Skip to main content

உதிரிவெடி 3308

உதிரிவெடி 3308 (15/05/2018)
வாஞ்சிநாதன்
*********************

 பிரம்மனுக்குக் கோவில் இல்லாததற்கும் சிவன்கோயில்களில் தாழம்பூ   பூஜைக்கு நிறுத்தப்பட்டதற்குமான கதையை  16/12/2017  அன்று  வேறொரு வெடி  தொடர்பாகக் கூறியிருக்கிறேன். அந்த கதை இன்றைய புதிரிலும் தொடர்கிறது.  அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை    "காமம் செப்பாது கண்டது மொழிமோ " என்று  வேண்டிக் கேட்டுத் தெரிந்துகொண்டு  நல்ல விடையை அளியுங்கள். கடவுளை நம்பாதவர்கள் விலகி வழிவிட்டு   எங்காவது ஓரத்திலோ அல்லது, மய்யத்திலோ போய் நின்றுகொள்ளுங்கள்.

கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம் (4)


Comments

Raghavan MK said…


இறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. குறிஞ்சித் திணைப் பாடல் இது.

பாடல் - மூலம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.


தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
Raghavan MK said…




இறையனார் என்னும் புலவர்,
கடவுள்-சிவபெருமானே என்பது நம்பிக்கை.

அவர், அரசன் அவையில் பரிசு பெறத் தருமி எனபவனுக்கு இப்பாடலைச் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையை திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது. 'திருவிளையாடல்' என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை சுவையேற்றப்பட்டுள்ளது
அந்த பழைய தாழம்பூ கதை "இன்றைய புதிரிலும் தொடர்கிறது" என்று கதை விடாமல் இருந்திருந்தால்........காட்சி தெளிவாக இருந்திருக்கும். அந்தக்கதையில் சிவன் இறுதியாக தான் கண்ணுக்குத் தெரியும்படி லிங்க வடிவாக இருப்பதாக கூறுகிறான்.
Raghavan MK said…


இன்றைய புதிரிலும் தொடர்கிறது"

என்று திசை திருப்பி விட்டார்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.