** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா? இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லோரும் உடந்தையா? இது புதிருங்க. படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான சூத்திரம். சுற்றமும், நட்பும் சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள் சுற்ற : வட்டமிட ம் : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள் = வட்டமிட ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "=" குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...
Comments
அழகிய கட்டமைப்புடன் தெய்வாம்சமும் கூடிய புதிரை தந்த ஆசிரியருக்கு பாராட்டுகள்! 💐💐
" குரு, அவள் உமிழ விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார்"
என்ற வரிகளின் மூலம் நம்மையெல்லாம் ஒரு கலக்கு கலக்கிவிட்டார் ஆசிரியர்.
நம்மை குழப்புவதென்றால் அவருக்கு என்றும் தனி மகிழ்ச்சி!
புதிரை விடுவிக்கும்போது நமக்கும் மகிழ்ச்சிதான்! 😌
***************************
தெய்வாம்சம் கொண்ட குரு, அவள் உமிழ விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார் (5)
அவள் உமிழ விட்டுவிட்டு
= அ[வ]ள் [உ]மி[ழ]
= அள்மி
குரு பிடித்து
= குரு + (அள்மி)
கலக்கினார்
= குரு +அள்மி
= அருள்மிகு
= தெய்வாம்சம் கொண்ட
***************************
விட்டு விட்டுப் பிடித்துக் கலக்கினதில் "குரு"வையும் சேர்த்துப் பிடித்து விட்டேன். குருவைத் தனியா விட்ட பிறகே அருள் கிடைத்தது!!😦