Skip to main content

திரிவெடி 49 விடை

 


நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற   பெயர்கள்:

சாவித்திரிபாய் புலே,  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பெங்களூர் நாகரத்தினம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம் 
 

இதில் தில்லையாடி வள்ளியம்மை நீங்கலாக மற்ற நால்வரும் பெண்ணுரிமைக்குப் போராடியவர்கள். மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்குப் போராடினார்கள். பெங்களூர் நாகரத்தினம்மாள் பெண்கள் பாடுவதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை எதிர்த்துப் போராடினார். சாவித்திரிபாய், பெண்கள், தலித்கள் கல்வி கற்று முன்னேற வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் கோட், சூட் அணிந்த மோகன்தாஸ் காந்தியுடன் இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான சட்டங்களை எதிர்க்கும் போராட்டத்தில் கலந்து சிறை சென்றவர். அவர் தென்னாப்பிரிக்காவிலேயெ பிறந்து வளர்ந்து பதினாறாம் வயதிலேயெ அங்கே இறந்துபோனவர். மற்றவர்கள் எல்லோரும் இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்தவர்கள்.

விடையளித்தோர்  பட்டியலை இங்கே காணலாம்.  

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.