Skip to main content

திரிவெடி 34 விடைகள்


 நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

வேழம், அணி, புலி, புரவி, சாவு

 இதில் தனியானது:   புலி

நான்கு சொற்களுக்கு அதே பொருளில் எதுகையாக அமைந்த சொற்கள் உள்ளன.

வேழம் = கரி
அணி = தரி
புரவி = பரி
சாவு = மரி

 
அணி மட்டும் வினைச் சொல் என்பது சரியாகாது. சாவு,  வினைச் சொல்லாகவும் பயன்படும்.
(ஏவு, தாவு போல். "எங்கேயாவது ஆத்துல கொளத்தில விழுந்து சாவு" என்று கோபத்தில் திட்டுவதைக் கேட்டதில்லையா?)

எதுகையென்று சொன்னால் போதுமா? ஒரு செய்யுள் எழுதிப் பார்க்கலாமா?
 புலி என்பது வரி என்று கொள்ள‌ முடியாது. இருந்தாலும் வரியையும் சேர்த்துக் கொண்டு ஒரு நேரிசை வெண்பா:

பரிமே  லமர்ந்து பகைவர் பலரும்
மரிந்திட வென்றநம் மன்னன் தரித்த‌
வரிப்புலித்  தோலுடை  வண்ணமது ஈர்க்க
கரிகளும் ஆடும் களித்து.


ஜோச‌ப் அமிர்தராஜ் கூறும் இன்னொரு செய்தி: கரி, பரி, தரி, மரி  சங்கீத ஸ்வரங்களைக் குறிக்கும் எழுத்துக்களால் ஆனவை. சரி!

ராம்கி கிருஷ்ணன், முதல் நான்கு சொற்களுக்கும் தலையெழுத்துகளை "ப" என்று மாற்றினால், பழம், பணி, பலி, பரவி, என்று பொருளுடைய சொற்கள் கிடைக்கும், ஆனால் சாவை மாற்ற முடியாது என்கிறார்.  தலையெழுத்தை மாற்றினால் சாவு மாறாது என்பது சரியா என்று பிரம்மாவிடமும் எமனிடமும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.


 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

 

Comments

GUNA said…
சரியாகா தென்ற தகவலைக் கண்டேன்
சரியாகா தே,அத் தகவல் - சரியாகச்
சொல்கிறதே சாவென்னும் சொல்பெயர்ச்சொல் மட்டுமென்று
நல்ல அகராதி நூல்.
-----------------------------------------------------------------------
சாவு , பேச்சு வழக்கில் மட்டுமே வினைச்சொல்லாகப் பயன்படுகிறது
---------------------------------------------------------------------------------------------------------------


சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
Word : சாவு
Word
English & Tamil Meaning
பொருள்
சாவு cāvu,
n. <id. [T. tcāvu, K. Tu. sāvu, M. cāvu.]
1. Death
மரணம். (பிங்.)
2. (Astrol.) The eighth house, as the house of death;
பிறந்த இலக்கினத்துக்கு எட்டாமிடமாகிய மாரகஸ்தானம். (விதான. மரபி. 4.)

3. Ghost;
பேய். சாவா யகன்று தாவினன் (ஞானா. 33, 10).

Vanchinathan said…
தெரியாத சொற்கள், பரிச்சயம் அதிகமில்லாத சொற்கள், பழைய இலக்கிய நூல்களில் மட்டுமே பெரும்பாலும் இருக்கும் சொற்கள் இவற்றுக்கெல்லாம் பொருள் அறிந்து கொள்ள இந்த அகராதிகளைப் பயன்படுத்துவது என் வழக்கம். நீங்கள் குறிப்பிடும் அகராதி சிலவிதமான ஆராய்ச்சி நோக்கில் வடிக்கப்பட்டதால் இதுபோல் பொதுவான பரவலான விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.