Skip to main content

விடை 3352

இன்று (28 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

ஆண்டவா! பனி விலகிய கடைசித் திங்கள்  அவலட்சணமான முகத்துக்கு உதாரணம் (4)

இதற்கான விடை: தேவாங்கு

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
..................👇🏽.................

_ஆண்டவா! பனி விலகிய கடைசித் திங்கள் அவலட்சணமான முகத்துக்கு உதாரணம் (4)_


ஓர் நாள் , மாலை நேரம்,
கடற்கரையோரம்!

தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை எனும் பாடல் எங்கோ ஒலிக்கிறது!

அங்கு , கல்லூரி மாணவன் ஒருவனின் புலம்பலை கேட்க நேர்ந்தது! 😰
👇🏽
" ஆண்டவா ! இதென்ன சோதனை! அந்த பைங்கொடி என்னைப் பார்த்து, '
_ஏய்! _தேவாங்கு மூஞ்சி,_ _வழியை விட்டு விலகிப்போ! '_ ,
என சொல்லிவிட்டு போகிறாளே! "
என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தான்.😰

பரிதாபப்பட்டு அவனை நெருங்கி,
" _தம்பி! கவலையை விடு! அவள் தப்பாய் ஒன்றும் கூறவில்லையே!_ _தேவாங்கு_ _மாதிரி உன் முகம் *மிக மிக அழகாய்* இருக்கிறது என்றுதானே கூறினாள், இதற்கு போய்....''_

என தேற்றினேன்!!!

அப்படியா என்று அவனும் நன்றி பகன்று நகர்ந்தான். ( பயல் தேவாங்கு வை இதுவரை பார்த்ததேயில்லை போலும்! நான் பிழைத்தேன்! 😄)

சரி , இதென்ன மார்கழி பனிமூட்டம் பங்குனி வரை தொடர்ந்து வந்து தொந்தரவு தருகிறது!

பனியை விலக்குவோம் ,
பணியைத் தொடர்வோம் ,
வாருங்கள்!


_கடைசித் திங்கள்_
= *பங்குனி*

_பனி விலகிய கடைசித் திங்கள்_
=( *ப)ங்கு(னி)*

_ஆண்டவா_
= *தேவா*

_அவலட்சணமான முகத்துக்கு உதாரணம்_
= *தேவா + ங்கு*
= *தேவாங்கு*


*தேவாங்கு* என்பது ஒரு விலங்கினம்... பெரிய கண்களும், சிறிய உடலும் கொண்ட, மிக மெதுவாக நகரும், சிறிய விலங்கு...
_தேவாங்கு_ இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும்.

இதற்கு தோஷங்களை நீக்கும் சக்தி உண்டென்று நம்பப்படுகிறது...ஆகவே வரிசையாக முடிகள் இடப்பட்டக் கறுப்பு நிறமுடைய கயிற்றை அதன்முன் நீட்ட, அவ்விலங்கு எற்கனவே பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் தன் இரு முன் கால்களாலும் (குரங்கினம் என்பதால்,
கைகளைப்போலவே பயன்படுத்தும்) கயிற்றைத் தொடும்... இந்தக் கயிற்றை குழந்தையின் கழுத்தில் கட்டுவார்கள்... _தேவாங்கு_ தொட்டுக்கொடுத்ததால் _தேவாங்கு முடிக்கயிறு_, எனப்படுகிறது...

_தோஷம் நீங்க தேவாங்குவை நாடுவோம்!_ 🐒
Partha said…
ஆனந்த விகடனில் சு. வெங்கடேசன் எழுதும் நெடுந்தொடர் 'வீரயுக நாயகன் வேள்பாரி' படிப்பவர்களுக்கு தேவாங்கு அவலட்சணமானது அல்ல. “இயற்கையின் அதிசயம்" , “ ஒரு வானியல் விலங்கு” என்பது தெரியும். எப்போதெல்லாம் தரையில் உட்காருமோ, அப்போதெல்லாம் வடக்கு திசை நோக்கியே உட்காரும். இந்த விலங்கு பறம்பில் மட்டுமே இருந்ததால் இதை தற்செயலாக அறிந்த பாண்டியர் சேர, சோழருடன் சேர்ந்து பாரியுடன் போர் தொடுத்தனர். இந்த தொடரை மிக அற்புதமாக எழுதுகிறார் திரு வெங்கடேசன்.
Vanchinathan said…
விடையளித்தோர் பட்டியலில் பல பெயர்கள் விடுபட்டிருந்தன. திருத்தியது இங்கே:

1) 6:02:10 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:21 சதீஷ்பாலமுருகன்
3) 6:02:59 Ravi Subramanian
4) 6:03:08 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:03:43 திருமூர்த்தி
6) 6:06:59 ரவி சுப்ரமணியன்
7) 6:08:30 முத்துசுப்ரமண்யம்
8) 6:09:09 KB
9) 6:10:00 சங்கரசுப்பிரமணியன்
10) 6:11:27 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:11:44 லதா
12) 6:13:30 ராஜா ரங்கராஜன்
13) 6:14:23 கேசவன்
14) 6:16:11 சந்திரசேகரன்
15) 6:17:59 மீனாக்ஷி கணபதி
16) 6:20:00 நாதன் நா தோ
17) 6:27:25 ஆர். பத்மா
18) 6:30:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
19) 6:45:52 ஆர்.நாராயணன்.
20) 6:50:15 அம்பிகா
21) 6:50:53 ஸந்தியா
22) 6:51:51 எஸ் பி சுரேஷ்
23) 7:00:52 கு.கனகசபாபதி, மும்பை
24) 7:15:13 ராஜி ஹரிஹரன்
25) 7:26:48 மீ பாலு
26) 7:31:09 மு க பாரதி
27) 7:41:18 ருக்மணி கோபாலன்
28) 7:53:46 ரவி சுந்தரம்
29) 7:58:49 வி ன் கிருஷ்ணன்
30) 8:02:45 ராமராவ்
31) 8:10:27 ரமணி பாலகிருஷ்ணன்
32) 8:42:31 அனுராதா
33) 8:51:40 மாலதி
34) 8:52:35 வேதாந்தம்
35) 8:52:58 பத்மாசனி
36) 9:02:58 கோவிந்தராஐன்
37) 9:28:24 கி மூ சுரேஷ்
38) 10:31:40 மு.க.இராகவன்.
39) 10:39:38 மீனாக்ஷி
40) 11:53:38 கே.ஆர்.சந்தானம்
41) 12:10:56 தேன்மொழி
42) 12:38:43 சாந்திநாராயணன்
43) 13:03:40 ஶ்ரீவிநா
44) 13:04:29 விசீ சந்திரமௌலி
45) 13:24:33 மாதவ்
46) 14:13:30 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
47) 14:18:53 கல்யாணி தேசிகன்
48) 14:25:45 சுபா ஸ்ரீநிவாசன்
49) 16:44:09 ஸௌதாமினி
50) 17:05:49 மீ கண்ணன்
51) 19:32:51 ரா. ரவிஷங்கர்...

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.