Skip to main content

விடை 3303

இன்று (10/05/2018) காலை வெளியான வெடி:
 திட்டி, பற்களால் நொறுக்கி, மெலிந்து விகாரமடை (4)
இதற்கான  விடை:  கடிந்து =    கடித்ந்து
இலக்கணத்தில் மெலிதல் விகாரம் என்றால் வல்லினம் மெல்லினமாக மாறுவது (ஆனால் பொருள் மாறாமல்!) .
திருநாவுக்கரசரின்  "மாசில் வீணையும் மாலை மதியமும்..." என்ற பாடல்
முடியும்போது இணையடி நீழலே  என்று  செல்லும். நிழலே என்றால் வெண்டளை வராமல் தவறிவிடும். அதற்காக மாற்றியதை நீட்டல் விகாரம் என்கிறார்கள்.


நேற்றைய புதிரில்  ஆச்சரியக்குறி பயன்படுத்தியது  பற்றிய கேள்வி எழுந்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள வழக்கப்படி, காற்புள்ளி, அரைப்புள்ளி இவை எதுவும் புதிரை விடுவிக்க உதவுவதற்கு இல்லை. திசை திருப்புவதற்கே.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (34):

1) 6:04:04 சுபா ஸ்ரீநிவாசன்
2) 6:04:30 கி.பாலசுப்ரமணியன்
3) 6:06:43 வி சீ சந்திரமௌலி
4) 6:07:18 ரா. ரவிஷங்கர்..
5) 6:07:46 முத்துசுப்ரனமண்யம்
6) 6:12:56 மீனாக்ஷி கணபதி
7) 6:16:52 மீ பாலு
8) 6:18:06 மீ கண்ணன்
9) 6:18:18 ராமராவ்
10) 6:21:16 மைத்ரேயி சிவகுமார்
11) 6:23:55 லதா
12) 6:24:46 சாந்திநாராயணன்
13) 6:24:49 மு.க.இராகவன்.
14) 6:33:52 கோவிந்தராஜன்
15) 6:40:42 ராதா தேசிகன்
16) 6:56:45 Suja
17) 6:57:47 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 7:01:36 நாதன் நா தோ
19) 7:02:32 சங்கரசுப்பிரமணியன்
20) 7:11:01 கே.ஆர்.சந்தானம்
21) 7:17:25 ரவி சுப்ரமணியன்
22) 7:32:20 லக்ஷ்மி ஷங்கர்
23) 7:32:24 பாலா
24) 8:27:26 எஸ் பி சுரேஷ்
25) 8:27:50 ராஜா ரங்கராஜன்
26) 9:02:37 வானதி
27) 10:17:29 ருக்மணி கோபாலன்
28) 10:44:45 ராஜி ஹரிஹரன்
29) 10:57:09 அம்பிகா
30) 11:51:17 மீனாக்ஷி
31) 12:02:07 மு க பாரதி
32) 12:09:25 வித்யா ஹரி
33) 13:21:31 சித்தன்
34) 13:27:05 மாலதி
************************
Raghavan MK said…


[10/05, 20:36] raghavanmk31: A peak into today's riddle!! ...........👇🏽👇🏽
[10/05, 20:54] raghavanmk31: தடித்த முறுக்கை

கடித்து தின்றதால்

மெலிந்து விகாரமடைய

*கடிந்து* கொள்வதோ?
உங்கள் கருத்துப்படி மெல்லின விகாரம் பொருள் மாற்றாமல் வல்லினம் மெல்லினமாக வேண்டும். ஆனால், உங்கள் விடையில் "கடித்து" "கடிந்து" என்று மாறுகிறது. கடிப்பதும் கடிவதும் ஒரே பொருளா என்ன?
Vanchinathan said…
நினைத்தேன் என்பதை செய்யுளில் ஓசை நயத்துக்காக நினைந்தேன் என்றெழுதுவது (மெலிதல்) விகாரம். கடித்து என்பதன் விகாரமாக கடிந்து என்று வேரொறு பொருள் வருவது புதிராசிரியர்களுக்குக் கொண்டாட்டம். புதிரின் அடிப்படையே இரண்டு பொருள் வருமாறு அமைவதுதானே.
புதிராசிரியருக்குக் கொண்டாட்டம் அது கொண்டாட்டம் !
புதிர் ஆர்வலர்களுக்கு அது திண்டாட்டம் அது திண்டாட்டம் !

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்