Skip to main content

விடை 3883


இன்று காலை வெளியான வெடி:
எங்கேயென்று அலைந்து  நடு இரவு  வந்த இடம் கோவிலுக்கருகில் இருக்கும் (3)
அதற்கான விடை:  தேரடி = தேடி + ர







சென்ற வருடம்  ராஜேஷ் வைத்யாவின் வீணை இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய நிகழ்ச்சியில்  கர்நாடக இசையில் அமைந்த திரைப்படப் பாடல்களும் வாசிப்பார் என்று குறிப்பிட்டிருந்ததால்  கொஞ்சம் சங்கீத அறிவையும் வளர்த்துக் கொள்ளலாமென்று ஒரு நப்பாசை.  அன்று பல பாடல்கள் வாசித்தாலும்  ஒரு பாடலை வாசிக்கும் முன்னால்  தனக்குத் தெரிந்து  திரைப்படங்களில் அந்தப் பாடல் மட்டும்தான் அந்த ராகத்தில் அமைந்தது என்று குறிப்பிட்டு  "நிக்கட்டுமா, போகட்டுமா நீலக் கருங்குயிலே" என்று வாசித்தார்.
வீட்டிற்கு வந்ததும் அப்பாடலை  இணையத்தில் தோண்டிப் பார்த்துக் கேட்டேன்.  அது கிராமத்துப் பாட்டாகத்தான்  தெரிந்தது. நேற்றும் ஒருமுறை அதைக் கேட்டேன். ஒரு சங்கீதமும் ஒரு ராகமும் பிடிபடவில்லை. "தேரடி வீதியிலே..." என்ற வார்த்தை சிக்கி ஒரு புதிர் அகப்பட்டதுதான் மிச்சம். வாசஸ்பதியாவது, வனஸ்பதியாவது ஒன்றும் விளங்கவில்லை.

 இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்