Skip to main content

திரிவெடி 39 விடை

 

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

 

குறவர், கறி, அறம், உறி, எருக்கு  

அதற்கான விடை:  எருக்கு, மற்றவற்றுடன் சேராத சொல்.  


மற்ற சொற்களில் றகரம்/ரகரம் மாற்றப்படும்போது பொருள் தரும் சொற்கள் கிடைக்கும்.

குறவர்: ‍ குரவர்
 கறி: கரி
 அறம்: அரம்
 உறி:  உரி

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…
கொடுத்த விளக்கம் கொடுத்தது கோபம்
எடுத்த குறவர் எனும்சொல் - கொடுக்கும்
எழுத்துக்கள் நான்கில் இறுதியில் உள்ள
எழுத்தினை மாற்றவில்லை ஏன் ?

தந்த விளக்கம் தனையேற்றால் மாற்றத்தை
அந்த எழுத்துக்கும் அல்லவோ  - தந்திட
வேண்டும்  எனும்என்  வினாவுக்குக்  கூறிட
வேணடும்  பொருந்தும்  விடை

மாற்றம் புரிந்தால் வரும்சொல் குரவற்தான்
ஏற்றிடார் யாருமே  அச்சொல்லை -ஏற்றமிகு
இப்பகுதி கொள்ளவேண்டும் இன்னும் சிறப்பென்றே
செப்பினேன் , சிந்திப்பீர் சற்று