Skip to main content

விடை 3883


இன்று காலை வெளியான வெடி:
எங்கேயென்று அலைந்து  நடு இரவு  வந்த இடம் கோவிலுக்கருகில் இருக்கும் (3)
அதற்கான விடை:  தேரடி = தேடி + ர







சென்ற வருடம்  ராஜேஷ் வைத்யாவின் வீணை இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய நிகழ்ச்சியில்  கர்நாடக இசையில் அமைந்த திரைப்படப் பாடல்களும் வாசிப்பார் என்று குறிப்பிட்டிருந்ததால்  கொஞ்சம் சங்கீத அறிவையும் வளர்த்துக் கொள்ளலாமென்று ஒரு நப்பாசை.  அன்று பல பாடல்கள் வாசித்தாலும்  ஒரு பாடலை வாசிக்கும் முன்னால்  தனக்குத் தெரிந்து  திரைப்படங்களில் அந்தப் பாடல் மட்டும்தான் அந்த ராகத்தில் அமைந்தது என்று குறிப்பிட்டு  "நிக்கட்டுமா, போகட்டுமா நீலக் கருங்குயிலே" என்று வாசித்தார்.
வீட்டிற்கு வந்ததும் அப்பாடலை  இணையத்தில் தோண்டிப் பார்த்துக் கேட்டேன்.  அது கிராமத்துப் பாட்டாகத்தான்  தெரிந்தது. நேற்றும் ஒருமுறை அதைக் கேட்டேன். ஒரு சங்கீதமும் ஒரு ராகமும் பிடிபடவில்லை. "தேரடி வீதியிலே..." என்ற வார்த்தை சிக்கி ஒரு புதிர் அகப்பட்டதுதான் மிச்சம். வாசஸ்பதியாவது, வனஸ்பதியாவது ஒன்றும் விளங்கவில்லை.

 இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...