Skip to main content

விடை 3551

இன்று வெளியான புதிர்:
இனிய மரம் கரம்  பற்றிட விறகு  காற்றுக்களிப்பது  (5)
இதற்கான விடை: கரும்புகை = கரும்பு (இனிய 'மரம்'!) + கை

சென்ற வருடம் இதே சமயம் வந்த  உதிரிவெடி 3185



விடையளித்தவர்களின் பட்டியல் இங்கே:

Comments

கரும்பு ஒரு மரம் என்பது இந்த மர மண்டைக்கு ஏனோ தோன்றவே இல்லை!! கரும்பாலேயே தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்!
"Trees are plants with a single main trunk having several branches bearing leaves and other parts. Sugercanes are tall perennial grasses.They belong to monocotyledons (including grasses and mostly herbs) and hence do not show a tree habit. So we can conclude that sugercane is a plant and is definitely not a tree."

An idiotic interpretation from Google search!
Vanchinathan said…
நன்றி கனகசபாபதி அவர்களே! ஒற்றை விதையிலைத் தாவரமான கரும்பு மரமாக இருக்கமுடியாது என்ற அறிவியல் உண்மையைச் சுட்டிக் காட்டிவிட்டீர்கள். கரும்பு இரண்டுங்கெட்டான் வகையில் இருப்பதால் எதைச் சொன்னாலும் குறையாக இருக்கும்/சரியென்று வாதிடலாம். இந்த திரிசங்கு நிலையே புதிராசிரியர்களுக்கு வரம்/வசதி (Regard a bug as a feature as they say in software industry). அதனால் ஒருநாள் கரும்பை மரம் என்று சொல்லியும் இன்னொரு நாள் புல் என்ற பொருளிலும் பயன்படுத்தி புதிராக்கிப் புல்லையும் ஆயுதமாக்கும் வல்ல புதிராசிரியனாவேன்.

அறிவியல் உண்மையும் பொதுவான புரிதலும் சில சமயம் மாறுபடுவது ண்டு. விகிபீடியாவில் வாழையைப் பற்றிப் படித்துவிட்டு "வாழை மரம்" என்று கூறிய தமிழர்களை மூடர்கள் என்று கூறமுடியாது. சந்திரன் கோளில்லை என்பதும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அறிவுயல் உண்மைகள். ஆனாலும் பொதுவான புரிதிலைல் நட்சத்திரம் என்பது சூரியன் மறைந்த பின் இருட்டில் பொடிப்பொடியாயக் கண் சிமிட்டும் வஸ்து.
Vanchinathan said…
Excerpt from https://en.wikipedia.org/wiki/Banana :
The banana plant is the largest herbaceous flowering plant.[7] All the above-ground parts of a banana plant grow from a structure usually called a "corm".[8] Plants are normally tall and fairly sturdy, and are often mistaken for trees
A titbit:
மரக்கறி என்பது மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகிய தாவரங்கள் தரும் காய், பழம், இலை அதாவது கீரை, கிழங்கு, மலர், கொட்டை, விதை, தானியங்கள், சாறு ஆகியனவும் மற்றும் இவைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுமாகும்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.