Skip to main content

விடை 3876


ஒரு பழைய சொல் விளையாட்டு இருக்கிறது.
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்!


ஆற்றுப் பக்கம்  சென்ற போது ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சியின் காய் குத்தியது என்பதைத்தான் ஒரு புலவர் அப்படிச் சொன்னாராம்.

 
அதைக் கேட்ட மற்றொரு புலவர் கூறிய பதில்:
"பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின்
பெயரில் கால் நீக்கித் தேய் "

தசரதனின் மகனான ராமனின்  எதிரியான  வாலியின் மனைவியின் தாரை என்ற பெயரில் காலை எடுத்து,  தரையில், தேய்த்தால் முள் குத்திய இடம் சரியாகி விடும்!

அப்படிப்பட்ட பிரபலமான நெருஞ்சி உதிரிவெடியில் முதன்முதலாக இடம்பெற்றதைப் பலரும் திரளாக வந்து கலந்து கொண்டு சரியான விடையளித்துள்ளீர்கள்.

இம்முள்ளின் படம்:




 செடியில் இருக்கும் படம்:


இன்றைய  வெடி:
நெருஞ்சியில் இருப்பதை அருளில்லாத வட்டாரத்திற்கு வெளியே வைத்த  அறிவில்லாதவன்(4)

இதற்கான விடை:  முட்டாள் = முள் (நெருஞ்சிச் செடியில் இருப்பது)
   + வட்டாரம்  - வரம் (அருள்)


ஒருவரும் தவறான விடையளிக்கவில்லை. அனைவருக்கும் பாராட்டுகள்!  விவரங்களைக் காண இங்கே செல்லவும்.

Comments

Muthu said…
This comment has been removed by the author.
Muthu said…
வேறொரு பாடம்:
பத்துரதன் புத்திரனின் *மித்திரனின்* சத்துருவின்
பத்தினியின் *காலுடைத்துக் காலைத் தேய் "

இன்று அனைவருமே முட்டாள்
.............
.............
............
..............
.............
.............
............
..............
.............
.............
............
..............
என்று சரியான விடையை
அனுப்பி விட்டார்கள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...