Skip to main content

திரிவெடி 31 விடைகள்

 


 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

மாமரம், பலாமரம், வாழைமரம், தென்னை மரம், பனைமரம்

அதற்கான விடை:  வாழைமரம் மற்றவற்றுடன் சேராதது. மற்ற நான்கும்
ஆண்டுதோறும் பலனளிப்பவை. வாழை ஒரு முறைதான் குலைதள்ளும்.

இது நான் எண்ணிய விடை, ஆனாலும் இம்முறை திரிவெடிக்கு வேறு  விடைகள் வந்துள்ளன. ஆர் பத்மா, வாழையின் தண்டுப்பகுதியும் உணவாகும் மற்ற‌வற்றில் அப்படி கிடையாது என்கிறார்.  இது முழுதும் ஏற்றுக் கொள்ளத்தக்க விடை.

வி. ஆர். பாலகிருஷ்ணன் பலா மட்டும் தனித்துக் காய்க்கும் மற்றவை குலைகளாகக் காய்க்கும் என்கிறார். 

 
மற்ற மரங்களெல்லாம் உச்சியில் காய்க்க, பலா மட்டும் வேரருகிலும் காய்க்கும் என்று முத்துசும்ரம்ணியம் கூறும் காரணமும் பொருத்தமானதே.மாமரத்தில் காய்களைக் குலையாகக் காண்கிறோமா? சந்தேகமாக இருக்கிறது.


ஜோசப் அமிர்தராஜ், அருள் இருவரும் வாழையை மரம் என்ற கணக்கில் சேர்க்கமுடியாது, தாவரம்தான் என்கிறார்கள். அதன் மூலம் வாழை தடித்து உறுதியாக வளர்வதில்லை என்று புரிந்துகொள்கிறேன். பச்சையாகவே அது நின்றுவிடுகிறது, அதன் விளைவாக அது விறகாகப் பயன்படாது என்று
சொல்ல வருகிறார்களோ?

அம்பிகா பல விடைகளை அளித்துள்ளார். அதில் மாங்காய் மட்டும் புளிப்புச் சுவை கொண்டது மற்ற மரங்களின் காய்களில் புளிப்பு இல்லை என்பது, பனைமரத்தின் காய்கள் மட்டும் சமையலுக்குப் பயன்படுவதில்லை என்பது, தென்னை மரத்தின் காயிலிருந்து எண்ணெய் பெறப்படும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடைகள்.


பலவிதமான கோணங்களில் யோசித்து பல புதிய தகவல்களை தங்கள் விடைகள் மூலம் அளித்த  அனைவருக்கும் நன்றி.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…
This comment has been removed by the author.
GUNA said…
தென்னை மரமொன்று தானெண்ணெய் தந்திடும்
என்னும் கருத்தினை ஏற்கமாட்டேன் -நன்றாய்ப்
பனைமரமும் எண்ணெய், பரிந்தளிக்கும் என்றே
நினைவுகொள்ள வேண்டுகிறேன் நான்
2024 M11 4 09:49

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.