஞ்சோதியாயிருந்த சிறுதொண்டரை, பரமசோதித்தார்.  இதயபலவீனமானவர்களுக்குத் தாங்காது என்பதால் நான் அதைச் சொல்ல விரும்பவில்லை.

அது சரி, சிறுதொண்டரா? சிறுத்தொண்டரா?
சிறுபிள்ளை, சிறுகுழந்தை, சிறுசேரி (சென்னையருகில் இருக்கிறது), என்பதையெல்லாம் பார்க்கும்போது  சிறுத்தொண்டர் என்று எழுதுவது சரியில்லையோ என்று தோன்றுகிறது.

கருத்துகளுக்கும் விவாதங்களுக்கும் இங்கே செல்லவும்.




Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

1) 6:01:53 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:01:58 முத்தூப்ரமண்யம்
3) 6:03:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:05:58 எஸ்.பார்த்தசாரதி
5) 6:07:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 6:08:08 ஆர்.நாராயணன்
7) 6:13:19 லதா
8) 6:15:47 வித்யா ஹரி
9) 6:16:55 கல்பனா
10) 6:17:51 எஸ் பி சுரேஷ்
11) 6:19:11 ரா. ரவிஷங்கர்..
12) 6:23:24 ரவி சுப்ரமணியன்
13) 7:34:53 சித்தன்
14) 7:44:46 தி பொ இராமநாதன்
15) 7:50:39 ஶ்ரீதரன்
16) 8:03:20 ராஜி ஹரிஹரன்
17) 8:06:04 விஜயா ரவிஷங்கர்
18) 8:06:22 சுபா ஸ்ரீநிவாசன்
19) 8:13:45 நங்கநல்லூர் சித்தானந்தம்
20) 8:16:39 மைத்ரேயி சிவா
21) 8:39:14 வானதி
22) 8:50:11 மீ பாலு
23) 9:17:14 மீனாக்ஷி
24) 9:45:31 கி.பாலசுப்ரமணியன்
25) 10:58:17 கு. கனகசபாபதி, மும்பை
26) 12:48:14 ரமணி பாலகிருஷ்ணன்
27) 13:27:23 மு.க.இராகவன்.
28) 13:55:45 ஸௌதாமினி
29) 14:37:27 மீ கண்ணன்
30) 17:40:22 ஆர். பத்மா
31) 17:54:17 அம்பிகா
32) 19:57:40 ருக்மணி
************************
Raghavan MK said…


A peak into today's riddle!

காஞ்சியில் சேனாதிபதி...

காஞ்சியை ஆண்ட நரசிம்மபல்லவனின் சேனாதிபதி *பரஞ்சோதி* , வாதாபி போரில் வெற்றி வாகை சூடியவர்.

போர் முடிந்த பின், ஈசன் மீதுள்ள அளவற்ற பற்றால், தளபதி பரஞ்சோதியார் , இறை தொண்டாற்ற விழைந்தார்.

நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார், பரஞ்சோதியார். சிவனடியார்களின் முன்பு அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்.


சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்