Skip to main content

விடை 3219


இன்று (15/02/2018) காலை வெளியான  வெடி:
புலன், குறையில்லாதது, வலி அதிகரிக்காமல்  மிதக்கும் (4)
இதற்கான விடை:   முழுகாது =  "முழுக்காது ",  குறைவில்லாத பொறியான காது. வலிமிகும் இடத்தில்  'க்' நீக்கப்பட்டுள்ளது.

 (சோற்றில் பூசணிக்காயை மறைக்கும்போது 'ப்' சேர்த்து முழுப் பூசணிக்காயாக மறைப்பது போல்தான் . . . முழுக்கதையைக் கேட்டு . . .  முழுத்தொகையையும் முன்பே கட்டி ... இங்கெல்லாம் வலிமிகுவது  ஆனால் புதிருக்கு மிகாமல் வந்திருக்கிறது).)

Comments

Ambika said…
வலிக்காமல் சரியான‌ விடை அளித்தவர்கள் (22):

1) 6:04:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
2) 6:05:27 சித்தன்
3) 6:05:49 முத்துசுப்ரமண்யம்
4) 6:33:51 லக்ஷ்மி ஷங்கர்
5) 7:11:47 ஆர்.லதா
6) 7:12:19 எஸ்.பார்த்தசாரதி
7) 7:12:47 அம்பிகா
8) 7:23:24 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
9) 7:34:41 சந்திரசேகரன்
10) 7:48:28 கி.பாலசுப்ரமணியன்
11) 7:59:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12) 8:13:56 எஸ் பி சுரேஷ்
13) 8:47:02 மீனாக்ஷி கணபதி
14) 10:56:15 மீனாக்ஷி
15) 12:27:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 12:45:28 ரமணி பாலகிருஷ்ணன்
17) 13:13:23 சுபா ஸ்ரீநிவாசன்
18) 16:11:04 மரு. ப. சந்திரமொளலி
19) 16:29:16 சாந்திநாராயணன்
20) 17:09:52 SOUDHAMINI
21) 18:17:08 ஆர்.நாராயணன்.
22) 20:05:20 மைத்ரேயி சிவகுமார்

************************
Chittanandam said…
புதிர் மூளையை சரியானபடி கசக்கிவிட்டது. மூழ்காது வரை வந்துவிட்டேன். அதற்கப்பால் செல்ல வழி புலப்படவில்லை. மதியம்தான் முழு என்கிற சொல் கிடைத்தது. அதன் பின் உடனே விடையைப் பிடித்தேன். கற்பனை வளம் மிக்க புதிர். பாராட்டுகள்.
Ramiah said…
ஐம்புலன்கள் எவை? பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் ஐம்பொறிகள் எவை? கண், காது, வாய், மூக்கு, மெய் இவ்வாறு எண்ணி மாலை வரை குழம்பிவிட்டேன். புலன் என்றாலும் பொறி என்றாலும் ஒன்றுதான் என்று யோசித்தபின்னரே, மாலை 6.18 மணிக்குத்தான் விடை கிடைத்து.
போறிகள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி

புலன்கள்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
Suba srinivasan said…
.ஐம்புலன்கள் எவை? பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் ஐம்பொறிகள் எவை? கண், காது, வாய், மூக்கு, மெய் இவ்வாறு எண்ணி மாலை வரை குழம்பிவிட்டேன்.

எனக்கும் அதே நிலைமை.

ஆனால் புலன் Is sense. பொறி Is sense organ.

How can புலன் Be காது?

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.