Skip to main content

உதிரிவெடி 3308

உதிரிவெடி 3308 (15/05/2018)
வாஞ்சிநாதன்
*********************

 பிரம்மனுக்குக் கோவில் இல்லாததற்கும் சிவன்கோயில்களில் தாழம்பூ   பூஜைக்கு நிறுத்தப்பட்டதற்குமான கதையை  16/12/2017  அன்று  வேறொரு வெடி  தொடர்பாகக் கூறியிருக்கிறேன். அந்த கதை இன்றைய புதிரிலும் தொடர்கிறது.  அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை    "காமம் செப்பாது கண்டது மொழிமோ " என்று  வேண்டிக் கேட்டுத் தெரிந்துகொண்டு  நல்ல விடையை அளியுங்கள். கடவுளை நம்பாதவர்கள் விலகி வழிவிட்டு   எங்காவது ஓரத்திலோ அல்லது, மய்யத்திலோ போய் நின்றுகொள்ளுங்கள்.

கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம் (4)


Comments

Raghavan MK said…


இறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. குறிஞ்சித் திணைப் பாடல் இது.

பாடல் - மூலம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.


தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
Raghavan MK said…




இறையனார் என்னும் புலவர்,
கடவுள்-சிவபெருமானே என்பது நம்பிக்கை.

அவர், அரசன் அவையில் பரிசு பெறத் தருமி எனபவனுக்கு இப்பாடலைச் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையை திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது. 'திருவிளையாடல்' என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை சுவையேற்றப்பட்டுள்ளது
அந்த பழைய தாழம்பூ கதை "இன்றைய புதிரிலும் தொடர்கிறது" என்று கதை விடாமல் இருந்திருந்தால்........காட்சி தெளிவாக இருந்திருக்கும். அந்தக்கதையில் சிவன் இறுதியாக தான் கண்ணுக்குத் தெரியும்படி லிங்க வடிவாக இருப்பதாக கூறுகிறான்.
Raghavan MK said…


இன்றைய புதிரிலும் தொடர்கிறது"

என்று திசை திருப்பி விட்டார்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.