Skip to main content

****உதிரிவெடி 3593 (மாற்று)*******

உதிரிவெடி 3593 (பிப்ரவரி 25, 2019)
வாஞ்சிநாதன்
**********************

தென்றலைத் தந்தவனைப் பற்றிய விவரிப்பு ? (4)

  "வருணனை" என்று என்ற விடை மேலே கொடுக்கப்பட்ட புதிருக்குப் பொருத்தமாகும் என்று நினைத்திருந்தேன். அது சரியில்லை. வாயு பகவான் வேறு வருண பகவான் வேறு என்று  சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

இருந்தாலும் பலர் நான் எண்ணிய விடையை அளித்திருக்கின்றனர்.

இதைப் பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியாமலே இப்புதிரை ஆக்கியதால் இப்புதிர் சரியா தப்பா என்ற ஆட்டத்திற்குப் போகாமல்
இப்புதிரை மறந்து விட்டு  கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப் புதிரை முயலுமாறு வேண்டுகிறேன். (நாளை காலை வழக்கம்போல் புதிய புதிர் உண்டு).

இழப்பால் அழு இறுதியில் இழந்தால் பக்கம் (3)




Comments

Muthu said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...