தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
A peek into today's riddle .... 👇🏽
" _மரியாதையுடன் முன்னேயிருப்பவர் அகல அடி பாதி_ " (4)
சிறியதாயினும் சிக்கலான புதிர்!
முன்னேயிருப்பவர் அகல என்றவுடன் , முதலில் சிவபெருமானை மறைத்த நந்தி பகவான் தான் நினைவுக்கு வந்தார்!
மரியாதையுடன் அடி என்றதும், நந்தி விலக " _சிவனடி_ " முதலில் தோன்றியது.
பின்னர் யோசித்ததில் திசைதிரும்பி பயணித்ததை யறிந்தேன்.🙃🙃
புதிரை இரண்டாகப் பிரித்து பார்த்ததில் சரியான திசை புலப்பட்டது! 🙂🙂
1. _மரியாதையுடன் முன்னேயிருப்பவர்_
2. _அகல அடி பாதி_
பிரித்த பின்பு , முதல் பகுதி விடையாகவும், இரண்டாம் பகுதி விடை அடையும் வழியாகவும் அமைந்துள்ள புதிரை அவிழ்க்க முடிந்தது!
முதலில் ...
அகல
= *நீங்க*
அடி
= (பாதம்)= *தாள்*
பாதி அடி
= *ள்*
பின்னர்....
மரியாதையுடன் முன்னேயிருப்பவர்
= *நீங்க* + *ள்*
= *நீங்கள்*
நம் முன்னிலையில் இருப்பவரை மரியாதையுடன் *நீங்கள்* என குறிப்பிடுவோம்!
இன்றைய புதிர் அழகாக தொடுக்கப்பட்ட ஓர் *முத்தாரம்
1) 6:07:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
2) 6:12:19 கி மூ சுரேஷ்
3) 6:25:03 ஶ்ரீவிநா
4) 6:28:50 மீனாக்ஷி கணபதி
5) 6:57:40 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 7:07:29 சுந்தர் வேதாந்தம்
7) 7:08:35 ரவி சுந்தரம்
8) 7:15:21 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
9) 7:36:59 லதா
10) 7:44:00 சதீஷ்பாலமுருகன்
11) 7:50:51 எஸ்.ஆர்.பாரசுப்ரமணியன்
12) 9:13:05 ருக்மணி கோபாலன்
13) 10:11:58 ராஜி ஹரிஹரன்
14) 13:26:04 சுபா ஸ்ரீநிவாசன்
15) 13:45:18 மு.க.இராகவன்.
16) 16:49:37 மு க பாரதி
17) 17:10:11 KB
18) 17:22:25 மீ பாலு
19) 18:30:09 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
20) 18:55:00 முத்துசுப்ரமண்யம்
21) 19:05:03 சங்கரசுப்பிரமணியன்
22) 20:57:50 அம்பிகா
**********************
நானும் சரியான விடை அளித்ததாக நினைக்கிறேன். விடை பதிவாகவில்லையா அல்லது தவறாக பதிவானதா?
நன்றி.