Skip to main content

உதிரிவெடி 3308

உதிரிவெடி 3308 (15/05/2018)
வாஞ்சிநாதன்
*********************

 பிரம்மனுக்குக் கோவில் இல்லாததற்கும் சிவன்கோயில்களில் தாழம்பூ   பூஜைக்கு நிறுத்தப்பட்டதற்குமான கதையை  16/12/2017  அன்று  வேறொரு வெடி  தொடர்பாகக் கூறியிருக்கிறேன். அந்த கதை இன்றைய புதிரிலும் தொடர்கிறது.  அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை    "காமம் செப்பாது கண்டது மொழிமோ " என்று  வேண்டிக் கேட்டுத் தெரிந்துகொண்டு  நல்ல விடையை அளியுங்கள். கடவுளை நம்பாதவர்கள் விலகி வழிவிட்டு   எங்காவது ஓரத்திலோ அல்லது, மய்யத்திலோ போய் நின்றுகொள்ளுங்கள்.

கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம் (4)


Comments

Raghavan MK said…


இறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. குறிஞ்சித் திணைப் பாடல் இது.

பாடல் - மூலம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.


தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
Raghavan MK said…




இறையனார் என்னும் புலவர்,
கடவுள்-சிவபெருமானே என்பது நம்பிக்கை.

அவர், அரசன் அவையில் பரிசு பெறத் தருமி எனபவனுக்கு இப்பாடலைச் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையை திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது. 'திருவிளையாடல்' என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை சுவையேற்றப்பட்டுள்ளது
அந்த பழைய தாழம்பூ கதை "இன்றைய புதிரிலும் தொடர்கிறது" என்று கதை விடாமல் இருந்திருந்தால்........காட்சி தெளிவாக இருந்திருக்கும். அந்தக்கதையில் சிவன் இறுதியாக தான் கண்ணுக்குத் தெரியும்படி லிங்க வடிவாக இருப்பதாக கூறுகிறான்.
Raghavan MK said…


இன்றைய புதிரிலும் தொடர்கிறது"

என்று திசை திருப்பி விட்டார்

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்