Skip to main content

திரிவெடி 34 விடைகள்


 நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

வேழம், அணி, புலி, புரவி, சாவு

 இதில் தனியானது:   புலி

நான்கு சொற்களுக்கு அதே பொருளில் எதுகையாக அமைந்த சொற்கள் உள்ளன.

வேழம் = கரி
அணி = தரி
புரவி = பரி
சாவு = மரி

 
அணி மட்டும் வினைச் சொல் என்பது சரியாகாது. சாவு,  வினைச் சொல்லாகவும் பயன்படும்.
(ஏவு, தாவு போல். "எங்கேயாவது ஆத்துல கொளத்தில விழுந்து சாவு" என்று கோபத்தில் திட்டுவதைக் கேட்டதில்லையா?)

எதுகையென்று சொன்னால் போதுமா? ஒரு செய்யுள் எழுதிப் பார்க்கலாமா?
 புலி என்பது வரி என்று கொள்ள‌ முடியாது. இருந்தாலும் வரியையும் சேர்த்துக் கொண்டு ஒரு நேரிசை வெண்பா:

பரிமே  லமர்ந்து பகைவர் பலரும்
மரிந்திட வென்றநம் மன்னன் தரித்த‌
வரிப்புலித்  தோலுடை  வண்ணமது ஈர்க்க
கரிகளும் ஆடும் களித்து.


ஜோச‌ப் அமிர்தராஜ் கூறும் இன்னொரு செய்தி: கரி, பரி, தரி, மரி  சங்கீத ஸ்வரங்களைக் குறிக்கும் எழுத்துக்களால் ஆனவை. சரி!

ராம்கி கிருஷ்ணன், முதல் நான்கு சொற்களுக்கும் தலையெழுத்துகளை "ப" என்று மாற்றினால், பழம், பணி, பலி, பரவி, என்று பொருளுடைய சொற்கள் கிடைக்கும், ஆனால் சாவை மாற்ற முடியாது என்கிறார்.  தலையெழுத்தை மாற்றினால் சாவு மாறாது என்பது சரியா என்று பிரம்மாவிடமும் எமனிடமும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.


 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

 

Comments

GUNA said…
சரியாகா தென்ற தகவலைக் கண்டேன்
சரியாகா தே,அத் தகவல் - சரியாகச்
சொல்கிறதே சாவென்னும் சொல்பெயர்ச்சொல் மட்டுமென்று
நல்ல அகராதி நூல்.
-----------------------------------------------------------------------
சாவு , பேச்சு வழக்கில் மட்டுமே வினைச்சொல்லாகப் பயன்படுகிறது
---------------------------------------------------------------------------------------------------------------


சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
Word : சாவு
Word
English & Tamil Meaning
பொருள்
சாவு cāvu,
n. <id. [T. tcāvu, K. Tu. sāvu, M. cāvu.]
1. Death
மரணம். (பிங்.)
2. (Astrol.) The eighth house, as the house of death;
பிறந்த இலக்கினத்துக்கு எட்டாமிடமாகிய மாரகஸ்தானம். (விதான. மரபி. 4.)

3. Ghost;
பேய். சாவா யகன்று தாவினன் (ஞானா. 33, 10).

Vanchinathan said…
தெரியாத சொற்கள், பரிச்சயம் அதிகமில்லாத சொற்கள், பழைய இலக்கிய நூல்களில் மட்டுமே பெரும்பாலும் இருக்கும் சொற்கள் இவற்றுக்கெல்லாம் பொருள் அறிந்து கொள்ள இந்த அகராதிகளைப் பயன்படுத்துவது என் வழக்கம். நீங்கள் குறிப்பிடும் அகராதி சிலவிதமான ஆராய்ச்சி நோக்கில் வடிக்கப்பட்டதால் இதுபோல் பொதுவான பரவலான விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.