Skip to main content

விடை 3219


இன்று (15/02/2018) காலை வெளியான  வெடி:
புலன், குறையில்லாதது, வலி அதிகரிக்காமல்  மிதக்கும் (4)
இதற்கான விடை:   முழுகாது =  "முழுக்காது ",  குறைவில்லாத பொறியான காது. வலிமிகும் இடத்தில்  'க்' நீக்கப்பட்டுள்ளது.

 (சோற்றில் பூசணிக்காயை மறைக்கும்போது 'ப்' சேர்த்து முழுப் பூசணிக்காயாக மறைப்பது போல்தான் . . . முழுக்கதையைக் கேட்டு . . .  முழுத்தொகையையும் முன்பே கட்டி ... இங்கெல்லாம் வலிமிகுவது  ஆனால் புதிருக்கு மிகாமல் வந்திருக்கிறது).)

Comments

Ambika said…
வலிக்காமல் சரியான‌ விடை அளித்தவர்கள் (22):

1) 6:04:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
2) 6:05:27 சித்தன்
3) 6:05:49 முத்துசுப்ரமண்யம்
4) 6:33:51 லக்ஷ்மி ஷங்கர்
5) 7:11:47 ஆர்.லதா
6) 7:12:19 எஸ்.பார்த்தசாரதி
7) 7:12:47 அம்பிகா
8) 7:23:24 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
9) 7:34:41 சந்திரசேகரன்
10) 7:48:28 கி.பாலசுப்ரமணியன்
11) 7:59:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12) 8:13:56 எஸ் பி சுரேஷ்
13) 8:47:02 மீனாக்ஷி கணபதி
14) 10:56:15 மீனாக்ஷி
15) 12:27:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 12:45:28 ரமணி பாலகிருஷ்ணன்
17) 13:13:23 சுபா ஸ்ரீநிவாசன்
18) 16:11:04 மரு. ப. சந்திரமொளலி
19) 16:29:16 சாந்திநாராயணன்
20) 17:09:52 SOUDHAMINI
21) 18:17:08 ஆர்.நாராயணன்.
22) 20:05:20 மைத்ரேயி சிவகுமார்

************************
Chittanandam said…
புதிர் மூளையை சரியானபடி கசக்கிவிட்டது. மூழ்காது வரை வந்துவிட்டேன். அதற்கப்பால் செல்ல வழி புலப்படவில்லை. மதியம்தான் முழு என்கிற சொல் கிடைத்தது. அதன் பின் உடனே விடையைப் பிடித்தேன். கற்பனை வளம் மிக்க புதிர். பாராட்டுகள்.
Ramiah said…
ஐம்புலன்கள் எவை? பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் ஐம்பொறிகள் எவை? கண், காது, வாய், மூக்கு, மெய் இவ்வாறு எண்ணி மாலை வரை குழம்பிவிட்டேன். புலன் என்றாலும் பொறி என்றாலும் ஒன்றுதான் என்று யோசித்தபின்னரே, மாலை 6.18 மணிக்குத்தான் விடை கிடைத்து.
போறிகள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி

புலன்கள்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
Suba srinivasan said…
.ஐம்புலன்கள் எவை? பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் ஐம்பொறிகள் எவை? கண், காது, வாய், மூக்கு, மெய் இவ்வாறு எண்ணி மாலை வரை குழம்பிவிட்டேன்.

எனக்கும் அதே நிலைமை.

ஆனால் புலன் Is sense. பொறி Is sense organ.

How can புலன் Be காது?

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்