நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்
வெள்ளி, நீலம், நெல், மரவள்ளி, கருணை
நான் எண்ணிப்பார்க்காத ஆனால் சுவாரசியமான விடைகள் வந்துள்ளன.
கருணை என்பது மட்டும் மனதின் உணர்ச்சி மற்றவை பொருள்கள் என்பது ஓரளவுதான் சரி, ஏனென்றால் மொட்டையாக பொருள்கள் என்பது நெருக்கமான தொடர்பைக் காட்டவில்லை.
இதே நான்கு சொற்களை இயற்கை வளங்கள் என்று பிணைக்கலாம் அல்லது தவரங்களைச் சார்ந்தவை என்று வெள்ளியை நீக்கி மற்றவற்றைக் கூறலாம்.
மண்ணுக்குள்ளா அல்லது மேலா என்ற வகையில் நெல் தனித்திருப்பது என்கிறார்கள்.
என்னுடைய விளக்கம் இதோ:
தனித்த சொல் மரவள்ளி. மற்றவை பற்றி: வெள்ளி (சுக்கிரன் என்றும் அழைக்கப்படும்) நவகிரகங்களில் ஒன்று.
நீலம் (sapphire), நவரத்தினங்களில் ஒன்று. நெல் நவதானியங்களில் ஒன்றாகவும், கருணை நவரசங்களில் ஒரு ரசம் என்றும் ஒன்பது ஒன்பதாக வகைப்படுத்தப்படுபவையில் ஒன்றாக உள்ளன.
மீண்டும் அடுத்த சனிக்கிழமை வேறொரு திரிவெடியில் பார்க்கலாம். புதிதாக வந்துள்ளவர்கள் இன்று உதிரிவெடியையும், க்ரிப்டான் என்ற ஆங்கிலப் புதிரையும் எட்டிப் பாருங்கள். மேலே மூன்றுபட்டையை அழுத்தி பழைய புதிர்களைப் பாருங்கள், ஆனால் விடைகளை ஏற்க முடியாது (விடைகள் வெளியாகிவிட்டதால்).
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
ஒருகிழங்காம் என்றே உரைப்போர்-கருணை
அதுபோல் குறிக்கும் கருணைக் கிழங்கையென்றே
எதனால் மறந்தனர் இங்கு.
விக்கிபீடியா சொல்வது
Neelam is India's premium basmati rice and has become an international favorite.
Neelam Basmati Rice is well-known for its fragrance and length of grains, and
purity is ensured in each grain.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Silver Basmati Rice is a high-quality variety of Basmati rice known for its long grains, delicate aroma, and excellent cooking characteristics. It is often chosen for its purity and superior quality.
--------------------------------------------------------------------------------------------------
கருப்பு கவுனி அரிசி, கருணை அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
இது, ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது, நார்ச்சத்து நிறைந்தது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
பொருளாம் பிறவென்றே போட்ட - ஒருகருத்தைக்
கண்டு கருணைக் கிழங்கும் பொருளெனக்
கொண்டிடச் சொல்லுவதென் கூற்று.
தான்பதில் கேட்டதால் சொல்கிறேன் -- நானிதை
அச்சொல் பொருளென்றால் ஆகும் பொருளென
இச்சொல் கருணையும் இங்கு.
எதுவும் தவறில்லை ஆனால் -புதிரின்
விடையில் தெளிவுதான் முக்கியம் என்பேன்
உடன்படும் மாந்தர் உளர்