Skip to main content

விடை 3346

இன்று (22 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

ஆணை மணம் முடிக்க கடைசிப்பிள்ளை (4)

இதற்கான விடை:   கட்டளை

கடைசிப் பிள்ளையை ஓர் ஆணுக்கு மணமுடிக்க கோயம்புத்தூர் பக்கத்து ஆளாய் இருக்க வேண்டும். அங்குதான் பெண் குழந்தைகளை ஏ புள்ள என்று  கூப்பிடுவார்கள்.

 இல்லையென்றால் வானவில் கொடியைத் தூக்குபவர்களாக இருக்க வேண்டும்.
இதன் மூலம்  உதிரிவெடி  முற்போக்குச் சிந்தனைவாதிகளுக்கும் பாரம்பரியவாதிகளுக்கும் ஏற்றது என்று சொல்லிக் கொள்கிறேன்!

Comments

Raghavan MK said…



A peek into today's riddle....👇🏽

_ஆணை மணம் முடிக்க கடைசிப்பிள்ளை (4)_

இதென்ன பெண்ணை மணம் முடிக்காமல் ஆணுக்கு *_கட்ட_* கடைக்குட்டியை தேர்ந்தெடுத்துள்ளாரே என்று, நம்
இளைஞன், யுவன், மணாளனை தேடித்தேடி அலைந்துதான் மிச்சம்!

சோர்ந்து போய் ஒரு டீக்கடையில் அமர்ந்த போதுதான் அந்த எம்.ஜி.ஆரின் படப்பாடலை கேட்டேன்.!

_"நான் *ஆணை* யிட்டால், அது நடந்து விட்டால் ...!"_

சோர்ந்த உள்ளத்தை ஆற்றியது அடுத்து வந்த பாடல்!

_"ஆறு மனமே ஆறு_
_அந்த ஆண்டவன் *கட்டளை* ஆறு"_ !
....................................
_மணம் முடிக்க_
= *கட்ட*

_கடைசிப்பிள்ளை_
= *(பிள்)ளை*

_ஆணை_
= *கட்ட +ளை*
= *கட்டளை*
.....................................

கட்டளை
பெயர்ச்சொல்

1.ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு.

2.(இறைவனின்) ஆணை.
‘ஆண்டவனின் கட்டளை இப்படி இருக்கிறது’

3. கோயில் கட்டளை
(ஒருவர் தன் பெயரில்) கோயிலில் ஒரு விசேஷ தினத்தன்று பூஜை, அபிஷேகம், உற்சவம் போன்றவை நடக்க நிதி வழங்கிச் செய்யும் ஏற்பாடு.

4.(குறிப்பிட்ட செயலைக் கணிப்பொறி செய்வதற்கான) இயக்கமுறை.

இது தவிர.....

5.பைபிளில் வரும் பத்து கட்டளைகள் (Ten commandments).

அடுத்து .....
6.கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள்.
கட்டளை= எழுத்தின் அளவு.
துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர். காரைக்கால் அம்மையார் தான் இவ்வகையை முதலில் பயன்படுத்தினார் என்பர்.
காரைக்கால் அம்மையார் தம் இரட்டைமணி-மாலையில் 10 பாடல்களும், பொன்வண்ணத்தந்தாதியில் 100 பாடல்களும் கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடியுள்ளார். பொன்வண்ணத்தந்தாதியின் முதல் பாடல் இது.

_பொன்வண்ணம் எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்_

_மின்வண்ணம் எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்_

_தன்வண்ணம் எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் மால்விடை_ _தன்னைக்கண்ட_

_வெண்வண்ணம்_ _எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே._

🙏🏽🙏🏽🙏🏽
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (61):

1) 6:00:43 திருமூர்த்தி
2) 6:01:03 ரவி சுப்ரமணியன்
3) 6:01:31 கேசவன்
4) 6:01:36 நாதன் நா தோ
5) 6:01:46 முத்துசுப்ரமண்யம்
6) 6:01:52 ரமணி பாலகிருஷ்ணன்
7) 6:01:54 எஸ்.பார்த்தசாரதி
8) 6:02:25 ராமராவ்
9) 6:02:35 லட்சுமி சங்கர்
10) 6:02:58 புவனா சிவராமன்
11) 6:04:48 ரவி சுந்தரம்
12) 6:05:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:05:43 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:05:47 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 6:06:54 லதா
16) 6:07:26 சுந்தர் வேதாந்தம்
17) 6:09:53 இரா.செகு
18) 6:11:00 பானுபாலு
19) 6:12:32 கே.ஆர்.சந்தானம்
20) 6:14:48 .ராதா தேசிகன்
21) 6:14:50 ருக்மணி கோபாலன்
22) 6:15:16 எஸ் பி சுரேஷ்
23) 6:16:06 ரா. ரவிஷங்கர்...
24) 6:19:15 சாந்திநாராயணன்
25) 6:19:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
26) 6:19:46 கு.கனகசபாபதி, மும்பை
27) 6:22:56 மீனாக்ஷி கணபதி
28) 6:29:01 வி ன் கிருஷ்ணன்
29) 6:30:52 Sucharithra
30) 6:31:28 இலவசம்
31) 6:32:27 விஜயா ரவிஷங்கர்
32) 6:37:19 ஆர். பத்மா
33) 6:39:05 மீ கண்ணன்
34) 6:40:25 ராஜா ரங்கராஜன்
35) 6:50:19 ஆர்.நாராயணன்.
36) 6:54:28 சித்தன்
37) 6:54:28 பானுமதி
38) 6:57:35 வானதி
39) 6:57:57 வானதி
40) 7:00:42 லஷ்மி வைத்யநாதன்
41) 7:12:38 சதீஷ்பாலமுருகன்
42) 7:25:33 ஶ்ரீவிநா
43) 7:26:52 சங்கரசுப்பிரமணியன்
44) 7:31:51 மு க பாரதி
45) 7:37:13 கல்யாணி தேசிகன்
46) 7:38:58 ராஜி ஹரிஹரன்
47) 7:45:28 ரமணி பாலகிருஷ்ணன்
48) 8:02:27 கி மூ சுரேஷ்
49) 8:53:26 மீனாக்ஷி
50) 9:50:55 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
51) 10:41:58 மு.க.இராகவன்.
52) 10:55:43 லட்சுமி மீனாட்சி , மும்பை
53) 11:13:56 தி பொ இராமநாதன்
54) 11:47:34 பாலா
55) 13:33:09 ஸௌதாமினி
56) 14:44:30 தேன்மொழி
57) 15:55:17 ஏ.டி.வேதாந்தம்
58) 15:55:43 பத்மாசனி
59) 16:22:12 கோவிந்தராஜன்
60) 18:15:51 அம்பிகா
61) 20:49:25 மும்பை ஹரிஹரன்
**********************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.